சவூதிக்கு பணிபுரிய செல்பவர்களுக்கு இந்திய காவல்துறை கிளியரன்ஸ் அவசியம்!

ஜித்தா (12 ஜூலை 2022): : சவூதி அரேபியாவில் பணிபுரிய விரும்பும் அனைத்து இந்தியர்களும் சவுதி இந்தியாவின் போலீஸ் கிளியரன்ஸ் சான்றிதழை (பிசிசி) சமர்ப்பிக்க வேண்டும். மும்பையில் உள்ள சவுதி அரேபிய துணைத் தூதரகம், எந்தவொரு வேலைவாய்ப்பு விசா ஒப்புதலுக்கும் போலீஸ் கிளியரன்ஸ் சான்றிதழ்களை வழங்குமாறு பயண முகவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த புதிய விதி ஆகஸ்ட் 22-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. கட்டாய பிசிசி விதிமுறை ஏற்கனவே டெல்லியில் உள்ள சவுதி அரேபிய…

மேலும்...

காமென்வெல்த் குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் நிகாத் ஜரீனுக்கு தங்கம்!

பிர்மிங்காம்(08 ஜூலை 2022);: உலக சாம்பியனான நிகத் ஜரீன், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான 50 கிலோ பிரிவுக்கான குத்துசண்டை போட்டியின் இறுதிப் போட்டியில் வென்று தங்கப் பதக்கத்தை வென்றார். 26 வயதான இந்திய வீரர் நிகாத் ஜரீன், 33 வயது அயர்லாந்தின் கார்லி மெக்னாலை 5-0 என்ற கணக்கில் தோற்கடித்து தங்கம் வென்றார். ஆரம்பத்தில் போட்டி கடுமையாக இருந்தது. எனினும் அடுத்தடுத்த சுற்றுகளில் திறமையாக செயல்பட்டு ஜரீன் தங்கம் வென்றார். ஜரீனுக்கு பாராட்டுகள்…

மேலும்...

இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களை கண்டித்து அமெரிக்காவில் ஆர்ப்பாட்டம்!

நியூயார்க் (24 ஜூன் 2022): இந்திய முஸ்லிம்களுக்கு ஆதரவாக அமெரிக்காவில் ஆறு அமைப்புகள் அடங்கிய கூட்டமைப்பு அமைதி போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்தியாவில் முஹம்மது நபிக்கு எதிரான கருத்துக்கள், மற்றும் இந்தியாவில் 200 மில்லியன் முஸ்லிம்கள் துன்புறுத்தப்படுதல், சட்டவிரோத கைதுகள் மற்றும் இந்தியாவில் முஸ்லிம் வீடுகள் சட்டவிரோதமாக இடிப்பு ஆகியவற்றுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆறு அமைப்புகளின் கூட்டமைப்பு அமைதியான போராட்டம் மற்றும் பேரணியை நடத்தவுள்ளதாக்க. இந்திய அமெரிக்க முஸ்லிம் கவுன்சில் (IAMC) தெரிவித்துள்ளது. இதுகுறித்த IAMC…

மேலும்...

ரம்ஜான் பண்டிகையின்போது விசமிகளின் சூழ்ச்சிக்கு பலியாகிவிடாதீர் – முஸ்லிம் அமைப்புகள் கோரிக்கை!

புதுடெல்லி (28 ஏப் 2022): ரம்ஜான் பண்டிகை தினத்தின்போது விசமிகளின் சூழ்ச்சிக்கு பலியாகிவிடாமல் அமைதியான வழியில் பண்டிகையைக் கொண்டாட வேண்டும் என 14 முஸ்லிம் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் தலைவர் ஜமியத் உலமா-இ-ஹிந்த் மற்றும் பிற 14 அமைப்புகளின் கையொப்பமிடப்பட்ட ஒரு திறந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: “ரம்ஜான் பண்டிகை தினத்தன்று எல்லா முஸ்லிம்களும் ஈத்காவுக்குச் செல்லும் போதும், வீடு திரும்பும் போதும் அமைதியை கடைபிடிக்கவும்; உங்களை தூண்டிவிட முயற்சிக்கும்…

மேலும்...

டெல்லி நிஜாமுத்தீன் மர்கஸ் முழுமையாக மீண்டும் திறப்பது குறித்து நீதிமன்றம் உத்தரவு!

புதுடெல்லி (15 மார்ச் 2022): டெல்லி நிஜாமுத்தீன் மர்கஸில் உள்ள மசூதி வளாகம் முழுவதையும் தொழுகைக்காக மீண்டும் திறக்க அனுமதி கோரி சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் விண்ணப்பம் தாக்கல் செய்யுமாறு டெல்லி வக்ஃப் வாரியத்திற்கு டெல்லி உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் (டிடிஎம்ஏ) வழங்கிய சமீபத்திய வழிகாட்டுதல்களைக் கருத்தில் கொண்டு, டெல்லி நிஜாமுத்தீன் மர்கஸை மீண்டும் திறக்க வக்ஃப் வாரியத்தின் மனுவைக் கையாளும் நீதிபதி மனோஜ் குமார் ஓஹ்ரி, உடனடியாக ஹஸ்ரத்…

மேலும்...

