மணிப்பூரில் கவிழ்கிறது பாஜக ஆட்சி – ஆட்சி அமைக்க காங்கிரஸ் உரிமை கோரல்!

மணிப்பூர் (18 ஜூன் 2020): மணிப்பூரில் கவர்னரை சந்தித்து, ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சி உரிமை கோரியுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் மொத்தம் 60 சட்டசபை இடங்கள் உள்ளன. கடந்த 2017-ல் நடந்த தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக காங்கிரஸ் 28 இடங்களை பெற்றது. இருப்பினும் காங்கிரஸை விட குறைவாக 21 இடங்களை மட்டுமே பெற்ற பா.ஜ., கட்சிக்கு 4 இடங்களை பிடித்த நாகா மக்கள் முன்னணி, மற்றும் தலா ஒரு இடங்களை வென்ற எல்.ஜே.பி., சுயேட்சை , ஏ.ஐ.டிசி…

மேலும்...

விலை பேசும் பாஜக – கூவத்தூர் ஸ்டைலில் எம்.எல்.ஏக்கள் ரிசார்ட்டில் அடைப்பு!

ஜெய்ப்பூர் (11 ஜூன் 2020): ராஜஸ்தானில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை பாஜக விலைபேசுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை அடுத்து காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஜெய்ப்பூரில் உள்ள ரிசார்ட்டில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆளும் காங்கிரசுக்கும் எதிர்க்கட்சியான பாஜகவுக்கும் இடையில் ராஜஸ்தானில் முழு அளவிலான அரசியல் போர் தொடங்கியுள்ளது. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு பாஜக ரூ.25 கோடியை வழங்குவதாகக் கூறியுள்ளதாக ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெஹ்லாட் பாஜக மீது குற்றம் சாட்டியுள்ளார். இதனை அடுத்து ராஜஸ்தான் காங்கிரஸ் தனது எம்.எல்.ஏ.க்கள் ஜெய்ப்பூரில் உள்ள ஒரு ரிசார்ட்டுக்கு…

மேலும்...

காங்கிரஸ் கடசியின் முன்னாள் எம்.எல்.ஏ. மரணம்!

சென்னை (10 ஜூன் 2020): காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏவும் இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸின் மாநிலத் தலைவருமான ஜி.காளான் உடல்நலக்குறைவு காரணமாக இன்று பிற்பகல் காலமானார். இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ் அழகிரி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸின் தமிழக தலைவர் திரு ஜி.காளான் அவர்கள் காலமான செய்திகேட்டு மிகுந்த துயரம் அடைந்தேன். முன்னாள் சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினரான இவர் பதினாறு ஆண்டுகள் தமிழக ஐ.என்.டி.யு.சி.யின் தலைவராக செயல்பட்டு…

மேலும்...

கேரளா சம்பவத்துக்கு மதச்சாயம் பூசுவதா? – பாஜக மீது காங்கிரஸ் பாய்ச்சல்!

திருவனந்தபுரம் (05 ஜூன் 2020): கேரளாவில் யானை கொல்லப்பட்ட விவகாரத்தில் பாஜக மதச்சாயம் பூசுவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. கேரளாவில் அன்னாசி பழத்தில் பட்டாசுகளை நிரப்பி அதை யானையை உண்ணவைத்து கொன்ற விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த படுகொலை குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எனினும் வனப்பகுதிகளில் அட்டகாசம் செய்யும் காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட காட்டுவிலங்குகளை வெடிகள் வைத்து கொல்லும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன. இது சட்டவிரோதம் என்றாலும், அதனை எங்களால் கட்டுப்படுத்த இயலவில்லை….

மேலும்...

குஜராத்தில் காங்கிரஸுக்கு மிகப்பெரிய சரிவு – காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ராஜினாமா!

அகமதாபாத் (04 ஜூன் 2020): குஜராத்தில் இரு காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துள்ளது எதிர் வரும் ராஜ்யசபா தேர்தலில் காங்கிரஸுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தில் காலியாக உள்ள நான்கு ராஜ்யசபா பதவிக்கு வரும் 19-ம் தேதி தேர்தல் நடக்கிறது. தேர்தலில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஓட்டு முக்கியம். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கீர்த்தி படேல், லலித் வசோயா என்ற இரு எம்.எல்.ஏ..,க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். முன்னதாக முதல்வர் விஜய் ரூபானியை அந்த…

மேலும்...

