ஜாமியா வளாகத்தில் குண்டர்கள் நடத்திய தாக்குதலின் பரபரப்பு வீடியோ காட்சிகள்!

புதுடெல்லி (16 பிப் 2020): குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட போது டெல்லி ஜாமியா பல்கலைக்கழக நூலகத்தில் படித்துக் கொண்டிருந்த மாணவர்களை குண்டர்கள் தாக்கும் காட்சி தற்போது வைரலாகி வருகிறது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் உள்ள ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த டிசம்பர் மாதம் 14ம் தேதி அமைதியாக நடைபெற்ற மாணவர்களின் போராட்டத்தில் பயங்கரவாத குண்டர்கள் புகுந்து மாணவர்களை பயங்கரமாக தாக்கினர். மேலும் ஜாமியா மாணவர்கள் மீது…

மேலும்...

சென்னை போலீஸ் தாக்குதலைக் கண்டித்து தமிழகம் முழுவதும் நள்ளிரவில் ஆர்ப்பாட்டம்!

சென்னை (14 பிப் 2020): சென்னை வண்ணாரப்பேட்டையில் சி.ஏ.ஏ.வுக்கு எதிரான போராட்டத்தில் போலீஸ் தடியடி நடத்தியதை கண்டித்து, மக்கள் பல இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். வண்ணாரப்பேட்டையில் தொடர் போராட்டத்தை பெண்கள் முன்னெடுத்த நிலையில் அவர்கள் மீது காவல்துறை கொடூரமான தாக்குதலை நடத்தியுள்ளது. சென்னை மாநகர காவல்துறையின் இந்த நடவடிக்கை ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிப்பதாக உள்ளது. இந்நிலையில் சென்னையில் போலீஸ் நடத்திய தாக்குதலை கண்டித்து தமிழகம் முழுவதும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும்...

அரசை கேள்வி கேட்க யாரும் இல்லையா? டெல்லி அரச அடக்குமுறைக்கு எதிராக குமுறும் மாணவர்கள்!

புதுடெல்லி (10 பிப் 2020): “எங்கள் மீது அத்துமீறும் போலீசையும் அரசையும் கேள்வி கேட்க நாட்டில் யாரும் இல்லையா?” என்று கொந்தளிக்கின்றனர். டெல்லி மாணவர்கள். குடியுரிமை சட்டத்தை எதிர்த்து அமைதி வழியில் போராடும் மாணவர்களை போலீஸார் கொடூரமாக தாக்கும் படலம் தொடர்கிறது. டெல்லியில் அமைதி வழியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தின்போது ஜாமியா மாணவிகள் மீது போலீசார் இன்றும் கொடூர தாக்குதலை மேற்கொண்டனர்.. ஜாமிய மில்லியா மாணவர்கள் இன்று நாடாளுமன்றத்தை நோக்கி அமைதியாக பேரணி மேற்கொண்டனர். அப்போது…

மேலும்...

டெல்லி போலீஸ் இன்றும் அட்டூழியம் – ஜாமியா மாணவிகள் மீது கண்மூடித்தனமான தாக்குதல்!

புதுடெல்லி (10 பிப் 2020): டெல்லியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தின்போது ஜாமியா மாணவிகள் மீது போலீசார் இன்றும் கொடூர தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். ஜாமிய மில்லியா மாணவர்கள் இன்று நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி மேற்கொண்டனர். அப்போது போலீசார் மேற்கொண்ட கொடூர தாக்குதலில் மாணவிகள் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளனர். குறிப்பாக 10 மாணவிகள் கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இதுகுறித்து ஒரு மாணவி தெரிவிக்கையில், போலீசார் பெண்களின் மறைவிடங்களை குறி வைத்து தாக்கியதாக தெரிவித்துள்ளார். இதில் 10…

மேலும்...

காஷ்மீர் புல்வாமாவில் பயங்கரவாத தாக்குதல் – ஒருவர் பலி!

புல்வாமா (09 பிப் 2020): காஷ்மீர் புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒருவர் பலியாகியுள்ளார். 55 வயது குலாம் நபி மிர் என்பவர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இந்த தாக்குதலில் குலாம் நபி மிர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ஞாயிறு (09 பிப்) மாலை 07:30 மணிக்கு இச்சம்பவம் நடந்துள்ளது. இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த குலாம் நபி மிர் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட நிலையில் மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த…

மேலும்...

