ஜூலை 7 முதல் விசிட் விசா மற்றும் சுற்றுலா விசாவில் அமீரகம் வர அனுமதி!

துபாய் (22 ஜூன் 2020): இதுவரை உலகம் கண்டிராத கொடிய கொரோனா வைரஸ் தொற்றுநோயின் காரணமாக உலக நாடுகள் அனைத்தும் பலவிதமான பாதிப்புகளை சந்தித்துள்ளன. குறிப்பாக சுற்றுலாத்துறையும் அதனை சார்ந்த விமான போக்குவரத்து சேவை மற்றும் பயண சேவைகள் வழங்கக்கூடிய அனைத்து நிறுவனங்களும் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி உள்ளன. சில மாதங்களுக்கு பிறகு கொரோனாவின் தாக்கம் தற்போது குறைந்திருக்கும் தறுவாயில், ஒரு சில நாடுகள், தங்களின் நாடுகளில் அமல்படுத்தப்பட்டிருந்த கட்டுப்பாடுகளையும், தடைகளையும் விலக்கிக்கொண்டு வருகின்றன. உலக அளவில் சுற்றுலா…

மேலும்...

இயல்பு நிலைக்கு திரும்பும் துபாய்!

துபாய் (27 மே 2020): கோவிட் 19 விதிமுறைகளை தளர்த்துவதன் மூலம் துபாய் இன்று முதல் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. ரம்ஜான் பண்டிகை விடுமுறை முடிவுற்ற நிலையில் இன்றிலிருந்து துபாயில் பொது வாழ்க்கை மற்றும் வர்த்தகம் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. ஐம்பது சதவீத ஊழியர்கள் தொழிலாளர் அமைச்சகத்தினால் அலுவலகங்களுக்கு வர அனுமதிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக இது 30 சதவீதமாக இருந்தது. உணவகங்களில் வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியுடன் நுழைய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது மேலும் 30 சதவீதம் பார்வையாளர்களுடன் திரையரங்குகளை திறக்க…

மேலும்...

இஸ்லாத்திற்கு எதிரான கருத்து – துபாயில் மேலும் ஒருவர் மீது நடவடிக்கை!

துபாய் (19 மே 2020): ஐக்கிய அரபு அமீரகத்தில் இஸ்லாத்திற்கு எதிரான நச்சுக் கருத்தை பரப்பியதற்காக, மேலும் ஒரு இந்தியர் மீது நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்படும் அடக்குமுறைகள் உலக அளவில் பேசுபொருளாகி உள்ளன. சமீபத்தில் அரபு நாடுகளின் முக்கியப் பிரமுகர்கள், அரச பின்னணி கொண்டவர்கள் இந்திய அரசினைத் தொடர்பு கொண்டு தங்களின் கண்டனத்தை பதிவு தெரிவித்திருந்தனர். அரபு நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களும், இவ்வாறான வெறுப்பூட்டும் பேச்சு மற்றும் காழ்ப்புணர்ச்சிப் பதிவுகள்…

மேலும்...

துபாயில் கடற்கரை மற்றும் ஹோட்டல்கள் மீண்டும் திறப்பு!

துபாய் (12 மே 2020): துபாயில் மூடப்பட்டிருந்த ஹோட்டல்கள், கடற்கரை உள்ளிட்டவைகள் செவ்வாய்க்கிழமை முதல் மீண்டும் திறக்கப்படுகின்றன. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக வளைகுடா நாடுகளில் அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டுள்ளன. ஐக்கிய அரபு அமீரகத்திலும் ஹோட்டல், கடற்கரை உள்ளிட்டவைகள் மூடப்பட்டிருந்தன. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை முதல் ஹோட்டல்கள், கடற்கரை உள்ளிட்டவைகள் சில விதிமுறைகளுடன் திறக்கப்படுகின்றன. அதன்படி அனைத்து வெளிப்புற இடங்களிலும் 5 அல்லது அதற்கு குறைவானவர்கள் மட்டுமே ஒன்று கூட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேவேளை நீச்சல்,…

மேலும்...

முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சாரம் – இந்திய தொலைக்காட்சி சேனல்களுக்கு தடை கோரும் துபாய் மீடியா!

துபாய் (08 மே 2020): முஸ்லிம்களுக்கு எதிராக தொடர்ந்து அவதூறு பரப்பி வரும் இந்திய தொலைக்காட்சி சேனல்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஐக்கிய அரபு அமீரக நாளிதழ் கோரிக்கை வைத்துள்ளது. கல்ஃப் நியூஸ் என்ற புகழ் பெற்ற நாளிதழ் புதன் அன்று வெளியிட்ட சிறப்பு கட்டுரையில் முஸ்லிம்களுக்கு எதிரான நச்சுக்கருத்துக்களை பரப்பி வரும் இந்திய தொலைக்காட்சி சேனல்களான, ஜீ நியூஸ், ரிபப்ளிக் டிவி, இந்தியா டிவி, ஆஜ் தக், ஏபிபி உள்ளிட்ட சேனல்களை தடை விதிக்க…

மேலும்...

ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து 181 பயணிகளுடன் முதல் விமானம் கொச்சி வருகை!

கொச்சி (07 மே 2020): கொரோனாவால் உலகமே பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 181 பயணிகளுடன் முதல் விமானம் அபுதாபியிலிருந்து வியாழன் இரவு கொச்சி விமான நிலையம் வந்திறங்கியது. உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸால் 200 க்கும் மேற்பட்ட நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் வளைகுடா நாடுகளும் அடங்கும். மேலும் கொரோனா பரவல் காரணமாக விமான போக்குவரத்து தடை பட்டுள்ளது. இதனால் பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் நாடு திரும்ப முடியாமல் சிக்கி தவித்து வருகின்றனர். இவ்வாறு பல்வேறு நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க…

மேலும்...

அதிகாலை பாங்கு அழைப்பு என்னை ஏதோ செய்தது – இஸ்லாத்தை தழுவிய பெண் நெகிழ்ச்சி!

துபாய் (25 ஏப் 2020): “இஸ்லாம் என்னை ஏதோ செய்தது. நான் கிறிஸ்தவராக இருந்தபோது இல்லாத நிம்மதி இப்போது உள்ளது. இஸ்லாத்தை ஏற்றதை மிகவும் பெருமையாகவும் உணர்வுப் பூர்வமாகவும் நினைக்கிறேன்” என்கிறார் ஹதீஜா (முன்னாள் ஷெர்லி ரோட்ரிகுஸ்). ஸ்பானிஷ் கியூபனை சேர்ந்த ஹதீஜா கடந்த ஆண்டு இஸ்லாம் மதத்திற்கு மாறினார். துபாய் வந்த பிறகு அவர் இஸ்லாம் குறித்து தெரிந்து கொண்டதாகவும், அதுகுறித்த அனுபவத்தையும் அவர் பகிர்ந்து கொள்கிறார். “நான் கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்தேன். சிறு வயதில்…

மேலும்...

இனியும் இன்னொரு ஹிட்லர் வேண்டாம் – புதிய காந்திதான் வேண்டும்: ஹிந்த் அல் காசிமி!

துபாய் (23 ஏப் 2020): கோவிட் 19 உலகையே அச்சுறுத்திக் கொண்டு இருக்கும் நிலையில், இந்தியாவில் மட்டும் இந்த நோய் பரவ முஸ்லிம்கள்தான் காரணம் என்பதாக இந்துத்வா கொள்கை வாதிகளும், ஊடகங்களும் நச்சுக் கருத்துகளை பகிர்ந்து வருகின்றன. 2014 ஆம் ஆண்டு பாஜக ஆட்சி அமைந்தது முதலே இந்திய முஸ்லிம்கள் அடைந்து வரும் சஞ்சலங்களையும், அடக்குமுறைகளையும் உலக நாடுகள் கண்டு கொண்டதாக தெரியவில்லை. ஆனால் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களிலும் இன்னும் சில ஊடகங்களிலும் இந்திய…

மேலும்...

ஹலோ சோனு நிகாம் துபாயில் பாங்கோசை கேட்குதா? – வச்சு செய்யும் நெட்டிசன்கள்!

துபாய் (22 ஏப் 2020): இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு எதிரான இந்துத்வாவினரின் செயல்பாடுகள் தற்போது உலக அளவில் பேசுபொருளாகியுள்ளது. 2014ல் பாஜக ஆட்சி அமைந்தது முதல் இன்று வரை இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகள், படுகொலைகள் என எல்லாம், தற்போது உலக அளவில் பேசுபொருளாகியுள்ளது. கொரோனாவை மறந்து பலரும் இதில் கவனம் செலுத்த தொடங்கிவிட்டனர். போதாதற்கு இந்துத்வா ஆதரவு சினிமா கலைஞர்கள், தலைவர்கள் முதல் சாதாரண இந்துத்வா பதிவாளர்கள் வரையிலான ட்விட்டர் பதிவுகள் தோண்டி எடுக்கப்பட்டு விமர்சனத்திற்கு…

மேலும்...

முஸ்லிம்களுக்கு எதிரான சமூக வலைதள பதிவுகள் – துபாய் இந்திய தூதுவர் எச்சரிக்கை!

துபாய் (21 ஏப் 2020): முஸ்லிம்களுக்கு எதிரான பதிவுகள் பதிபவர்களுக்கு துபாய் இந்திய தூதுவர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். உலகே கொரோனாவை எதிர்த்து போராடி வரும் நிலையில், இந்தியாவில் கொரோனா பரவ முஸ்லிம்களே காரணம் என்பதாக இந்துத்வாவினரால் தவறான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக வளைகுடாவில் வசிக்கும் இந்துத்வா சிந்தனை கொண்டவர்களும் முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பூட்டும் பதிவுகளை சமூக வலைதளங்களில் பதிந்து வருகின்றனர். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. வளைகுடா நாட்டினர் பலரும், இந்திய அரசு இவர்கள்…

மேலும்...