பாரீஸ் (17 அக் 2020): பிரான்சில் வகுப்பறையில் பாடம் நடத்திக்கொன்றுந்த்த ஆசிரியரின் தலையை மர்ம நபர் ஒருவர் துண்டித்துள்ளார்.
பிரான்சில் வகுப்பில் பாடம் நடத்திக்கொண்டிருந்த ஆசிரியர் தலை துண்டிக்கப்பட்ட சம்பவத்திற்கு அந்நாட்டு அதிபர் மக்ரோன் லெபனான் கண்டனம் தெரிவித்துள்ளார
பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் அருகில் உள்ள பள்ளியில் வரலாற்று ஆசிரியர் ஒருவர் முகமது நபியின் கேலிசித்திரங்கள் குறித்து பாடம் எடுத்துக்கொண்டிருந்தார். அப்போது திடீரென துப்பாக்கி மற்றும் ஆயுதங்களுடன் வகுப்பு அறையில் புகுந்த மர்மநபர் பாடம் நடத்திக்கொண்டிருந்த ஆசிரியரின் தலையை துண்டித்தார். இதனால் மாணவ-மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மர்மநபரை சுட்டுக்கொன்றனர்.
இந்த தாக்குதல் குறித்து அந்நாட்டு அதிபர் மக்ரோன் லெபனான், இது ஒரு பயங்கரவாத தாக்குதல் என கண்டனம் தெரிவித்தார்.
மேலும் பயங்கரவாத்திற்கு எதிராக ஒட்டு மொத்த மக்களும் துணை நிற்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.