BREAKING NEWS :துருக்கியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

இஸ்தான்பூல் (25 ஜன 2020): துருக்கியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. துருக்கியின் மேற்கு பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் வெள்ளிக்கிழமை இரவு 08:55 ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் ஈரான் லெபனான் மற்றும் சிரியாவிலும் உணரப்பட்டுள்ளது.

மேலும்...
உக்ரைன் விமான விபத்து

உக்ரைன் விமானத் தாக்குதல் பற்றி ஈரான் கூடுதல் தகவல்!

ஈராக் (21 ஜன 2020): உக்ரைன் பயணிகள் விமானத்தை தாங்கள் சுட்டு வீழ்த்தியதாக ஈரான் ஒப்புக் கொண்ட நிலையில், இரண்டு ஏவுகணைகள் விமானத்தை தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஈரானின் போக்குவரத்துத் துறை, முதற்கட்ட விசாரணை அறிக்கையை வெளியிட்டுள்ளது. 176 பயணிகளின் உயிா்களை பலி வாங்கிய இந்த விமான விபத்துக்கு இயந்திரக் கோளாறுதான் காரணம் என்று விபத்து நடந்தபோது கூறி வந்தது ஈரான். மூன்று நாட்கள் கடந்த…

மேலும்...

மிதக்கும் ஹோட்டல்கள்: புதுமை படைக்கிறது கத்தார்!

கத்தார் (20 ஜன 2020): புதுப்புது திட்டங்களை உருவாக்கி செயல்படுத்துவதில் முன்னணி நாடாகத் திகழும் (தோஹா) கத்தாரில், மிதக்கும் ஹோட்டல்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. எதிர்வரும் சர்வதேச 2022 FIFA விளையாட்டுப் போட்டிகளை முன்னிட்டு, பல்வேறு கட்டுமானப் பணிகளையும் புதிய விரிவாக்கப் பணிகளையும் நாடு முழுக்க துரிதமாகச் செய்து வருகிறது கத்தார். அதன் ஒரு அங்கமாக, கத்தாரின் கெடைஃபேன் தீவில் 1,616 அறைகளைக் கொண்ட பிரம்மாணமான மிதக்கும் ஹோட்டல்கள் அமைக்கப் பட்டு வருகின்றன. கத்தாரா நிறுவனம் இதற்கான உரிமையைப்…

மேலும்...

அபுதாபியில் ஏற்பட்ட சாலை விபத்தில் ஆறு பேர் பலி!

அபுதாபி (16 ஜன2020): ஐக்கிய அரபு அமீரகம் அபுதாபியில் ஏற்பட்ட சாலை விபத்தில் ஆறுபேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். வியாழன் காலை அல் ரஹானா கடற்கரை சாலையில் பெரிய ட்ரக்கும், லாரியும் நேருக்கு நேர் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். 19 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். தகவல் அறிந்து போக்குவரத்து காவல்துறை சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாதிக்கப் பட்டவர்களை அவசர ஊர்திகள் மூலம் மருத்துவமனைகளூக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர்களில் ஐந்து பேர்…

மேலும்...

ஓமன் நாட்டில் பலத்த மழை!

மஸ்கட் (16 ஜன 2020): ஓமன் நாட்டில் பலத்த மழை பெய்துள்ளது. ஓமனில் புதன்கிழமை பெய்த மழையால் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. சேத விவரங்கள் குறித்து தகவல் இல்லை. கடந்த 24 மணி நேரத்தில் 139 மி.மீ. மழை பெய்துள்ளதாக ஓமன் வானிலை மையம் தெரிவித்துள்ளது. மழையால் பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவ அவசர உதவி துறைகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே வியாழன் அன்றும் மழை தொடரும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

மேலும்...

துபாய் மக்களுக்கு எச்சரிக்கை!

துபாய் (14 ஜன 2020): துபாயில் செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. “ஐக்கிய அரபு அமீரகத்தின் பல பகுதிகளில், செவ்வாய்க்கிழமை பகல் 11 மணிக்கு தொடங்கும் மழை புதன் கிழமை வரை நீடிக்கும்” என்று துபாய் வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே வியாழன் மற்றும் ஞாயிற்றுக் கிழமை பலத்த மழை பெயத நிலையில் மேலும் மழை தொடரும் என்று எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.

மேலும்...

அமெரிக்க ஈரான் பதற்றம் – அமெரிக்க துருப்புகள் மீது ஈரான் ராக்கெட் தாக்குதல்!

பாக்தாத் (13 ஜன 2020): ஈராக் விமானப்படை தளம் மீது, அமெரிக்க ராணுவத்தை குறிவைத்து ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து அமெரிக்கா – ஈரான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஈரான் ராணுவத்தின் முக்கிய தளபதியான குவாசிம் சுலைமானியை அமெரிக்கா தாக்குதல் நடத்தி கொன்றபின், இரு நாடுகளுக்கிடையே போர் அபாயம் ஏற்பட்டுள்ளது. ‘இதற்கு பழிக்கு பழி வாங்குவோம்’ என ஈரானும் கூறியது. இந்நிலையில் ஈராக்கின் பாக்தாக் அமெரிக்க வீரர்களை குறி வைத்து ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக செய்தி…

மேலும்...
உக்ரைன் விமான விபத்து

உக்ரைன் விமானத்தைத் தகர்த்தது நாங்கள் தான் – ஈரான் அதிர்ச்சி ஒப்புதல்!

தெஹ்ரான் (11 ஜன 2020): அமெரிக்கப் படைகளை நோக்கி ஏவிய ஏவுகணை, தவறுதலாக உக்ரைன் நாட்டுக்குச் சொந்தமான பயணிகள் விமானத்தைத் தாக்கியது உண்மைதான் என ஈரான் சற்றுமுன் ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பான கூடுதல் விபரங்கள்: ஈரானில் உக்ரைன் விமானம் விழுந்து நொறுங்கியதில் அதில் பயணம் மேற்கொண்ட 176 பேரும் உயிரிழந்தனர். தொழில் நுட்பக் கோளாறு காரணமாக விமான விபத்து ஏற்பட்டதாக கூறப்பட்டு வந்தது. ஈரானின் ஏவுகணை தாக்குதல் காரணமாக இருக்கலாம் என்று வதந்திகள் பரவி வந்தது….

மேலும்...

ஓமன்(மஸ்கட்) அதிபர் மரணம்!

மஸ்கட் (11 ஜன 2020): ஓமன் நாட்டின் அதிபர் சுல்தான் காபூஸ் பின் சயீத் அல் சயீத்(79) உடல் நலக்குறைவால் காலமானார். வளைகுடா நாடுகளில் அதிக ஆண்டுகள் மன்னராக இருந்தவர் என்று பெயர் பெற்ற சுல்தான் காபூஸ், 1970 லிருந்து ஓமன் நாட்டின் மன்னராக இருந்து வந்தவர். இந்தியாவில் படித்த சுல்தான் காபூஸ் முன்னாள் குடியரசு தலைவர் சங்கர் தயாள் சர்மாவின் மாணவர். சங்கர் தயாள் சர்மா ஓமன் நாட்டிற்கு வந்தபோது, மரபை மீறி நேரடியாக விமான…

மேலும்...

துபாயில் இடியுடன் கூடிய பலத்த மழை – வீடியோ!

துபாய் (11 ஜன 2020): துபாய் அல் அய்ன் பகுதியில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்துள்ளது. வெள்ளிக்கிழமை வானம் மேகமூட்டமாகவே காணப்பட்டது. இந்த நிலையில், இரவு இடி சத்தத்துடன் மழை பெய்துள்ளது. சமூக வலைதளங்களில் இதன் வீடியோக்கள் வெளியாகியுள்ளது.

மேலும்...