தொடரும் அதிர்ச்சி – ரெயில் கழிப்பறையில் புலம்பெயர்ந்த தொழிலாளியின் இறந்த உடல் கண்டெடுப்பு!

ஜஹான்சி (29 மே 2020): உத்திர பிரதேசத்தில் இரயில் கழிப்பறையில் புலம்பெயர்ந்த தொழிலாளரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக அறிவிக்கப்பட்ட திடீர் ஊரடங்கு, புலம் பெயர்ந்த தொழிலாளர்களை பெரிய அளவில் பாதித்தது. நடந்தே பலர் அவரவர்களின் ஊர்களுக்கு சென்றதால் உணவு இல்லாமை, களைப்பு காரணமாக பலர் வழியிலேயே உயிரிழந்தனர். இது நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அவரவர்களின் ஊருக்கு செல்ல சிறப்பு ரெயில்கள் விடப்பட்டன. மும்பையிலிருந்து உத்திர பிரதேசத்திற்கு ரெயிலில் பயணித்த 38 வயதான மோகன் லால் ஷர்மா என்ற புலம் பெயர்ந்த தொழிலாளி கையில் பணம் இல்லாமல் பயணித்துள்ளார். அவரின் இறந்த உடலை ரெயில் கழிப்பறையில் ரெயிலை சுத்தம் செய்யும் ஊழியர்கள் கண்டெடுத்துள்ளனர். அவர் ரெயிலிலேயே இறந்திருக்கக் கூடும் என தெரிகிறது.

ஷர்மா பல நாட்களுக்கு முன்பே இறந்திருக்கக் கூடும் என்று உடலை கண்டு போலீசார் தெரிவித்துள்ளனர். கொரோனா மற்றும் உடற்கூறு பரிசோதனைக்குப் பிறகு உடல் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

இரு தினங்களுக்கு முன்பு பீகார் ரெயில் நிலையத்தில் புலம்பெயர்ந்த ஒரு பெண்ணின் உடல் கிடத்தப்பட்டிருக்க அந்த பெண்ணின் குழந்தை நடந்த சம்பவம் தெரியாமல் தாயை எழுப்பும் நெஞ்சை பிழியும் காட்சி பலரையும் கண்கலங்க வைத்தது குறிப்பிடத்தக்கது.

ஹாட் நியூஸ்:

அபுதாபியில் திறக்கப்பட்டுள்ள புதிய தீம் பார்க் !

அபுதாபி (25 மே 2023): அபுதாபியில் புதிய தீம் பார்க் 'சீ வேல்ட் அபுதாபி' நேற்று முன் தினம் திறக்கப்பட்டது. பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தும் மிகப்பெரிய தீம் பார்க் நேற்று முன் தினம் தொடங்கப்பட்டது...

உயிர் நண்பனின் இறுதிச் சடங்கில் தீயில் குதித்து நண்பர் தற்கொலை!

லக்னோ(28 மே 2023): புற்றுநோயால் உயிரிழந்த தனது நண்பரின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட 40 வயதுடைய நபர் ஒருவர் தீயில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் ஃபிரோசாபாத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது....

புதிய நாடாளுமன்றம் திறப்பு – ஒன்றிய அரசு மீது ராகுல் காந்தி காட்டம்!

புதுடெல்லி (25 மே 2023): புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை ஜனாதிபதி முர்முவைக் கொண்டு திறக்காமல், பிரதமர் மோடியைக் கொண்டு திறப்பதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். புதிய நாடாளுமன்றக்...