கத்தாரில் அனைத்து மசூதிகளும் காலவரையறை இன்றி மூடப்பட்டன!

தோஹா (17 மார்ச் 2020): வளைகுடா நாடுகளில் பிரபலமான கத்தார் நாட்டில் அனைத்து மசூதிகளும் இன்று முதல் காலவரையறை இன்றி மூடப்படுகின்றன. தினசரி முஸ்லிம்கள் தொழும் ஐவேளை தொழுகைகள் மட்டுமன்றி, வெள்ளிக் கிழமைக்கான சிறப்புத் தொழுகையும் நிறுத்தப்பட்டது. இதனை அரசு தரப்பில் AWQAF  சற்றுமுன் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் (COVID-19) தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கத்தார் நாடு அதிரடி மாற்றங்களைச் செய்து வருகிறது. மனிதர்கள் ஒருவருக்கொருவர் நெருங்கி இருப்பதன் மூலம் கொரோனா வைரஸ் பரவுவதால், மக்கள் கூட்டம்…

மேலும்...

குடிமகன்களுக்கு சோக செய்தி – டாஸ்மாக் அனைத்தும் மூடல்!

சென்னை (17 மார்ச் 2020): கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக டாஸ்மாக் கடைகளை மார்ச் 31 ஆம் தேதி வரை மூட. தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் பார்களை மூடவும் அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கவ் செய்யப்பட்டிருந்த நிலையில், தமிழக அரசு இவ்வாறு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று மாலை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மேலும்...

தமிழகத்தில் 1.8 லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை!

சென்னை (17 மார்ச் 2020): தமிழக விமான நிலையங்களில் நேற்று வரை மொத்தம் 1.8 லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. சீனா, ஈரான், இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் ஆயிரக்கணக்கில் உயிர் பலி வாங்கிவரும் கொரோனா, இந்தியாவிலும் இரண்டு உயிர்களை கொன்றுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா வைரஸ் தாக்குதலை…

மேலும்...

கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்து சோதனை – திங்கள் முதல் தொடக்கம்!

வாஷிங்டன் (16 மார்ச் 2020): கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்து சோதனை அமெரிக்காவில் திங்கள் முதல் தொடங்கியது. உலகை ஆட்டுவித்து வரும் கொரோனா வைரஸுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அமெரிக்காவும், சீனாவும் தடுப்பு ஊசி மருந்து தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில் ஆரம்ப நிலை தடுப்பு ஊசி மருந்து கண்டறியப்பட்டு முதல் தடுப்பு ஊசி மருந்து சோதனை திங்கள்கிழமை அமெரிக்காவில் பரிசோதிக்கப்படும் என்ற தகவலை அசோசியேட் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தத் தகவலை அமெரிக்க அதிகாரிகள்…

மேலும்...

இந்தியாவில் 15 நாட்களில் 110 பேர் கொரோனாவால் பாதிப்பு!

புதுடெல்லி (16 மார்ச் 2020): கொரோனா வைரஸ் இந்தியாவில் அதிகரித்து வருகின்றன. அரசாங்க புள்ளிவிவரங்களின்படி, நாட்டில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 110 ஆக உயர்ந்துள்ளது. சீனாவில் தொடங்கி உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் அதிக அளவில் மிரட்டி வருகிறது. தற்போதைய நிலவரப்படி 110 பேர் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 93 நோயாளிகள் இந்தியர்கள், 17 பேர் வெளிநாட்டினர். இதில் 13 பேர் சிகிச்சையின் பின்னர் குணமடைந்து வீட்டுக்குச் சென்றுள்ளனர். இரண்டு பேர்…

மேலும்...

வெளி மாநிலங்களுக்கு போகாதீங்க – முதல்வர் எச்சரிக்கை!

