பீஸ்ட் திரைப்படத்திற்கு கத்தாரிலும் தடை!

தோஹா (10 ஏப் 2022): விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள பீஸ்ட் படத்திற்கு குவைத் தடை விதித்துள்ள நிலையில் கத்தார் நாட்டிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள படம் பீஸ்ட். விஜய் இதில் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த திரைப்படம் முஸ்லிம்களை பயங்கரவாதிகள் போல் காட்டுவதால் படத்தை தடை செய்ய குவைத் அரசு முடிவு செய்தது. இந்நிலையில் கத்தாரிலும் இந்த திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே விஷ்ணு விஷாலின் எப்ஐஆர் திரைப்படமும் கத்தார், குவைத், ஐக்கிய அரபு…

மேலும்...

தோஹா சர்வதேச புத்தகத் திருவிழா இன்று தொடக்கம்!

தோஹா (13 ஜன 2022): 31வது தோஹா சர்வதேச புத்தகத் திருவிழா இன்று தொடங்குகிறது. தோஹா கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தில் இந்த புத்தகத் திருவிழா நடைபெறுகிறது, மேலும் கோவிட் பரவலை அடுத்து மைதானத்தின் மொத்த கொள்ளளவில் 30 சதவீதத்தினர் மட்டுமே ஒரே நேரத்தில் நுழைவதற்கு அனுமதிக்கப்படும். தடுப்பூசி போட்டவர்கள் மற்றும் கடந்த ஒரு வருடத்தில் கோவிட் நோயிலிருந்து மீண்டவர்கள் மட்டுமே உள்ளே செல்லலாம். இந்த ஆண்டு, 37 நாடுகளில் இருந்து 430 பதிப்பாளர்கள் மற்றும் 90…

மேலும்...

மானிய விலை பொருட்களை விற்பனை செய்தால் 5 லட்சம் ரியால் அபராதம் மற்றும் சிறைத்தண்டனை!

மானிய விலை பொருட்களை விற்பனை செய்தால் 5 லட்சம் ரியால் அபராதம்! தோஹா (15 டிச 2021): கத்தாரில் மானிய விலை பொருட்களை விற்பனைக்கு உட்படுத்தினால் 5 லட்சம் ரியால் அபராதமும் 1 வருட சிறைத் தண்டனையும் வழங்கப்படும். நேற்று முன் தினம் விரிவான ஆய்வுகளை மேற்கொண்ட பின்னர், மானிய விலை பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும் மானியம் வழங்கப்படும் பொருட்களை ஏற்றுமதி…

மேலும்...

கத்தாரில் கொரோனா தடுப்பூசி பூஸ்டர் டோஸ் கால அளவு மாற்றம்!

தோஹா (16 நவ 2021): கத்தாரில் கோவிட் தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் பெறுவதற்கான தகுதி காலம் குறைக்கப்பட்டுள்ளது. கத்தாரில் கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் எடுத்து எட்டு மாதங்களுக்குப் பிறகு எடுக்க வேண்டும் என்ற நிபந்தனையை சுகாதார அமைச்சகம் மாற்றியுள்ளது. அதன்படி தற்போது இரண்டு டோஸ் எடுத்து ஆறு மாதங்களுக்குப் பிறகு பூஸ்டர் டோஸ் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு தடுப்பூசிகளுக்கும் ஆறு மாதங்களுக்குப் பிறகு நோய் எதிர்ப்பு சக்தி படிப்படியாகக் குறையும் என்ற…

மேலும்...

ஓட்டுநர் இல்லாத மின் பேருந்துகளை இயக்க கத்தார் அரசு திட்டம்!

தோஹா (04 நவ 2021): கத்தார் தெருக்களில் ஓட்டுநர் இல்லாத மின்சார பேருந்துகளை இயக்க போக்குவரத்துத் துறை திட்டமிட்டுள்ளது. போக்குவரத்து அமைப்புகளை சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக மாற்றும் நோக்கத்துடன் முழு தானியங்கி மின்சார மினி பேருந்துகளை அறிமுகப்படுத்த கத்தார் திட்டமிட்டுள்ளது. இதற்கு முன்னதாக முழு தானியங்கி மின்சார பஸ் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. சோதனை வெற்றியடைந்தால், Fifa உலகக் கோப்பையில் பார்வையாளர்களுக்காக இ-மினி பேருந்துகள் அறிமுகப்படுத்தப்படும். சீனாவின் மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமான யுடோங், கத்தாரின் பொது போக்குவரத்து…

மேலும்...

கத்தார் திரைப்பட விழாவில் காரில் இருந்தபடியே சினிமா பார்க்கும் வசதி!

