ஒரேயொரு வீடியோ கிளிப் – மத்திய அரசை மிரள வைத்த விவசாயிகள்!
புதுடெல்லி (29 ஜன 2021): உத்திர பிரதேச விவசாயிகள் திடீரென ஒன்று திரண்டு போராட்டத்தில் இணைந்துள்ளதால் மத்திய அரசு மேலும் நெருக்கடி நிலைக்கு உள்ளாகியுள்ளது. உத்திரபிரதேசத்தின் முசாபர்நகரில் பாரதிய கிசான் யூனியன் தலைவர் நரேஷ் டிக்கைட் கண்ணீர் விட்டு அழுதவாரு வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் “மத்திய அரசு விவசாயிகளை அழிக்க விரும்புகிறது, இது நடக்க நாம் அனுமதிக்கக் கூடாது. இது விவசாயிகளுக்கு எதிரான சதி சட்டம் திரும்பப் பெறவில்லை என்றால் தற்கொலை செய்துகொள்வதை விட வேறு…