சென்னை (16 மார்ச் 2020): கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, தமிழக மக்கள் தேவையின்றி வெளி மாநிலங்களுக்குச் செல்ல வேண்டாம் என முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளாா். இதுகுறித்து தமிழக அரசு சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பு: தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு பயணிப்பதையும், பொது இடங்களில் அதிக எண்ணிக்கையில் கூடுவதையும் அடுத்த 15 நாள்களுக்கு பொதுமக்கள் தவிா்க்க வேண்டும். வயதானவா்கள், நோய்வாய்ப்பட்டவா்கள், குழந்தைகள் மற்றும் நோய் எதிா்ப்பு சக்தி குறைந்த நபா்கள் கூட்டம் நிறைந்த…

மேலும்...

கொரோனா வைரஸ் – ஸ்பெயினில் ஒரே நாளில் 100 பேர் மரணம்!

ஸ்பெயின் (15 மார்ச் 2020): கொரோனா வைரஸ் பாதிப்பால் ஸ்பெயினில் 24 மணி நேரத்தில் 100 பேர் மரணம் அடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதை முன்னிட்டு, நோயின் மையமாக ஐரோப்பா மாறியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்தது. ஐரோப்பாவில், இத்தாலிக்கு அடுத்தபடியாக, ஸ்பெயின் நாட்டில் வைரஸ் அதிதீவிரமாக பரவி வருகிறது. இதுவரை 7,753 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது. 288 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் ஸ்பெயியினில் கடந்த 24 மணி நேரத்தில் 100 பேர் உயிரிழந்துள்ளனர்….

மேலும்...

கொரோனா வைரஸுக்கு எதிராக ஒருங்கிணைந்து செயல்படுவோம்: பிரதமர் மோடி!

புதுடெல்லி (15 மார்ச் 2020): கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக ஒருங்கிணைந்து செயல்படுவோம் என காணொலி வாயிலாக நடைபெற்ற சார்க் நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். இந்த ஆலோசனை கூட்டத்தில் ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி, மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் முகமது சோலி, நேபாள பிரதமர் கேபி சர்மா ஒலி, இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, பூடான் பிரதமர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தெற்காசியாவில் கோவைட்-19 எதிர்கொள்வது குறித்து சார்க் நாடுகளுடன் இன்று(ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற…

மேலும்...

கொரோனா சந்தேகம் – அருகில் இருந்தும் இறந்த தந்தையின் உடலைபார்க்க முடியாமல் போன மகன்!

திருவனந்தபுரம் (15 மார்ச் 2020): கேரளாவில் இளைஞர் ஒருவர் அவருக்கு கொரோனா இருக்குமோ என்ற சந்தேகத்தால் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இறந்த அவரது தந்தையின் உடலைக் கூட பார்க்க முடியவில்லை. கட்டிலில் இருந்து கீழே விழுந்து சிகிச்சை பெற்று வந்த தனது தந்தையை பார்ப்பதற்காக, கத்தார் நாட்டில் பணிபுரியும் கேரளாவைச் சேர்ந்த லினோ அபெல் என்ற இளைஞர், கடந்த 8 ஆம் தேதி அவசரமாக சொந்த ஊர் திரும்பினார். கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்தவர் லினோ அபெல்,…

மேலும்...

கொரோனாவால் பரிதவித்த 289 பயணிகள் – கொச்சி விமான நிலையத்தில் பரபரப்பு!

கொச்சி (15 மார்ச் 2020): இங்கிலாந்தை சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவருக்கு கொரோனா அறிகுறி இருந்ததை அடுத்து கொச்சி விமான நிலையத்தில் அனைத்து பயணிகளும் எமிரேட்ஸ் விமானத்திலிருந்து வெளியெற்றப்பட்டனர். கொரோனா பீதி உலகையே அதிர வைத்துள்ளது. இந்தியாவில் முதலாவதாக கொரோனா பாதித்த மாநிலம் கேரளா. இந்நிலையில் கொச்சி விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 289 பயணிகளுடன் துபாய் புறப்பட்ட எமிரேட்ஸ் விமானம் தயாராக இருந்தது. அந்த விமானத்தில் இங்கிலாந்தில் இருந்து வந்த 19 பேர் கொண்ட…

மேலும்...