தயவு செய்து உதவுங்கள் – சீனாவிலிருந்து வரும் அதிர்ச்சி தகவல்!

Share this News:

பீஜிங் (27 ஜன 2020): “சீனாவில் 90 ஆயிரம் பேர் கரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளனர்; எங்களுக்காக உதவுங்கள்!” என்று செவிலியர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு ஒன்று சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை 1,970 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், 80 பேர் உயிரிழந்து உள்ளதாகவும் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப் பட்டுள்ளது. இந்த நிலையில், வுஹானில் கரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளவர்களுக்கு சிகிச்சை அளித்து வரும் செவிலியர், சீனாவில் ஏற்கனவே 90,000 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளனர்.

முகமூடி அணிந்தபடி, பெயர் வெளியிட விரும்பாத சீன பெண் செவிலியர்  இவ்வாறு பேசியுள்ளார்:

“நான் கரோனா வைரஸ் தொடங்கிய வுஹான் பகுதியில் இருந்து தற்போது பேசுகிறேன். உண்மையைச் சொல்ல நான் இங்கு வந்துள்ளேன். இந்த நேரத்தில், வுஹான் பகுதி, ஹுபே மாகாணம் உட்பட சீனா முழுவதும் 90,000 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தற்போது இந்த வீடியோவை பார்த்துக் கொண்டிருக்கும் அனைவரும் வெளியே செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். விருந்துகளில் பங்கேற்பது அல்லது விடுதிகளில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டுகிறேன்.

வருடத்திற்கு ஒரு முறை, சீனப் புத்தாண்டைக் கொண்டாடுகிறோம். இருப்பினும் புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் பங்கேற்பதை தவிர்த்திடுங்கள். நீங்கள் இப்போது பாதுகாப்பாக இருந்தால்தான், அடுத்த ஆண்டு உங்கள் குடும்பத்துடன் மீண்டும் ஆரோக்கியமாக புத்தாண்டு கொண்டாட முடியும்.

கரோனா குறித்து அரசாங்கம் கூறுவது குறித்து எனக்கு கவலையில்லை. நான் உங்களுக்கு சமூக ஊடகங்கள் மூலம் கூற விரும்புவது, எல்லோரும் தயவுசெய்து ஒருமுறைப் பயன்படுத்தக் கூடிய முகமூடிகள், கண்ணாடிகள் மற்றும் துணிகளை வுஹானுக்கு நன்கொடையாக வழங்கி எங்களுக்கு உதவுங்கள். தற்போது இங்குள்ள பொருள்கள் போதாது!”

இவ்வாறு அந்த செவிலியர் கோரிக்கை விடுத்துள்ளார்.


Share this News:

Leave a Reply