பொது சுகாதாரத்திற்காக முதலீட்டை அதிகரிக்க உலக சுகாதார அமைப்பு உலக நாடுகளுக்கு வலியுறுத்தல்!

Share this News:

ஜெனீவா(28 டிச 2020): பொது சுகாதாரத்தில் முதலீட்டை அதிகரிக்க உலக சுகாதார அமைப்பு (WHO) இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் ஜெப்ரியாஸ் உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

“எதிர்கால தொற்றுநோய்கள் மற்றும் தொற்றுநோய்களை எதிர்த்துப் போராட முதலீடு அதிகரிக்கப்பட வேண்டும்” என்று டிசம்பர் 27 சர்வதேச தொற்றுநோய் தினத்தில் டெட்ரோஸ் அதானோம் ஜெப்ரியாஸ் தெரிவித்தார்.

மேலும் “இது கடைசி தொற்றுநோயாக இருக்காது என்று வரலாறு நமக்குக் கூறுகிறது, தொற்றுநோய்கள் வாழ்க்கையின் ஒரு அங்கமாகும்” என்று அவர் வலியுறுத்தினார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் “அரசாங்கத்தின் மற்றும் பொதுமக்களின் ஆதரவோடு பொது சுகாதாரத்தில் முதலீட்டை அதிகரிப்பது நமது குழந்தைகளுக்கும் அவர்களின் எதிர்கால தலைமுறையினருக்கும் சிறந்த மற்றும் நிலையான உலகத்தை உறுதி செய்ய முடியும்” என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் கூறினார். “கோவிட் 19, 1.7 மில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கொன்று பொருளாதாரத்தை அழித்துள்ள நிலையில், அதிக சுகாதாரப் பாதுகாப்பு தேவை” என்று அவர் கூறினார்.


Share this News:

Leave a Reply