நியூஸ் 7 தொலைக்காட்சியை புறக்கணிக்க திமுக கூட்டணி கட்சிகள் முடிவு!

சென்னை (19 மே 2020): பா.ஜ.க.வினர் பங்கேற்கும் நியூஸ் 7 தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கப் போவதில்லை என்று திமுக, காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ளன. கொரோனா பரவலைத் தடுக்கும் நோக்கில் நாட்டில் போடப்பட்டுள்ள முழு முடக்க உத்தரவால், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் படும் இன்னல்கள் பற்றி தனியார் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் நேற்று விவாதம் நடத்தப் பட்டது. இதில் திமுக தரப்பில் கலாநிதி வீராசாமி, பாஜக தரப்பில் கரு.நாகராஜன், காங்கிரஸ் தரப்பில் கரூர் எம்பி ஜோதிமணி உள்ளிட்டோர்…

மேலும்...

BREAKING NEWS: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி!

முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான டாக்டர் மன்மோகன் சிங் நெஞ்சு வலியின் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 87 வயதான மன்மோகன் சிங் இன்று இரவு 8.45 மணியளவில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது 2009 ஆம் ஆண்டு இருதய அறுவை சிசிச்சை செய்தது குறிப்பிடத்தக்கது. Delhi: Former Prime Minister Dr Manmohan Singh has been admitted to…

மேலும்...

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் உயர் மட்டக் குழு!

புதுடெல்லி (19 ஏப் 2020): நாட்டின் முக்‍கிய பிரச்சனைகள் தொடர்பாக உடனடியாக நடவடிக்‍கை எடுப்பதற்கு ஏதுவாக புதிய உயர்மட்ட ஆலோசனைக்‍ குழுவை காங்கிரஸ் கட்சித் தலைவர் திருமதி சோனியா காந்தி நியமித்துள்ளார். முன்னாள் பிரதமர் டாக்‍டர் மன்மோகன் சிங் தலைமையிலான குழுவில், திரு. ராகுல் காந்தி, திரு. ரன்தீப்சிங் சுர்ஜேவாலா, திரு. கே.சி. வேணுகோபால், திரு. ப. சிதம்பரம், திரு. மணிஷ்திவாரி, திரு. ஜெயராம் ரமேஷ் உள்ளிட்ட 11 பேர் இடம்பெற்றுள்ளனர். இந்தக்‍ குழு நாள்தோறும் சந்தித்து,…

மேலும்...

பாஜகவில் சேர்ந்த சிலமணி நேரங்களில் ஜோதிராதித்யா சிந்தியாவுக்கு அடித்தது ஜாக்பாட்!

புதுடெல்லி (11 மார்ச் 2020): பா.ஜ.க.வில் சேர்ந்த சில மணி நேரங்களில் மத்திய பிரதேசத்துக்கான மாநிலங்களை தேர்தல் வேட்பாளராக ஜோதிராதித்யா சிந்தியாவை அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. மத்திய பிரதேசத்தில் முதல் மந்திரி கமல்நாத் தலைமையில் நடந்து வரும் காங்கிரஸ் ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. அந்த மாநிலத்தின் வலுவான மூத்த தலைவராக இருந்த ஜோதிராதித்ய சிந்தியா காங்கிரசில் இருந்து ராஜினாமா செய்தார். பா.ஜ.க. தலைவர்களை சந்தித்து பேசிய அவர் அடுத்தகட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவது குறித்து ஆலோசித்தார். ஜோதிராதித்ய சிந்தியாவை…

மேலும்...

19 எம்.எல்.ஏக்களை இழந்த காங்கிரஸ் – பரிதவிக்கும் மத்திய பிரதேச அரசு!

புதுடெல்லி (10 மார்ச் 2020): ஜோதிராதித்யா சிந்தியா மற்றும் அவரது ஆதரவாளர்கள் எம்.எல்.ஏக்கள் 19 பேர் காங்கிரஸிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். காங்., ஆட்சி நடக்கும் முதல்வர் கமல்நாத் தலைமையிலான அமைச்சரவையில் ஆறு அமைச்சர்கள், 10 எம்.எல்.ஏ.,க்கள் என 16 பேர், மூன்று சிறப்பு விமானம் மூலம், மத்திய பிரதேசத்தின் போபால் நகரிலிருந்து புறப்பட்டு, பெங்களூருக்கு சென்றனர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன், தனியார் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுனர். இதற்கிடையே இருக்கும் ஜோதிராதித்யா சிந்தியா, டில்லியில் பிரதமர்…

மேலும்...