முதலில் நெகட்டிவ் தற்போது பாஸிட்டிவ் – அமைச்சரை தாக்கிய கொரோனா வைரஸ்!

Share this News:

புதுடெல்லி (17 ஜூன் 2020): டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்தியேந்திர ஜெயினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் கடந்த சில வாரங்களாக இந்தியாவில் உச்சத்தில் இருந்து வருகிறது. தினந்தோறும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்தைத் விட அதிகரித்துள்ளதாகவும்

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை மூன்றரை லட்சத்தை நெருங்கி விட்டது. அது மட்டுமின்றி இந்தியாவில் கொரோனாவால் சுமார் 10,000 பேர் வரை பலியாகி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் சாதாரண பொதுமக்களை மட்டுமின்றி பிரபலங்களையும் விட்டுவைக்காமல் தாக்கி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்தியேந்திர ஜெயினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அமைச்சருக்கு காய்ச்சல் தீவிரமாக இருந்த நிலையில் அவர் இரண்டாவது முறையாக கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். இதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

முன்னதாக அவர் சோதனை செய்தபோது முடிவு நெகடிவாக வந்தது இதன்பின்னர், அவருக்கு கொரோனா பாதித்ததற்கான அறிகுறிகள் அதிகம் இருந்தன. இதையடுத்து அவர் பரிசோதனை செய்து கொண்டார் தற்போது பாஸிட்டிவ் என ரிப்போர்ட் வந்துள்ளது.

இதேபோன்று ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரான அதிஷிக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. நேற்று முன்தினம் இரவு காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் காரணமாக சத்யேந்திர ஜெய்ன் டெல்லி ராஜிவ் காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஞாயிறன்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் சத்யேந்திர ஜெய்னும் பங்கேற்றிருந்தார்.

தமிழகத்தில் திமுக எம்எல்ஏ ஜெ அன்பழகன் அவர்கள் கொரோனாவால் பலியாகி உள்ளார் என்பதும் ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Share this News: