தொடரும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் உயிரிழப்புகள்!

புதுடெல்லி (14 மே 2020): கொரோனா ஊரடங்கை காரணமாக புலம் பெயர் தொழிலாளர்களின் வாழ்வாதாரங்கள் தொடர்ந்து கேள்விக்குறியாகி உள்ளது. இதையடுத்து அவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது தொடர்ந்து வருகிறது. மராட்டிய மாநிலத்தில் இருந்து சுமார் 70 தொழிலாளர்களைக் ஏற்றிய லாரி ஒன்று உத்தரபிரதேசம் சென்று கொண்டிருந்தது. அதில் பயணித்த தொழிலாளர்களில் பெரும்பாலோர் உத்தரபிரதேசத்தின் உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். அதிகாலை 3 மணியளவில் லாரி மத்திய பிரதேசம் குணாவில் ஒரு பைபாஸ் சாலையில் சென்று கொண்டு இருந்த…

மேலும்...

வீண் விளையாட்டு விபரீதமானது – நான்கு இளைஞர்கள் பரிதாப பலி!

ராணிப்பேட்டை (15 மார்ச் 2020): ராணிப்பேட்டை அருகே லோடு வேன் ஓட்டும் போது ரேஸ் போக நினைத்து வேன் கட்டுப்பாட்டை இழந்ததால் நான்கு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே உள்ள ஆஜிப்பேட்டை பகுதியை சேர்ந்த 8 இளைஞர்கள் இரவு நேரத்தில் லோடு வேனில் விளையாட்டாக ரேஸ் செல்ல முயன்றுள்ளனர். அதிவேகமாக சென்ற மினி வேன் ஆஜிப்பேட்டை வலைவு சாலையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் அருகே இருந்த சுவரின் மீது மோதி விபத்துக்குள்ளனது….

மேலும்...

கர்நாடகம் சென்ற தமிழகத்தை சேர்ந்த 10 பேர் விபத்தில் பலி!

கிருஷ்ணகிரி (06 மார்ச் 2020): கர்நாடகாவில் உள்ள தர்மஸ்தாலா கோயிலுக்கு சென்ற தமிழகத்தை சேர்ந்த 10 பக்தர்கள் விபத்தில் பலியாகியுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சீக்கணப்பள்ளி கிராமத்தை சேர்ந்த 10 பேர் காரில் கர்நாடகத்தின் தர்மஸ்தாலா கோயில் சென்றிருந்தனர். சாமி தரிசனம் செய்துவிட்டு அவர்கள் அனைவரும் காரில் நள்ளிரவு தமிழகம் திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் வந்த கார் தும்கூர் அருகே குனிகல் பகுதியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவில் இருந்த தடுப்பு மீது மோதியது….

மேலும்...

அருப்புக்கோட்டை அருகே ஏற்பட்ட கார் விபத்தில் மூவர் பலி!

அருப்புக்கோட்டை (29 பிப் 2020): அருப்புக்கோட்டை அருகே சரக்கு வாகனம், கார் மோதிக்கொண்ட விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழந்தனர். அருப்புக்கோட்டை அருகே சரக்கு வாகனமும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் மாரி (55), பழனியம்மாள் (28), விஜயலட்சுமி (32) ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தில் சரக்கு வாகனத்தில் சென்ற மேலும் 17 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயமடைந்த அனைவரும் மீட்கப்பட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக…

மேலும்...

பாதுகாப்பற்ற திரைப்பட படபிடிப்பு தளங்கள் – இதுவரை ஏழுபேர் பலி!

X சென்னை (22 பிப் 2020): சென்னையில் பாதுகாப்பு இல்லாத திரைப்பட படப்பிடிப்புகளால் கடந்த மூன்று ஆண்டுகளில் ஏழு உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. அண்மைக்காலமாக திரைப்பட படப்பிடிப்பில் நிகழும் விபத்துகள், அத்துறையினரை அதிா்ச்சியடைய வைத்துள்ளது. தமிழக திரைப்படத்துறையை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமாா் 5 லட்சம் தொழிலாளா்கள் உள்ளனா். சென்னையில் ஒரு காலத்தில் கிழக்கு கடற்கரைச் சாலை, மாமல்லபுரம் பகுதிகளில் அதிகமாக நடைபெற்ற வெளிப்புற திரைப்பட படப்பிடிப்புகள் இன்று வேறு பகுதிகளுக்கு நகா்ந்துள்ளன. மேலும் வளா்ந்து வரும் தொழில்நுட்பத்தின்…

மேலும்...

