சென்னை (01 ஜூலை 2020): சாத்தான்குளம் விவகாரத்தில் நடிகர் ரஜினி திடீரென குரல் கொடுத்துள்ளார்.
சாத்தான்குளத்தில் தந்தை மகன் மரணம் நாடெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் பிற மாநில சினிமா நட்சத்திரங்களெல்லாம் குற்றவாளிகளுக்கு சரியான தண்டனை கிடைக்க வேண்டும் என்று குரல்கொடுத்து வருகின்றனர்.
ஆனால் நடிகர் ரஜினி வாய்திறக்காமல் இருந்தார். இந்நிலையில் இன்று அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு பரபரப்பை கிளப்பியுள்ளது.
தந்தை, மகன் சித்ரவதை செய்து கொல்லப்பட்ட விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தண்டனை கிடைத்தே ஆக வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார். தந்தை, மகனை கொன்றவர்களை விடக்கூடாது, சத்தியமா விடவே கூடாது என நடிகர் ரஜினிகாந்த் ஆவேசமாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
#சத்தியமா_விடவே_கூடாது pic.twitter.com/MLwTKg1x4a
— Rajinikanth (@rajinikanth) July 1, 2020
இது ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.