டெல்லி ஜே.என்.யூ மாணவர்கள் மீது கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்ட பெண் யார் என்பது தெரிந்தது!

புதுடெல்லி (13 ஜன 2020): டெல்லி ஜே.என்.யூ மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய பெண் ஏபிவிபியை சேர்ந்த பெண் என்பது தெரியவந்துள்ளது. கடந்த ஜனவரி 5 ம் தேதி டில்லி ஜே.என்யு.,வில் முகமூடி அணிந்த கும்பல் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது கண்மூடி தனமாக தாக்குதல் நடத்தியது. இதில் பலர் காயமடைந்தனர். இந்த வன்முறை தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வந்த டில்லி கிரைம் பிராஞ்ச் போலீசார், முகமூடி அணிந்து தாக்குதல் நடத்தியவர்களின் புகைப்படங்களைக் கொண்டு…

மேலும்...

டெல்லியில் மீண்டும் பதற்றம் – ஜே.என்.யூ மாணவர்கள் மீது போலீசார் தாக்குதல் – வீடியோ!

புதுடெல்லி (09 ஜன 2020): டெல்லி ஜே.என்.யூ மாணவர்கள் குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கி பேரணியாக செல்ல முயன்றபோது, போலிஸார் அவர்களைத் கொடூரமாக கையாண்டு கைது செய்துள்ளனர். கடந்த ஜனவரி 5ம் தேதியன்று டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்குள் புகுந்த முகமூடி அணிந்த மர்ம நபர்கள், மாணவர்கள், பேராசிரியர்கள், பல்கலை. ஊழியர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் மாணவர்கள் பலர் படுகாயமடைந்தனர். இந்தத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் ஆர்.எஸ்.எஸ்ஸின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி உள்ளிட்ட இந்துத்துவா…

மேலும்...

அமெரிக்க துருப்புகள் மீது ஈரான் தாக்குதல்!

ஈரான் (08 ஜன 2020): இராக்கில் உள்ள அமெரிக்க துருப்புகள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரானின் தாக்குதலை பென்டகன் உறுதி செய்துள்ளது. இராக்கின் அமெரிக்க துருப்புகள் மீது, ஏராளமான ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப் பட்டதாக பென்டகன் தெரிவித்துள்ளது. இதுதவிர வேறு எந்த சேத விவரங்களையும் பென்டகன் தெரிவிக்கவில்லை.

மேலும்...

குஜராத்தில் ஏபிவிபி குண்டர்களின் அட்டூழியம் – மாணவர்கள் மீது கொடூர தாக்குதல்!

அஹமதாபாத் (07 ஜன 2020): அஹமதாபாத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது ஏபிவிபி அமைப்பினர் கொடூர தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்‍கழக மாணவர்கள் மீதான தாக்‍குதலுக்‍கு எதிர்ப்பு தெரிவித்து, குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். ஏபிவிபி அலுவலகம் முன்பு SUCI எனப்படும் தேசிய மாணவர் சங்கம் சார்பில் இன்று போராட்டம் நடைபெற்றது. அப்போது . ABVP அமைப்பினர் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது நடத்திய பயங்கர தாக்‍குதலில் மாணவர்கள் சிலர் காயமடைந்தனர்….

மேலும்...

டெல்லி ஜே.என்.யூ பல்கலைக் கழக தாக்குதல் விவகாரத்தில் திடீர் திருப்பம்!

புதுடெல்லி (07 ஜன 2020): டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்கள் மீதான தாக்குதல் விவகாரத்தின் திடீர் திருப்பமாக இந்த தாக்குதலுக்கு இந்து ரக்ஷா தள் பொறுப்பேற்றுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை (05-01-2020) மாலை ஜே.என்.யூ பல்கலைக்கழத்தின் மாணவ, மாணவிகள் விடுதிக்குள் அத்துமீறி நுழைந்த நூற்றுக்கு மேற்பட்ட முகமூடி அணிந்த கும்பல், அங்கிருந்த ஜேஎன்யு மாணவர் சங்கத்தலைவர் அய்ஷி கோஷ், கல்லூரி மாணவர்கள், மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தினார்கள். ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவ…

மேலும்...