மலேசியாவுக்கு உதவ இந்தியா முடிவு!

புதுடெல்லி (16 ஏப் 2020): மலேசியாவின் கோரிக்கையை ஏற்று ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தென்கிழக்காசியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நாடுகளில் மலேசியா 2-வது இடத்தில் இருக்கிறது. இந்தியாவில் தயாரிக்கப்படும் மலேரியா நோயை கட்டுப்படுத்தும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரையை கொரோனா சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படுகிறது. இதனால் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் இந்த ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரையை இந்தியாவிடம் இருந்து பெற்று வருகின்றன. தற்போது மலேசியாவும் இம்மாத்திரைகளை கோரியதால் இந்தியா வழங்குவதற்கு ஒப்புக் கொண்டுள்ளது. ஜம்மு…

மேலும்...

கொரோனா தொற்று குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுல்சில் அதிர்ச்சி தகவல்!

புதுடெல்லி (10 ஏப் 2020): இந்தியாவில் எந்த வித பயணமும் மேற்கொள்ளாமல், கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பு எதுவும் வைத்துக் கொள்ளாத நிலையில் 40 சதவீதத்தினர் கொரோனா தொற்றிற்கு ஆளாகி இருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவின் 15 மாநிலங்களில் 36 மாவட்டங்களில் நடைபெற்ற இந்த சோதனையில் மொத்தமாக பாதிக்கப்பட்ட 104 நபர்களில் 40 பேர் எவ்வித பயண வரலாற்றையும் கொண்டிருக்கவில்லை. இந்த குறிப்பிட்ட…

மேலும்...

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் திடீர் பல்டி!

வாஷிங்டன் (09 ஏப் 2020): இந்தியாவுக்கு மிரடல் விடுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் திடீரென பாராட்டு தெரிவித்துள்ளார். “மலேரியாவிற்கு பயன்படுத்தப்படும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யவில்லை என்றால், இந்தியா கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்” என்று அமெரிக்கா மிரட்டல் விடுத்திருந்தது. இதனை அடுத்து ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை அதிக அளவில் உற்பத்தி செய்து வரும் இந்தியா, அமெரிக்காவுக்கு உதவும் வகையில் அந்த மருந்தின் ஏற்றுமதிக்கு கடந்த மாா்ச் 25-ஆம் தேதி விதித்திருந்த தடையை நீக்கி உத்தரவிட்டது….

மேலும்...

இந்தியாவில் திடீர் ஊரடங்கு உத்தரவால் ஐந்து குழந்தைகள் உட்பட 17 பேர் மரணம்!

புதுடெல்லி (30 மார்ச் 2020): இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக தேசிய அளவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ள நிலையில் புலம்பெயரும் தொழிலாளர்கள் மற்றும் குழந்தைகள் 17 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் தொடங்கி உலகையே புரட்டிப் போட்டுள்ளது கொரோனா வைரஸ். இந்தியாவில் இதுவரை 1139 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 30 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் கடந்த 23 ஆம் தேதி பிரதமர் மோடி திடீரென நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார். ஆனால் இதுகுறித்து எந்தவித…

மேலும்...

ஊரடங்கு உத்தரவை மீறினால் இதுதான் நடக்கும் – மத்திய அரசு அதிரடி உத்தரவு!

புதுடெல்லி (29 மார்ச் 2020): கொரோனா தொற்று பரவுவதைத் தடுக்கும் நோக்கில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை மீறினால் 14 நாள்கள தனிமை முகாமில் இருக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஊரடங்கு ஆணையைத் திட்டவட்டமாகக் கடைப்பிடிக்கும் நோக்கில் இந்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டபோதிலும் பல இடங்களில் தேவையில்லாமல் மக்கள் வெளியே வந்து நடமாடுகின்றனர். இந்தப் புதிய அறிவிப்பின் மூலம் ஒருவேளை மக்கள் அநாவசியமாக வெளியே…

மேலும்...

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு – பலி எண்ணிக்கை 17 ஆக உயர்வு!

புதுடெல்லி (27 மார்ச் 2020): இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணம் உள்ளன. கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் திட்டமிடுகிறது. ஸ்பெயின், இத்தாலி மற்றும் அமெரிக்காவில் நிலைமை மிகவும் தீவிரமாகிவிட்டது இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணமே உள்ளன. இதுவரை இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 724 ஆக அதிகரித்துள்ளது. இதில் 47 பேர் வெளிநாட்டினர். மேலும் 17 பேர் பலியாகியுள்ளனர். இதில் மகாராஷ்டிராவில் 4 பேரும், குஜராத்தில் 3 பேரும், கர்நாடகாவில் 2…

மேலும்...

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 629 ஆக உயர்வு!

புதுடெல்லி (26 மார்ச் 2020): இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 629 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 12 ஆக உயரந்துள்ளது. எல்லைகளைக் கடந்த சவாலாக மாறி மனித குலத்தையே அலற வைத்துக் கொண்டிருக்கிறது கரோனா வைரஸ். உலக நாடுகளில் பெரும்பாலானவை திணறிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 629 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவால் 12 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா மேலும் பரவாமல் தடுக்க வீட்டுக்குள் இருக்க வேண்டி அனைத்து மாநில அரசுகளும்…

மேலும்...

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 612 – பலி எண்ணிக்கை 12

புதுடெல்லி (25 மார்ச் 2020): இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 612 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 12 ஆக உயரந்துள்ளது. எல்லைகளைக் கடந்த சவாலாக மாறி மனித குலத்தையே அலற வைத்துக் கொண்டிருக்கிறது கரோனா வைரஸ். உலக நாடுகளில் பெரும்பாலானவை திணறிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 612 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவால் 12 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா மேலும் பரவாமல் தடுக்க வீட்டுக்குள் இருக்க வேண்டி அனைத்து மாநில அரசுகளும்…

மேலும்...

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 606 ஆக உயர்வு!

புதுடெல்லி (24 மார்ச் 2020): இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 606 ஆக உயர்ந்துள்ளது. எல்லைகளைக் கடந்த சவாலாக மாறி மனித குலத்தையே அலற வைத்துக் கொண்டிருக்கிறது கரோனா வைரஸ். உலக நாடுகளில் பெரும்பாலானவை திணறிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 606 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவால் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையே கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக 21 நாட்களுக்கு நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும்...

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை 557 ஆக உயர்வு!

புதுடெல்லி (24 மார்ச் 2020): இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 557 ஆக உயர்ந்துள்ளது. எல்லைகளைக் கடந்த சவாலாக மாறி மனித குலத்தையே அலற வைத்துக் கொண்டிருக்கிறது கரோனா வைரஸ். உலக நாடுகளில் பெரும்பாலானவை திணறிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 557 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவால் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையே கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதாக பிரதமர் நரேந்திர…

மேலும்...