ஜெய் மோடிஜி என்று சொல்ல மறுத்த மாணவர்கள் – வைரலாகும் வீடியோ!

புதுடெல்லி (04 மார்ச் 2022): உக்ரைனிலிருந்து இந்தியா வந்த மாணவர்கள் விமானத்தில் ஜெய் மோடிஜி என்று அழைப்பதற்கு மறுப்பு தெரிவித்து அமைதி காத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உக்ரைனில் சிக்கிய இந்திய மாணவர்கள் அண்டைய நாடான ருமேனியாவிற்கு வெளியேறி வருகின்றனர். அங்கிருந்து இந்திய விமானப்படை விமானம் மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இவர்களை ஏற்றி வந்தபோது மாணவர்கள் விமானத்தில் ஏறிய பின், பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் அஜய் பட் கோஷங்களை எழுப்பினார். அவர்…

மேலும்...

ரஷ்யா – உக்ரைன் போரில் இந்திய ஒருவர் மாணவர் படுகாயம்!

புதுடெல்லி (04 மார்ச் 2022): ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே நடந்து வரும் போரில் இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்த சில நாட்களில், உக்ரைன் தலைநகரில் இந்திய மாணவர் ஒருவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ANI இடம் பிரத்தியேகமாகப் பேசிய, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்திற்கான (MoS) இணை அமைச்சர் (MoS) ஜெனரல் VK சிங், இந்தத் தகவலை தெரிவித்துள்ளார். “கியேவில் வசித்து வந்த இந்திய மாணவர் சுடப்பட்டு படுகாயம் அடைந்துள்ளார். இதற்கிடையே எல்லோரும் கியேவை விட்டு…

மேலும்...

உக்ரைனிலிருந்து இந்தியர்களை மீட்க 7 விமானங்கள்!

புதுடெல்லி (28 பிப் 2022): உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க 7 விமானங்களை இந்தியா அனுப்ப திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உக்ரைனில் கீவ், கார்கிவ் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் வசித்த இந்தியர்கள், அண்டை நாடுகளான ருமேனியா, ஹங்கேரி நாடுகளுக்கு சாலை மார்க்கமாக சென்று அடைக்கலமாகி உள்ளனர். அவர்களை தாயகத்திற்கு அழைத்து வருவதற்காக ஏழு விமானங்களை இயக்க இந்திய அரசு முடிவு செய்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி, நான்கு ஏர் இந்தியா விமானங்கள், ஒரு இண்டிகோ விமானம்…

மேலும்...

பாதியிலேயே திரும்பிய இந்தியர்களை மீட்கச்சென்ற விமானம்!

புதுடெல்லி (24 பிப் 2022): உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்கச் சென்ற ஏர் இந்தியா விமானம் ஏஐ- 1947நடுவானில் பாதி வழியிலேயே இந்தியா திரும்பி உள்ளது. ரஷ்ய அதிபர் புதினின் உத்தரவை தொடர்ந்து, தற்போது அந்நாட்டு படைகள், உக்ரைன் தலைநகர் கீவ்-வில் தனது தாக்குதலை தொடங்கி உள்ளது. மேலும் கிழக்கு உக்ரைனையும் தற்போது ரஷ்யா தாக்கி வருவதாக கூறப்படுகிறது. மேலும் உக்ரைனின் முக்கியமான நகரங்களில் ஒன்றான ஒடேசாவில் ரஷிய ராணுவ வீரர்கள் நுழைந்துள்ளனர். உக்ரைன் விமான நிலையங்கள்…

மேலும்...

ஹிஜாப் விவகாரம் – சர்வதேச இஸ்லாமிய கூட்டமைப்புக்கு இந்தியா பதில்!

புதுடெல்லி (16 பிப் 2022): ஹிஜாப் விவகாரத்தில் இந்தியாவுக்கு கண்டனம் தெரிவித்த சர்வதேச இஸ்லாமிய கூட்டமைப்பிற்கு இந்தியா பதிலளித்துள்ளது. இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதித்துள்ளமை மற்றும் முஸ்லிம்கள் மீதான பல்வேறு தாக்குதல்களுக்கு சர்வதேச இஸ்லாமிய கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்திருந்தது. மேலும் இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹரித்வாரில் முஸ்லிம்கள் மீதான இனப்படுகொலைக்கு அழைப்பு விடுத்தது உள்ளிட்ட விவகாரங்களுக்கு சர்வதேச இஸ்லாமிய கூட்டமைப்பு ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியது. இந்நிலையில் இவ்விவகாரத்தில் இந்திய அரசியலமைப்பில்…

மேலும்...