பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ 500 அபராதம் – மத்திய அரசு அதிரடி!

புதுடெல்லி (15 ஏப் 2020): பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ 500 அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. உலக அளவில் அதி வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதன் எதிரொலியாக கடந்த மார்ச் 24ந்தேதி முதல் தொடர்ந்து 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு நேற்றுடன் முடிவுக்கு வந்தது. ஆனால், நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் குறையவில்லை. இந்நிலையில்,…

மேலும்...

கொரோனா தொற்று காரணமாக முன்னாள் கிரிக்கெட் வீரர் மரணம்!

பெஷாவர் (15 ஏப் 2020): கொரோனா தொற்று காரணமாக பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜாஃபர் சர்ஃபராஸ் (50) உயிரிழந்தார். கொரோனா தொற்று காரணமாக ஜாஃபர் சர்ஃபராஸ் கடந்த 3 நாட்களாக பெஷாவரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் வென்டிலேட்டரில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று அவர் உயிரிழந்ததை அவரது குடும்பத்தினர் உறுதி செய்துள்ளனர். பாகிஸ்தானில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட முதல் கிரிகெட் வீரர் சர்ஃபராஸ். இவர் 1988 ஆம் ஆண்டு கிரிக்கெட்டில்…

மேலும்...

மோடியை மீண்டும் சீண்டிய கமல்!

சென்னை (15 ஏப் 2020): மும்பையில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகர் கமல், மோடி அரசையும் விமர்சனம் செய்துள்ளார். நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தொடர்ந்து மத்திய மாநில அரசுகளை விமர்சித்து வருகிறார். அந்த வகையில் மோடி சமீபத்தில் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு நன்றி கூறும் விதமாக வீட்டின் முகப்பில் நின்று கைத்தட்டச் சொன்னார். பால்கனியில் அகல் விளக்குகளை ஏற்றி வைத்து ஒற்றுமையை நிலைநாட்டுமாறு கேட்டுக்கொண்டார். இதுகுறித்து கமல்ஹாசன் மோடி அரசை…

மேலும்...

காங்கிரஸ் எம்.எல்.ஏவுக்கு கொரோனா பாஸிட்டிவ் – பீதியில் முதல்வர் மற்றும் எம்.எல்.ஏக்கள்!

அஹமதாபாத் (15 ஏப் 2020): குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏ. இம்ரான் கெதாவாலாவுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது. குஜராத் முதல்வர் விஜய் ரூபானி, உள்துறை அமைச்சர் மற்றும் மூன்று காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் செவ்வாயன்று முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர். இதனை அடுத்து இவர்களை சந்தித்த ஆறு மணி நேரத்திற்குள் காங்கிரஸ் எம்.எல்.ஏ., இம்ரான் கெதாவாலாவுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது. இதனை அடுத்து காந்தி நகர் SVP மருத்துவமனையில் இம்ரான் கொதாவாலா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். முதல்வருடன் நடைபெற்ற ஆலோசனையில்…

மேலும்...

மகனின் நிலையை நினைத்து நடிகர் விஜய் கவலை!

சென்னை (14 ஏப் 2020): கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கனடாவில் சிக்கியுள்ள நடிகர் விஜயின் மகன் சஞ்சயை நினைத்து நடிகர் விஜய் கவலை அடைந்துள்ளார். சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் பரவியுள்ள இந்த வைரஸால் இதுவரை 1 லட்சத்துக்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 10,400 பேருக்கு மேல் இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் திரைப்பட மேற்படிப்பு தொடர்பாக…

மேலும்...

அத்தியாவசிய பொருட்களுக்கு கூட அனுமதி இல்லை – கோவையில் அதிரடி!

கோவை (14 ஏப் 2020): கோவையில் அத்தியாவசிய பொருட்களுக்குக் கூட யாரும் வெளியே வரக்கூடாது என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் தமிழகம் இந்திய அளவில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இதனால் தமிழகத்தில் அதிகமாக பாதிக்கப்பட்ட இடத்தில் முதலில் சென்னையும் அடுத்து கோவையும் இருக்கிறது. இதனால் கோவையில் உள்ள 14 முக்கிய இடங்களை மாவட்ட நிர்வாகம் முழுவதுமாக முடக்கியுள்ளது. அதில், ஆனைமலை, பொள்ளாச்சி வடக்கு, பொள்ளாச்சி தெற்கு, மேட்டுப்பாளையம், மேட்டுக்கடை, சுந்தராபுரம், குனியமுத்தூர், உக்கடம், மீன்…

மேலும்...

குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ 10 ஆயிரம் – திருமாவளவன் வலியுறுத்தல்!

சென்னை (14 ஏப் 2020): குடும்ப அட்டைதாரர்கள் ஒவ்வொருவருக்கும் குறைந்தது 10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக முதலமைச்சரின் அறிவிப்பில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மீண்டும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று கூறியிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கு மே மாதத்திற்கான ரேஷன் பொருட்களை விலையில்லாமல் வாங்கிக் கொள்ளலாம் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார். இது மே மாதத்தில்…

மேலும்...

கொரோனாவுக்கு இலவச பரிசோதனை குறித்த உத்தரவில் உச்ச நீதிமன்றம் திடீர் மாற்றம்!

புதுடெல்லி (14 ஏப் 2020): கொரோனாவுக்கு பரிசோதனை செய்ய முன்வரும் எல்லோருக்கும் இலவச பரிசோதனை கிடையாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸ் குறித்து சோதனை செய்வதற்கு தற்போது வரை 157 அரசு ஆய்வகங்களில் சோதனை செய்யப்படுகிறது. அதே போல 67 தனியார் ஆய்வகங்களுக்கு கொரோனா சோதனை செய்வதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு கொரோனா சோதனைக்கான கட்டணமாக 4,500 ரூபாயை மத்திய அரசு நியமித்தது. தனியார் ஆய்வகங்களிலும் கொரோனா சோதனையை இலவசமாக…

மேலும்...

பிரதமர் மோடியின் பேச்சில் இன்றைய மாற்றம் – அதுதான் காரணமா?

புதுடெல்லி (14 ஏப் 2020): பிரதமர் மோடி ஏதாவது பேசினால் பொதுமக்களுக்கு ஏதாவது செய்யச் சொல்லி டாஸ்க் போல் கொடுப்பார். ஆனால் இன்று அப்படி எந்த அறிவிப்பும் வைக்கவில்லை. கொரோனா பரவலை தொடர்ந்து பிரதமர் மோடி இன்று நாட்டு மக்கள் முன்னிலையில் மீண்டும் உரையாற்றினார். பிரதமர் மோடி தனது பேச்சில், இந்தியா முழுவதும் மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 21 நாள் ஊரடங்கு இன்று நிறைவடையும் நிலையில், அது மேலும் 19 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. என்றார்….

மேலும்...

மே.3 ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு நீட்டிப்பு – பிரதமர் உத்தரவு!

புதுடெல்லி (14 ஏப் 2020): மே 3 ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவை நிட்டித்து பிரதமர் உத்தரவிட்டுள்ளார். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த 25-ந்தேதியில் இருந்து இன்று வரை 21 நாட்கள் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இன்று நள்ளிரவுடன் 21 நாள் கெடு முடிவடைகிறது. இதற்கிடையில் இன்று காலை இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இச்சூழலில் தற்போது நாடு முழுவதும் மே 3 ஆம்…

மேலும்...