கொரோனா தொற்று காரணமாக முன்னாள் கிரிக்கெட் வீரர் மரணம்!

பெஷாவர் (15 ஏப் 2020): கொரோனா தொற்று காரணமாக பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜாஃபர் சர்ஃபராஸ் (50) உயிரிழந்தார். கொரோனா தொற்று காரணமாக ஜாஃபர் சர்ஃபராஸ் கடந்த 3 நாட்களாக பெஷாவரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் வென்டிலேட்டரில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று அவர் உயிரிழந்ததை அவரது குடும்பத்தினர் உறுதி செய்துள்ளனர். பாகிஸ்தானில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட முதல் கிரிகெட் வீரர் சர்ஃபராஸ். இவர் 1988 ஆம் ஆண்டு கிரிக்கெட்டில்…

மேலும்...

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு கொரோனா பாதிப்பு இல்லை – பாகிஸ்தான் அரசு விளக்கம்!

இஸ்லாமாபாத் (28 மார்ச் 2020): பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக வெளியான தகவல் உண்மையில்லை என்று பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. உலகை புரட்டிப் போட்டுள்ள கொரோனா வைரஸ் பரவும் வேகத்தைக் காட்டிலும் அதுகுறித்த வதந்திகள் மிக வேகமாக பரவி வருகின்றன. அந்த வகையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக ஒரு வதந்தி பரவியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து பாகிஸ்தான் அரசு விளக்கம் அளித்துள்ளது. அதில், “இம்ரான் கான் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக வெளியான தகவல்…

மேலும்...

இந்தியா உள்ளிட்ட 28 நாடுகளுக்கான பயணத்திற்கு சவூதி அரேபியா தற்காலிக தடை!

ரியாத் (12 மார்ச் 2020): கொரோனா வைரஸ் எதிரொலியாக சவூதி அரேபிய இந்தியா உள்ளிட்ட 28 நாடுகளுக்கான பயணத்திற்கு தற்காலிக தடை விதித்துள்ளது. கொரோனா வைரஸ் உலகமெங்கும் பரவி வரும் நிலையில், சவூதி அரேபியாவிலும் கொரோனா வைரஸ் 21 பேருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் ஒருவர் நிவாரணம் பெற்றுள்ளார். இந்நிலையில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 28 நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள சவூதி அரசு தற்காலிக தடை விதித்துள்ளது. ஏற்கனவே உம்ரா, மற்றும் சுற்றுலா விசாவில்…

மேலும்...

பாகிஸ்தான் ரெயில் படத்தை பயன்படுத்தி அசிங்கப்பட்ட குஜராத்!

அஹமதாபாத் (03 மார்ச் 2020): ரெயில் பயணிகள் பாதுகாப்பு குறித்த செயலி (APP) ஐ அறிமுகப்படுத்திய குஜராத் ரெயில்வே காவல்துறை அந்த ஆப்பில் பாகிஸ்தான் ரெயில் புகைப்படத்தைப் போட்டு அசிங்கப்பட்டுள்ளது. ”Surakshit Safar” என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆந்த ஆப்பில் பாகிஸ்தான் ரெயில் புகைப்படத்தைப் போட்டதோடு அதனை பலருக்கு பகிரவும் செய்தது. இதனைக் கண்ட பொதுமக்கள் அதிர்சி அடைந்து, சமூக வலைதளங்களில் விமர்சிக்கத் தொடங்கினர். இதனை அடுத்து குஜராத் ரெயில்வே போலீஸ் அந்த படத்தை நீக்கியுள்ளது. இந்த…

மேலும்...

சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தினால் கடும் நடவடிக்கை – இம்ரான் கான் எச்சரிக்கை!

இஸ்லாமாபாத் (27 பிப் 2020): பாகிஸ்தானில் வசிக்கும் இஸ்லாமியர் அல்லாத சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் கடும் நட்வடிக்கை எடுக்கப்படும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எச்சரித்துள்ளார். இந்தியாவில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நடந்த அமைதி வழி போராட்டத்திற்கு எதிராக இந்துத்வாவினர் வன்முறையில் ஈடுபட்டதால் டெல்லி போர்க்களமாக காட்சி அளிக்கிறது. இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் பாகிஸ்தானில் சிறுபான்மையினர் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் ட்விட்டரில் இம்ரான் கான் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “பாகிஸ்தானில் வசிக்கும்…

மேலும்...

பாகிஸ்தானுக்கு ஆதரவாக உளவு பார்த்த இந்திய கடற்படை வீரர்கள் கைது – அமைதி காக்கும் ஊடகங்கள்!

