ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு பள்ளிகள் திறப்பு குறித்து ஆலோசனை!

புதுடெல்லி (07 ஜூன் 2020): நாடு முழுவதும் வரும் ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்களை திறப்பது குறித்து ஆலோசிக்‍கப்பட்டு வருவதாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்‍கையாக கடந்த மார்ச் மாதம் 24-ம் தேதி நள்ளிரவு நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்‍கப்பட்டது. தற்போது 5-ம் கட்டமாக வரும் 30-ம் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்‍கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகள் அளிக்‍கப்பட்டுள்ளன. இந்நிலையில், கடந்த மார்ச் மாதத்துடன்…

மேலும்...

மாணவனின் மதம் என்ன என்று கேட்ட பள்ளி நிர்வாகம் மீது மாணவனின் தந்தை ஆவேசம்!

திருவனந்தபுரம் (22 பிப் 2020): கேரளாவில் பள்ளியில் சேர்க்கச் சென்ற மகனின் மதம் என்ன என்று கேட்டதால் பள்ளி நிர்வாகம் மீது ஆவேசம் அடைந்தார் நசீம் என்பவர். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் நசீம். இவரது மனைவி தன்யா. இந்த தம்பதியின் மகனை 1-ம் வகுப்பில் திருவனந்தபுரத்தில் உள்ள அரசு உதவிபெறும் மேல் நிலைப்பள்ளியில் சேர்க்க முடிவு செய்தனர். அந்த பள்ளியின் விண்ணப்பத்தை அவர் நிரப்பியபோது அதில் மதம் என்று இருந்த இடத்தில் மதத்தின் பெயரை குறிப்பிட…

மேலும்...

அஸ்ஸாமில் மதரஸா மற்றும் சமஸ்கிருத பள்ளிகளை மூட அரசு முடிவு!

கவுஹாத்தி (13 பிப் 2020): அஸ்ஸாமில் உள்ள இஸ்லாமிய மதரஸாக்கள் மற்றும் சமஸ்கிருத பள்ளிகளை மூட அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. அஸ்ஸாம் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. அங்கு உள்ள 614 மதரஸாக்களையும், 101 சமஸ்கிருத பள்ளிகளையும் மூடவுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. மேலும் அவை அனைத்தும் மேல்நிலைப் பள்ளிகளாக மாற்றப்படும் என்றும் முடிவெடுக்கப் பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தெரிவித்த அம்மாநில கல்வி அமைச்சர் ஹிமாந்த பிஸ்வா சர்மா, “அரபி மதரஸாக்களில் பயில்வோர்கள் அரசு வேலைக்கு…

மேலும்...

குடியுரிமை சட்டம் தொடர்பான நாடகம் – பள்ளி தலைமை ஆசிரியை கைது!

பெங்களூரு (01 பிப் 2020): குடியுரிமை சட்டத்தை விமர்சித்து பள்ளி விழாவில் நிகழ்த்தப்பட்ட நாடகம் தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார். கர்நாடகாவில், பிடார் மாவட்டத்தில் உள்ள, ஷாஹீன் பள்ளியில், நடந்த விழாவில் கடந்த மாதம், 21 ல் மாணவர்களின் நாடகம் நடைபெற்றது. அதில், குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக விமர்சிக்கப் பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து, நீலேஷ் ரக் ஷயால் என்பவர், போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, சில தினங்களுக்கு முன், ஷாஹீன்…

மேலும்...

ஆண்டுவிழா நாடகம் போட்ட பள்ளிக்கூடம் மீது தேச துரோக வழக்கு பாய்ந்தது!

பெங்களூரு (29 ஜன 2020): பள்ளி ஆண்டு விழாவில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நகைச்சுவை நாடகம் போட்ட பள்ளி நிர்வாகம் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவில் உள்ள ஷஹீன் பள்ளியில் கடந்த 21 ஆம் தேதி நடைபெற்ற ஆண்டுவிழாவின் போது மாணவர்களின் கலை நிகழ்ச்சியாக 4 ஆம் வகுப்பு மாணவர்கள் நகைச்சுவை நாடகம் ஒன்றை அரங்கேற்றினர். அந்த நாடகத்தில் குடியுரிமை சட்டத்தை விமர்சித்ததாக கூறப்படுகிறது. இதனால் அரசின் சட்டத்தை அவமதிக்கும் விதமாக இருப்பதாக…

மேலும்...

குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக மாணவர்களை தவறாக வழிநடத்தும் பள்ளி!

அஹமதாபாத் (09 ஜன 2020): குஜராத்தில் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக பிரதமருக்கு கடிதம் எழுத வேண்டும் என மாணவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். அஹமதாபாத் லிட்டில் ஸ்டார் பள்ளியில் 6 முதல் 10 வகுப்பு மாணவர்கள் போஸ்ட் கார்டில் பிரதமருக்கு குடியுரிமை சட்டத்தை ஆதரித்து கடிதம் எழுத கட்டாயப் படுத்தப்பட்டுள்ளனர். ஆசிரியர்கள் ஒவ்வொரு மாணவர்களிடமும் போஸ்ட் கார்டை கொடுத்து அவர்கள் போர்டில் எழுதும் வாக்கியத்தை மாணவர்கள் அனைவரும் எழுத வேண்டும் என்றும் இது பயிற்சிதான் என்பதாகவும் பொய்யான வகையில் மாணவர்களை…

மேலும்...