நானும் செத்துப்போயிருப்பேன் – நடிகர் கமல் உருக்கம்!

சென்னை (20 பிப் 2020): இந்த விபத்தில் நானும் இறந்திருக்கக் கூடும் என்று இந்தியன் 2 படப் பிடிப்பில் ஏற்பட்ட விபத்து குறித்து நடிகர் கமல் பேட்டியளித்தார். கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் நேற்று ஏற்பட்ட விபத்தில் 3 உதவி இயக்குநர்கள் உயிரிழந்தனர். 10-க்கும் மேற்பட்டோர் பேர் காயமடைந்தனர். இந்த படப்பிடிப்பு தளத்தில் நடிகர் கமல், கஜல் அகர்வால் உள்ளிட்டோரும் இருந்துள்ளனர். இதுகுறித்து நடிகர் கமல் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், “100 கோடிகள், 200 கோடிகள்…

மேலும்...

திருப்பூர் அருகே பயங்கரம்- பேருந்து கண்டெய்னர் லாரி மோதி விபத்துக்குள்ளானதில் 19 பேர் பலி!

சேலம் (20 பிப் 2020): அவிநாசிதேசிய நெடுஞ்சாலையில் கேரள அரசு பேருந்தும்- கண்டெய்னர் லாரியும் மோதிக்கொண்டதில் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சேலத்தில் இருந்து கேரள மாநிலம் ஆலப்புழா நோக்கிச் சென்று கொண்டிருந்த கேரள அரசு சொகுசு பேருந்தும் கேரளாவில் இருந்து சேலம் நோக்கி வந்து கொண்டிருந்த கண்டெய்னர் லாரியும் அவிநாசி அருகே நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பெண்கள் உட்பட 13 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 23 பேர் காயமடைந்தனர். அவிநாசி காவல்…

மேலும்...

சுற்றுலா சென்ற இந்தியர்களுக்கு நிகழ்ந்த சோகம்!

நேபாள் (22 ஜன 2020): நேபாளத்திற்கு சுற்றுலா சென்ற 8 இந்தியர்கள் சொகுசுபங்களாவில் ஏற்பட்ட விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். நேபாளத்தில் உள்ள பிரபல சுற்றுலாத்தளமான போகாராவிற்கு, கேரளாவைச் சேர்ந்த 15 சுற்றுலாப்பயணிகள் சென்றிருந்தனர். அவர்கள் காத்மாண்டுவில் உள்ள சொகுசு விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கியிருந்தனர். அந்த அறைகளில் எரிவாயுவில் இயங்கும் ஹீட்டர்கள் பயன்படுத்தப்பட்டதாக தெரிகிறது. அதிலிருந்து எரிவாயு கசிந்ததில் அங்கு தங்கியிருந்த 8 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். அறையில் போதிய காற்றோட்டம் இல்லாததால், மூச்சுத்திணறல் ஏற்பட்டு…

மேலும்...

நடிகை குணமடைய மோடி பிரார்த்தனை!

புதுடெல்லி (19 ஜன 2020): கார் விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் நடிகை சபானா ஆஸ்மி குணமடைய பிரதமர் மோடி பிரர்த்திப்பதாக தெரிவித்துள்ளார். சனிக்கிழமை மாலை ஷபனா ஆஸ்மியின் கார் லாரி மீது மோதியது. அதன் பின்னர் லாரி டிரைவர் மற்றும் ஷபானா ஆஸ்மியின் டிரைவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளார். இந்தநிலையில் விபத்தில் படுகாயம் அடைந்த நடிகை சபானா ஆஸ்மி விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்த்தனை செய்வதாக பிரதமர் மோடி தனது…

மேலும்...

கார் விபத்தில் பிரபல நடிகை படுகாயம்!

மும்பை (18 ஜன 2020): கார் விபத்தில் இந்தி நடிகை ஷபானா ஆஸ்மி படுகாயம் அடைந்துள்ளார். மகாராஷ்டிர மாநிலம் மும்பை-புனே அதிவேக நெடுஞ்சாலை கலபூர் டோல் பிளாசா அருகே சென்று கொண்டிருந்த நடிகை ஷபானா ஆஸ்மியின் கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காயமடைந்த ஷபானா ஆஸ்மி,பன்வேலில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடன் அவரது கணவர் ஜாவித் அக்தாரும் சென்றுள்ளார். எனினும் அவருக்கு காயம் எதுவும் இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று (சனிக்கிழமை) மாலை 03;30…

மேலும்...