இந்திய மருந்துகளை குடித்த 18 குழந்தைகள் உயிரிழப்பு – உஸ்பெகிஸ்தான் அதிர்ச்சித் தகவல்!

உஸ்பெகிஸ்தான் (28 டிச 2022): இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மருந்தை குடித்த 18 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக உஸ்பெகிஸ்தான் தெரிவித்துள்ளது.

இந்திய மருந்து நிறுவனம் தயாரித்த மருந்துகளை குடித்து 18 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக உஸ்பெகிஸ்தான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காம்பியாவில் குழந்தைகள் இறந்த சில மாதங்களுக்குப் பிறகு உஸ்பெகிஸ்தானில் இருந்து இதே போன்ற அறிக்கை வந்துள்ளது.

நொய்டாவைச் சேர்ந்த நிறுவனம் தயாரித்த டாக்-1 மேக்ஸ் சிரப்பைக் குடித்த 21 குழந்தைகளில் 18 பேர் உயிரிழந்ததாக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழந்தைகள் அனைவருக்கும் நுரையீரல் நோய் இருந்தது.

இறந்த அனைத்து குழந்தைகளும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு 2 முதல் 7 நாட்களுக்கு வீட்டில் தினமும் 3 முதல் 4 முறை இந்த மருந்தை குடித்துள்ளனர்.

ஹாட் நியூஸ்:

புதிய நாடாளுமன்றம் திறப்பு – ஒன்றிய அரசு மீது ராகுல் காந்தி காட்டம்!

புதுடெல்லி (25 மே 2023): புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை ஜனாதிபதி முர்முவைக் கொண்டு திறக்காமல், பிரதமர் மோடியைக் கொண்டு திறப்பதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். புதிய நாடாளுமன்றக்...

அபுதாபியில் திறக்கப்பட்டுள்ள புதிய தீம் பார்க் !

அபுதாபி (25 மே 2023): அபுதாபியில் புதிய தீம் பார்க் 'சீ வேல்ட் அபுதாபி' நேற்று முன் தினம் திறக்கப்பட்டது. பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தும் மிகப்பெரிய தீம் பார்க் நேற்று முன் தினம் தொடங்கப்பட்டது...

உயிர் நண்பனின் இறுதிச் சடங்கில் தீயில் குதித்து நண்பர் தற்கொலை!

லக்னோ(28 மே 2023): புற்றுநோயால் உயிரிழந்த தனது நண்பரின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட 40 வயதுடைய நபர் ஒருவர் தீயில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் ஃபிரோசாபாத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது....