முதல்வர் எடப்பாடியின் தாயார் மரணம்!

Share this News:

சேலம் (13 அக் 2020): முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தாயார் தவசாயி அம்மாள் (93) உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்

தவசாயி அம்மாள் கடந்த வெள்ளிக்கிழமையன்று முதுகு தண்டுவடம் பாதிப்பு காரணமாக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று காலை அதிகாலை 1.30 மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி காலமானார்.

இதனையடுத்து அவரது உடல் சேலம் மாவட்டம் சிலுவம்பாளையம் கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. தாயாரின் மறைவு செய்தியறிந்து முதலமைச்சர் பழனிசாமி நேற்றிரவே புறப்பட்டு கார் மூலம் சிலுவம்பாளையம் கிராமத்திற்கு வந்து சேர்ந்தார். பின்னர் தனது தாயாரின் உடலுக்கு அவர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.

தவசாயி அம்மாள் உடலுக்கு கிராம மக்கள் பலர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். மேலும் அரசியல் கட்சியினர், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து முதலமைச்சர் தாயாரின் இறுதிச் சடங்குகள் இன்று காலை 9.30 மணியளவில் சிலுவம்பாளையத்தில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share this News:

Leave a Reply