மும்பை (21 பிப் 2020): பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பிற்கு ஆதரவாக உளவு பார்த்த இதிய கடற்படை வீரர்கள் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மும்பை, கார்வா, விசாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் என்.ஐ.ஏ இவர்களை கைது செய்துள்ளது. கைதானவர்கள், சதீஸ் மிஸ்ரா, தீபக் திரிவேதி, ரிங்கோ தியாகி, தேவ் குப்தா, சஞ்சீவ் குமார், பப்லு சிங், ராகுல் சிங், சஞ்சய் ராவத், ரிஸி மிஸ்ரா மற்றும் வேத்ராம் ஆகியோர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பல்வேறு ஆதாரங்களின் அடிப்படையில்…

மேலும்...

வெங்காயம், தக்காளி விற்பீர்கள்! கிரிக்கெட் விளையாட மாட்டீர்களா? – சுஐப் அக்தார் சரமாரி கேள்வி!

இஸ்லாமாபாத் (18 பிப் 2020): இந்தியா பாகிஸ்தான் இடையே வியாபார உறவுகள் உள்ள நிலையில் ஏன் கிரிக்கெட் விளையாடக் கூடாது? என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் சுஐப் அக்தார் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், இரு நாடுகளுக்கும் இடையில் கூடிய விரைவில் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்தியா, பாகிஸ்தான் இடையில் வர்த்தகம் நடைபெற்று வருவதையும் மற்ற விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுவதையும் சுட்டிக்காட்டிய அக்தர், ஏன் கிரிக்கெட் போட்டிகள் மட்டும் நடத்தப்படுவதில்லை என்று…

மேலும்...

பாகிஸ்தானில் நாங்கள் நிம்மதியாகவே இருக்கிறோம் – இந்தியா வந்துள்ள பாக் இந்துக்கள் கருத்து!

ஹரித்வார் (18 பிப் 2020): பாகிஸ்தானில் நாங்கள் நிம்மதியாகவே வாழ்கிறோம் என்று பாகிஸ்தானிலிருந்து அரித்வார் வந்துள்ள இந்து பக்தர்கள் தெரிவித்துள்ளனர். இந்தி பத்திரிகை ஒன்றிற்கு அவர்கள் அளித்துள்ள பேட்டியில், இந்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் ஒரு அரசியல் விளையாட்டு என்று தெரிவித்துள்ள அவர்கள், உண்மையில் பாகிஸ்தான் இந்துக்கள் மீது இந்திய அரசுக்கு அனுதாபம் இருப்பின், இந்தியா வரும் இந்துக்களுக்கு விசா நடைமுறைகளை இலகுவாக்கினாலே போதும். என்றனர். நாங்கள் இந்தியாவுக்கு யாத்திரை வரவேண்டும் என்றல்…

மேலும்...

இந்தியாவின் தற்போதைய நிலை குறித்து சர்வதேச சமூகம் தலையிட இம்ரான் கான் கோரிக்கை!

இஸ்லாமாபாத் (18 பிப் 2020): இந்தியாவின் தற்போதைய நிலை குறித்து சர்வதேச சமூகம் தலையிட வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் அகதிகளுக்கு பாகிஸ்தான் 40 ஆண்டுகளாக அடைக்கலம் அளித்து வருவது தொடா்பான 2 நாள் சா்வதேச மாநாடு, இஸ்லாமாபாதில் திங்கள்கிழமை தொடங்கியது. இதில், ஐ.நா. பொதுச் செயலாளா் அன்டோனியோ குட்டெரெஸ் பங்கேற்றுள்ளாா். அவா் முன்னிலையில், பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கான் பேசியதாவது: இந்தியாவின் தற்போதைய கொள்கைகளால், அங்கிருந்து முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்கு இடம்பெயர…

மேலும்...

இது இந்தியாவல்ல பாகிஸ்தான் – பாகிஸ்தான் நீதிமன்றம் பாய்ச்சல்

இஸ்லாமாபாத் (17 பிப் 2020): பாகிஸ்தானில் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்துள்ள நீதிமன்றம் “இது பாகிஸ்தான், இந்தியாவல்ல”என்றும் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் மனித உரிமைகள் தலைவர் மன்சூர் பஸ்தீன் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய 23 பேர் கடந்த மாதம் இஸ்லாமாபாத் போலீசாரால் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். இவர்களின் ஜாமீன் மீதான மனு விசாரணையின்போது இஸ்லாமாபாத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அதார் மினல்லா பிறப்பித்த…

மேலும்...