50 வருடங்களாக மசூதியை பராமரித்து வரும் இந்து குடும்பத்தினர்!
கொல்கத்தா (20 பிப் 2022): மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானாஸில் மத நல்லிணக்கத்தைப் பேணும் வகையில் அங்குள்ள பராசத்தில் உள்ள அமனாதி மசூதியின் பராமரிப்பாளர்களாக கடந்த 50 ஆண்டுகளாக ஒரு இந்து குடும்பம் செயல்பட்டு வருகிறது. வடக்கு 24 பர்கானாவின் பராசத்தை சேர்ந்த மூத்த குடிமகன் தீபக் குமார் போஸ் மற்றும் அவரது மகன் பார்த்த சாரதி போஸ் ஆகியோர் தற்போதைய சூழலில் இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றனர். இந்துக்களின் ஆதிக்கம் நிறைந்த நாபோபள்ளி பகுதியில்…