உலக தலைவர்களை அச்சுறுத்தும் கொரோனா – பிரிட்டிஷ் பிரதமர் மருத்துவமனையில் அனுமதி!

Share this News:

லண்டன் (06 ஏப் 2020): கொரோனா பாதித்த பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்ஸன் உடல் நிலையில் முன்னேற்றம் இல்லாததால் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

சீனாவில் உருவான கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் சுமார் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. அந்த வைரஸால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கடும் பாதிப்பை சந்தித்து வருகிறது.

இந்நிலையில் உலகத் தலைவா்களில் முதல் முறையாக பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்ஸனுக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது அண்மையில் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொள்வதாகவும், காணொளி மூலம் அரசு பணிகளை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார். இந்த நிலையில் அவர் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

10 நாட்களுக்கு பின்னர் மீண்டும் அவருக்கு நோயின் அறிகுறி தென்பட்டதால் போரிஸ் ஜான்ஸன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்தவரின் ஆலோசனைப்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் பிரிட்டன் சுகாதாரத்துறை அமைச்சர் மேட் ஹேன்காக்கிற்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply