குடியுரிமை சட்டம் தொடர்பான நாடகம் – பள்ளி தலைமை ஆசிரியை கைது!

பெங்களூரு (01 பிப் 2020): குடியுரிமை சட்டத்தை விமர்சித்து பள்ளி விழாவில் நிகழ்த்தப்பட்ட நாடகம் தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார். கர்நாடகாவில், பிடார் மாவட்டத்தில் உள்ள, ஷாஹீன் பள்ளியில், நடந்த விழாவில் கடந்த மாதம், 21 ல் மாணவர்களின் நாடகம் நடைபெற்றது. அதில், குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக விமர்சிக்கப் பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து, நீலேஷ் ரக் ஷயால் என்பவர், போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, சில தினங்களுக்கு முன், ஷாஹீன்…

மேலும்...

திருச்சி பாஜக நிர்வாகி கொலை வழக்கில் திடீர் திருப்பம்!

திருச்சி (30 ஜன 2020): திருச்சி பாஜக நிர்வாகி கொலை வழக்கின் திடீர் திருப்பமாக ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர். திருச்சிராப்பள்ளி மாவட்டம் பாலக்கரை பகுதி பாஜக மண்டலச் செயலாளராக இருந்தவர் விஜய ரகு. இவர் திருச்சி காந்தி மார்க்கெட்டில் வாகன நுழைவுக் கட்டணம் வசூலிக்கும் பணியை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த (27-ம் தேதி) காந்தி மார்க்கெட் வாசலில் ஒரு கும்பல் விஜய ரகுவை வெட்டிக் கொலை செய்தது. அக்கம்பக்கத்தினர் சுதாரிப்பதற்குள் அந்தக் கும்பல்…

மேலும்...

டாக்டர் கபீல்கான் மீண்டும் கைது!

மும்பை (30 ஜன 2020): டாக்டர் கபீல்கான் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். உத்திர பிரதேசம் அலிகார் பல்கலைக் கழகத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பேசியதாகவும், மாணவர்களை போராட்டத்திற்கு தூண்டியதாகவும் அவர் மீது சென்ற மாதம் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் அவர் தற்போது மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு, கோராக்பூர் மருத்துவமனையில் ஆக்சிஜன் இல்லாமல் பல குழந்தைகள் பலியான நிலையில் ஆக்சிஜனுக்கு தன் சொந்த பணத்தில் உதவி புரிந்தபோதும் அவர் மீது வழக்கு…

மேலும்...

திருச்சி பாஜக நிர்வாகி படுகொலை வழக்கில் தேடப்பட்டு வந்த மிட்டாய் பாபு கைது!

திருச்சி (29 ஜன 2020): திருச்சி பாஜக நிர்வாகி படுகொலை வழக்கில் தேடப்பட்டு வந்த மிட்டாய் பாபு போலீசாரால் கைது செய்யப்பட்டார். திருச்சிராப்பள்ளி மாவட்டம் பாலக்கரை பகுதி பாஜக மண்டலச் செயலாளராக இருந்தவர் விஜய ரகு. இவர் திருச்சி காந்தி மார்க்கெட்டில் வாகன நுழைவுக் கட்டணம் வசூலிக்கும் பணியை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த (27-ம் தேதி) காந்தி மார்க்கெட் வாசலில் ஒரு கும்பல் விஜய ரகுவை வெட்டிக் கொலை செய்தது. இந்த கொலை தொடர்பாகஅதே பகுதியை…

மேலும்...

ஜே.என்.யூ மாணவர் ஷார்ஜில் இமாம் கைது!

பாட்னா (28 ஜன 2020): குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக ஜே.என்.யு மாணவர் ஷர்ஜில் இமாம் கைது செய்யப்பட்டுள்ளார். வடகிழக்கு மாநிலங்களை இந்தியாவிலிருந்து பிரித்துவிடலாம் என்று பேசியதாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து ஷர்ஜில் இமாம் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் உபி.யில் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போராட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக உத்தரபிரதேச போலீசாரும் இவர் மீது வழக்கு…

மேலும்...