தோஹா (01 நவ 2021): கத்தார் அஜியால் திரைப்பட விழாவில் டிரைவ்-இன் சினிமா வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.. இதற்காக லூசில் சிட்டியில் வாகனங்களில் இருந்தபடியே திரைப்படம் பார்க்க பெரிய திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. கத்தாரில் நவம்பர் 7ஆம் தேதி தொடங்கும் அஜியால் திரைப்பட விழாவின் ஒன்பதாவது பதிப்பில் 44 நாடுகளைச் சேர்ந்த 85 படங்கள் இடம்பெறும். கோவிட் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பிறகு தோஹா ஃபிலிம் இன்ஸ்டிடியூட் தனது முதல் AGIA திரைப்பட விழாவை நடத்த திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் இம்முறையும் கடந்த…

மேலும்...

தனியார் கல்வி நிறுவனங்களுக்கு கத்தார் அரசு அதிரடி உத்தரவு!

தோஹா (14 ஆக 2021): அரசு அனுமதியின்றி கல்விக் கட்டணங்களை அதிகரிக்க வேண்டாம் என்று கத்தார் கல்வி அமைச்சகம் தனியார் பள்ளிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. நாட்டில் தனியார் பள்ளிகள் மற்றும் மழலையர் பள்ளிகள் வசூலிக்கும் கல்விக் கட்டணம் மற்றும் இதர கட்டணங்களை உரிமத் துறை கடுமையாக கண்காணித்து வருவதாக கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. அமைச்சகத்தின் முன் அனுமதி இல்லாமல் கல்வி குறித்த எந்த கட்டணமும் உயர்த்தப்படக் கூடாது. அவ்வாறு அனுமதியின்றி கட்டங்களை உயர்த்துவது சட்டவிரோதமாக கருதப்படும்…

மேலும்...

சர்வதேச அளவில் முதலிடத்தைப் பிடித்த கத்தார்!

தோஹா (10 ஆக 2021): உலகின் மிகச்சிறந்த சர்வதேச விமான நிலையங்களில் கத்தாரின் ஹாமத் சர்வதேச விமான நிலையம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. உலகெங்கிலும் உள்ள அனைத்து விமான நிலையங்கள் மற்றும் விமான நிறுவனங்களின் செயல்திறனை மதிப்பீடு செய்து,  2021-ஆம் ஆண்டுக்கான புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது ஸ்கை ட்ராக்ஸ் நிறுவனம். அதில் கத்தாரின் ஹாமத் சர்வதேச விமான நிலையம் உலகின் சிறந்த விமான நிலையம் என்ற பெயரை எடுத்து முதலிடம் பிடித்துள்ளது. கடந்த 2020-ஆம் ஆண்டில் கத்தார்…

மேலும்...

கத்தாருக்கு வந்த இந்திய கடற்படைக் கப்பல்!

தோஹா (10 ஆக 2021): இந்திய கடற்படையின் கப்பல் Trikand (ஐஎன்எஸ் திரிகாந்த்) கத்தார் தலைநகர் தோஹாவை வந்தடைந்தது. ஐந்து நாள் கடற்படைப் பயிற்சிக்காக இக் கப்பல் தோஹாவிற்கு வந்திருக்கிறது. கேப்டன் ஹரீஷ் பகுகுனா தலைமையில் வந்திருக்கும் இந்தக் கப்பலை, கத்தார் கடற்படையின் பிரதிநிதிகள் வரவேற்றனர். இதில் இரு நாட்டு கடற்படைகளின் பங்கேற்புடன் கூட்டுப் பயிற்சி நடைபெறும். இந்தப் பயிற்சியில் விமானப் பாதுகாப்பு, கடல்சார் கண்காணிப்பு மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளும் உள்ளடங்கி இருக்கும். துறைமுகத்தில்…

மேலும்...

தொழிலாளர்களை வதைத்த 436 நிறுவனங்கள் மீது கத்தார் அரசு நடவடிக்கை!

தோஹா (09 ஆக 2021): கத்தாரில் அரசின் உத்தரவை மீறிய ஒப்பந்த தொழிலாளர் நிறுவனங்கள் மீது கத்தார் அரசு கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. அத்துடன், பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு கட்டாய ஓய்வும் அளிக்கப் பட்டுள்ளது. “வெயிலில் பணிபுரியும் தொழிலாளர்கள் காலை 10 மணி முதல் மாலை 3:30 மணி வரை ஓய்வெடுக்க வேண்டும்” என்று கத்தார் அரசு உத்தரவிட்டிருந்தது. கடந்த ஜூன் மாதம் அமலுக்கு வந்த இந்த உத்தரவு, எதிர்வரும் செப்டம்பர் 15 வரை நீடிக்கும். இவ்வருடம் நிலவும்…

மேலும்...