சிறுமியை தீ வைத்து கொளுத்த காரணம் இதுதான்: பகீர் கிளப்பும் திருமாவளவன்!

சென்னை (11 மே 2020): விழுப்புரம் அருகே சிறுமி ஜெயஸ்ரீ தீ வைத்து கொல்லப்பட டாஸ்மாக் கடைகளைத் திறந்ததும் ஒரு காரணம் என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே சிறுமதுரை கிராமத்தில் ஜெயபால் என்பவரின் மகள் ஜெயஸ்ரீ என்னும் சிறுமியை, அதே ஊரைச்சார்ந்த கலியபெருமாள், முருகன் ஆகியோர் கைகளைக் கட்டிப்போட்டு, வாயில் துணியைத் திணித்து பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தியுள்ளனர். உடல்முழுவதும் எரிந்தநிலையில்…

மேலும்...

அதிமுகவினரின் கொடூரச் செயல் – 15 வயது சிறுமி எரித்துப் படுகொலை!

விழுப்புரம் (11 மே 2020): விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே 15 வயது சிறுமி ஒருவர், அ.தி.மு.க.வினர் இருவரால் எரித்துப் படுகொலை செய்யப் பட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்த ஜெயபால் தரப்பினருக்கும், அதே கிராமத்தைச் சேர்ந்த அதிமுக கிளைச் செயலாளர் கலியபெருமாள் மற்றும் அதிமுக முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் முருகன் தரப்பினருக்கும் இடையே நீண்ட காலமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் ஜெயபால் வீட்டிற்கு நேற்று கலியபெருமாள் மற்றும் முருகன்…

மேலும்...

9 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த பாஜக தலைவர் கைது!

கண்ணூர் (17 எப் 2020): கேரளாவில் 9 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் பா.ஜ.க தலைவர் பத்மராஜனை போலிஸார் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டம் திருப்பங்கோட்டூர் பாலதாயி பள்ளியின் ஆசிரியர் பத்மராஜன். இவர் பா.ஜ.கவின் தேசிய ஆசிரியர் சங்கத்தின் தலைவராக உள்ளார். இவர் மீது 9 வயது சிறுமியின் தாயார் போலீசில் புகார் அளித்தார். அதில்,பத்மராஜன் பாலதாயி பள்ளியில் படிக்கும் தனது 9 வயதான குழந்தையை பாலியல்…

மேலும்...

5 வயது சிறுமியிடம் பாலியல் சில்மிஷம் செய்த 50 வயது முதியவர் கைது!

கோவை (09 பிப் 2020): ஐந்து வயது சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆனந்த் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். கோவை மாவட்டம் சிங்காநல்லூர் எஸ்.ஐ.எச்.எஸ் காலனியை சேர்ந்தவர் ஆனந்த். இவர் காமராஜபுரத்தில் உள்ள ஒரு மர குடோனில் கூலி வேலை செய்து வருகிறார். அதே குடோனில் ஒரு தம்பதியினர் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று (08/02/2020) அந்த தம்பதியினர் தங்களின் 5 வயது சிறுமியுடன் வேலைக்கு வந்துள்ளனர். பின்பு சிறுமியை தாங்கள் வேலை செய்யும் இடத்திற்கு…

மேலும்...

சிறுமி கூட்டு வன்புணர்வு கொலை குற்றவாளிகளுக்கு தண்டனை அறிவிப்பு!

சென்னை (03 பிப் 2020): சென்னை அயனாவரம் சிறுமி கூட்டு வன்புணர்வு கொலை குற்றவாளிகளுக்கு தண்டனை இன்று அறிவிக்கப் பட்டது. சென்னை, அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில், பெற்றோருடன் வசித்து வந்தவர், 11 வயது மாற்றுத்திறனாளி சிறுமி. அவரை, அதே குடியிருப்பில் வேலை செய்த காவலாளி பழனி, 40; பிளம்பர் ஜெய்கணேஷ், 23; லிப்ட் ஆப்பரேட்டர்கள் தீனதயாளன், 50; பாபு, 36, உட்பட, 17 பேர், பாலியல் வன்கொடுமை செய்தனர். கடந்த, 2018 ஜனவரி முதல், ஜூன் வரை,…

மேலும்...

எட்டு வயது சிறுமி வன்புணர்ந்து கொல்லப்பட்ட வழக்கில் ஒருவன் கைது!

சிவகாசி (23 ஜன 2020): சிவகாசி அருகே 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்ட வழக்கில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளான். சிவகாசி அருகேயுள்ள கொங்கலாபுரத்தைச் சோ்ந்த சுந்தரம் – பத்மா தம்பதியினரின் மகள் பிரித்திகா. மூன்றாவது படித்து வந்த இந்த சிறுமி திங்கள்கிழமை மாலை பள்ளியிலிருந்து வீட்டிற்கு வந்தவா் அருகிலுள்ள புதர் பகுதிக்கு இயற்கை அழைப்புக்காகச் சென்று வருவதாகக் கூறிவிட்டுச் சென்றவா் மீண்டும் வீடு திரும்பவில்லை. உறவினா்கள் பல…

மேலும்...

8 வயது சிறுமி வன்புணர்ந்து கொலை – சிவகாசி அருகே கொடூரம்!

விருதுநகர் (22 ஜன 2020): சிவகாசி அருகே 8 வயது சிறுமியின் சடலம் ஆடைகள் கலைந்த நிலையில் கண்டெடுக்கப் பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி, சித்துராஜபுரம் அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த. கூலித் தொழிலாளி தம்பதிகளின் 8 வயது மகள் அருகில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி ஒன்றில் 3ம் வகுப்பு படித்து வந்தார். திங்கட் கிழமை காலை வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற சிறுமி, மாலை 4 மணிக்கு வீடு திரும்பினார். பின்,…

மேலும்...

வடமாநிலமாக மாறும் தமிழகம் – மூன்றாம் வகுப்பு சிறுமி வன்புணர்ந்து கொலை!

சிவகாசி (21 ஜன 2020): சிவகாசி அருகே மூன்றாம் வகுப்பு பயிலும் சிறுமி வன்புணர்ந்து படுகொலை செய்யப்பட்டுள்ளார். சிவகாசி, கொங்கலாபுரத்தில் தனியார் பள்ளியில் படித்து வந்த 3ம் வகுப்பு மாணவி ஒருவர், நேற்று மாயமானார். சிறுமி எங்கு தேடியும் கிடைக்காததால் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். இந்நிலையில், இன்று காலை முட்புதர் அருகே, அந்த சிறுமி சடலமாக கிடந்துள்ளார். மேலும் அவர் வன்புணர்ந்து படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறன. சிறுமியின் உடலை கைபற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக…

மேலும்...

ஆபாச வீடியோவை காட்டி சிறுமியிடம் சில்மிஷம் – கையும் களவுமாக சிக்கிய அதிமுக பிரமுகர்!

சென்னை (07 ஜன 2020): ஆபாச வீடியோவைக் காட்டி 13 வயது சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட 68 வயது அதிமுக பிரமுகரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை வண்ணாரப்பேட்டை மாடர்ன் லைன் பகுதியை சேர்ந்தவர் பாளையம் என்கின்ற ரவி… 68 வயதாகிறது.. இவர் அதிமுக பிரமுகர் ஆவார். பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அதிமுக எம்ஜிஆர் மன்ற 52வது வட்ட தலைவராகவும் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. அதே பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமியை தன் வீட்டின்…

மேலும்...