குரூப் 4 தேர்வு ரத்தாகுமா? – தொடரும் கைது!

சென்னை (28 ஜன 2020): குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே 12 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குரூப் 4 தேர்வு எழுதிய சிவராஜ் உட்பட 2 பேரை கைது செய்து சிபிசிஐடி போலீஸ் விசாரணை செய்து வருகின்றனர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த செப்டம்பர் மாதம் நடத்திய குரூப்-4 பதவிகளுக்கான எழுத்துத் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக…

மேலும்...

குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயன்றவர்கள் கைது!

சென்னை (27 ஜன 2020): சென்னை மயிலாப்பூரில் ‘துக்ளக்’ ஆசிரியா் குருமூா்த்தி வீடு மீது பெட்ரோல் குண்டு வீச முயன்ற வழக்கில், 4 போ் கைது செய்யப்பட்டனா். மயிலாப்பூா் தியாகராஜபுரத்தில் வசிக்கும் ‘துக்ளக்’ ஆசிரியா் எஸ்.குருமூா்த்தி வீட்டின் அருகே, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 இருசக்கர வாகனங்களில் 6 போ் வந்தனா். அதில் ஒரு நபா், தனது பையில் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் குண்டை வீசுவதற்கு எடுத்துள்ளாா். அப்போது அங்குள்ள நாய் பலமாகக் குரைத்ததால், பாதுகாப்பு பணியில் இருந்த…

மேலும்...

அதிமுக முன்னாள் எம்.பி கைது!

கோவை (25 ஜன 2020): அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி கோவையில் கைது செய்யப்பட்டுள்ளார். கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பழனிசாமி, அதிமுக பெயரில் போலி இணையதளம் நடத்தி வந்ததால் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிமுகவைச் சேர்ந்த முட்டுகவுண்டன்புதூர் ஊராட்சி மன்றத் தலைவர் கந்தசாமி புகாரின் பேரில் கே.சி.பழனிசாமி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது 11 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கைதான பழனிசாமி விசாரணை மேற்கொள்ள கே.சி.பழனிசாமி சூலூர் காவல் நிலையத்துக்கு கொண்டு…

மேலும்...

சிறுவனுடன் சல்லாபம் – ஆசிரியை கைது!

நியூயார்க் (24 ஜன 2020): அமெரிக்காவில், 13 வயது சிறுவனுக்கு, நிர்வாண புகைப்படங்கள் அனுப்பி, அவனிடம் காதல் கொண்ட, இந்திய ஆசிரியை கைது செய்யப்பட்டார். அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம், ஹெப்சிபாவை சேர்ந்தவர் ரூமா பைராபாகா, 24. இந்தியரான இவர், ஹெப்சிபாவில் உள்ள நடுநிலைப் பள்ளி ஒன்றில், ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இந்நிலையில், அவரது வகுப்பில் படிக்கும், 13 வயது சிறுவனுக்கும் அந்த ஆசிரியைக்கும் காதல் மலர்ந்துள்ளது. மேலும் அந்த சிறுவனுக்கு மொபைல் மூலம் ஆபாச படங்களை அனுப்பி,…

மேலும்...

எட்டு வயது சிறுமி வன்புணர்ந்து கொல்லப்பட்ட வழக்கில் ஒருவன் கைது!

சிவகாசி (23 ஜன 2020): சிவகாசி அருகே 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்ட வழக்கில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளான். சிவகாசி அருகேயுள்ள கொங்கலாபுரத்தைச் சோ்ந்த சுந்தரம் – பத்மா தம்பதியினரின் மகள் பிரித்திகா. மூன்றாவது படித்து வந்த இந்த சிறுமி திங்கள்கிழமை மாலை பள்ளியிலிருந்து வீட்டிற்கு வந்தவா் அருகிலுள்ள புதர் பகுதிக்கு இயற்கை அழைப்புக்காகச் சென்று வருவதாகக் கூறிவிட்டுச் சென்றவா் மீண்டும் வீடு திரும்பவில்லை. உறவினா்கள் பல…

மேலும்...