கொரோனா எதிரொலி – காய்கறி கடையாக மாறிய நகைக்கடை!

Share this News:

ஜெய்ப்பூர் (02 மே 2020): கொரோனா பரவல் எதிரொலியாக நகைக்கடை வைத்திருந்தவர் அந்த கடையை காய்கறிக் கடையாக மாற்றியுள்ளார்.

உலகை அச்சுறுத்தும் கொரோனா பொதுமக்களை பொருளாதார ரீதியிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், நகைக் கடை வைத்திருந்த சோனி என்பவர். நகைக்கடையை தற்போது காய்கறிக் கடையாக மாற்றி வியாபாரம் செய்து வருகிறார்.

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்,” மக்களுக்கு இப்போதைக்கு அத்தியாவசிய பொருட்களின் தேவையே அதிகரித்துள்ளது. எனவே எனக்கும் பொருளாதார சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால்தான் இந்த முடிவை எடுத்தேன்” என்று தெரிவித்தார்.


Share this News: