ஹிஜாப் விவகாரம் – பாகிஸ்தானுக்கு அசாதுதீன் ஒவைசி எச்சரிக்கை!

ஐதராபாத் (10 பிப் 2022): இந்தியாவில் ஹிஜாப் விவகாரத்தில் பாகிஸ்தான் மக்கள் தலையிட வேண்டாம் என ஏ.ஐ.எம்.ஐ.எம் தலைவர் அசாதுதீன் ஒவைசி எச்சரிக்கை விடுத்துள்ளார். கர்நாடகாவில் பள்ளி கல்லூரிகளுக்கு ஹிஜாப் அணிந்து வர முஸ்லீம் பெண்களுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு பி.யூ. கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு இந்துத்துவா அமைப்பை சேர்ந்த மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அங்கு பரபரப்பு நிலவியது. மேலும் ஹிஜாப் அணிய தடை…

மேலும்...

பாஜகவும் அதன் ஆதரவாளர்களும்தான் உண்மையான தேச விரோதிகள் – சீமான்!

சென்னை (09 பிப் 2022): மாணவர்களின் மனங்களில் மதவாத நச்சுப்பரப்புரையை விதைத்து மதமோதலுக்கு வித்திடுவதாக பாஜக மீது சீமான் சாடியுள்ளார். இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “கர்நாடக மாநிலத்தின் கல்விக்கூடங்களில் இசுலாமியப்பெண்கள் தங்களது மார்க்கத்தின்படி, உடை உடுத்தி வருவதற்கு எதிர்ப்புத்தெரிவித்து, கடந்த சில வாரங்களாக மதவெறி இந்துத்துவக்கும்பல் நிகழ்த்தி வரும் வன்முறை வெறியாட்டங்களும், பிரித்தாளும் சூழ்ச்சிகளும் அதிர்ச்சியளிக்கின்றன. கல்விக்கொள்கையையும், தேர்வு முறையையும் காவிமயப்படுத்தும் ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு, தற்போது மாணவர்களின் மனங்களிலும் மதவாத…

மேலும்...

ஹிஜாப் விவகாரத்தை கூடுதல் அமர்வு விசாரிக்க நீதிபதி உத்தரவு!

பெங்களூரு (09 பிப் 2022): பள்ளி கல்லூரிகளில் ஹிஜாப் அணிவது தொடர்பான பிரச்சனையை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் அமர்வு விசாரிக்கும் என கர்நாடக உயர்நிதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் ஒரே சீருடை திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஹிஜாப் அணித்து வந்த இஸ்லாமிய மாணவிகளை கல்லூரி நிர்வாகம் அனுமதிக்க மறுத்தது. இது சர்ச்சையானது. ஹிஜாபை அனுமதிக்கக் கோரி மாணவிகள் போராட்டத்தில் குதித்தனர். இதையடுத்து முஸ்லிம் மாணவிகளுக்கு எதிராக இந்து மாணாக்கர்களும் போராட்டத்தில் குதித்ததால்,…

மேலும்...

காவிக்கொடி ஏற்றப்பட்ட கம்பத்தில் மீண்டும் ஏற்றப்பட்ட தேசியக்கொடி!

சிமோகா (09 பிப் 2022): கர்நாடகா கல்லூரி ஒன்றில் தேசிய கோடி கம்பத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பினரால் காவி கோடி ஏற்றப்பட்ட நிலையில் அதில் மீண்டும் தேசிய கோடி ஏற்றப்பட்டது. கர்நாடகாவில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரக்ககூடாது என உடுப்பி கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டு அவர்களை கல்லுரிக்குள் அனுமதிக்காததால் சர்ச்சை வெடித்தது. இதற்கு எதிராக இஸ்லாமிய மாணவிகள் போராட்டம் நடத்தினர். அதேநேரத்தில் மற்றொரு தரப்பு மாணவ, மாணவிகள் காவி துண்டு அணிந்து ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்….

மேலும்...

ஹிஜாபுக்காக எங்கள் போராட்டம் தொடரும் – சிங்கப்பெண் முஸ்கான் பேட்டி!

மாண்டியா (08 பிப் 2022): ஹிஜாபுக்காக எங்கள் போராட்டம் தொடரும் என்று கர்நாடக மாணவி முஸ்கான் தெரிவித்துள்ளார். முஸ்கான் என்ற மாணவி இன்று காலை முதல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறார். அதற்குக் காரணம் காவி சால்வை அணிந்து கும்பலாக வந்த இந்துத்வா மாணவர்கள் நூற்றுக்கணக்காணோர், தனியொருத்தியாக வந்த மாணவிமுன்பு ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று கோஷமிட்டபடி அந்த மாணவியை இடைமறித்தனர். ஆனால் எதற்கும் அஞ்சாத அந்த மாணவி ‘அல்லாஹு அக்பர்’ என்று கைகளை உயர்த்தி கோஷமிட்டபடி வகுப்பறைக்கு…

மேலும்...

ஹிஜாப் சர்ச்சை – திமுக உள்ளிட்ட எதிர் கட்சி எம்பிக்கள் ஹிஜாப் அணிந்து மக்களவையில் வெளிநடப்பு!

புதுடெல்லி (08 பிப் 2022): கர்நாடகாவில் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இது குறித்து விவாதிக்க அனுமதி மறுத்ததை கண்டித்து, மக்களவையில் காங்கிரஸ், திமுக உள்பட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஹிஜாப் அணிந்து வெளிநடப்பு செய்தனர். கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள கல்லூரியில் ஹிஜாப் அணிந்து முஸ்லிம் மாணவிகளுக்கு வகுப்பறையில் நுழைய அனுமதி மறுக்கப் பட்டது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கிடையே ஹிஜாப் அணியும் மாணவிகளை வகுப்புக்குள் அனுமதித்தால் காவித் துண்டு அணிந்த எங்களையும்…

மேலும்...

வன்முறையாக மாறிய ஹிஜாப் தடை விவகாரம் – கல் வீச்சு, காவல்துறை தடியடி!

பெங்களூரு (08 பிப் 2022): கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் தடை விவகாரம் வன்முறையாக மாறியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் கல்லூரி வரும் முஸ்லீம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப் பட்டதை அடுத்து ஆளும் பாஜக அரசுக்கு எதிராக நாடெங்கும் எதிர்ப்பு வலுத்துள்ளது. இந்நிலையில் செவ்வாயன்று கர்நாடக மாநிலம் பாகல்கோட்டில் உள்ள ரபகவிபனஹட்டியில் உள்ள அரசுப் பல்கலைக் கழக கல்லூரியில் இரு பிரிவினர் ஒருவர் மீது ஒருவர் கல் வீசி தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. நிலைமை…

மேலும்...

ஹிஜாப் சர்ச்சை – முஸ்லீம் மாணவிகளுக்கு ஆதரவாக களமிறங்கிய தலித் மாணவர்கள்!

உடுப்பி (07 பிப் 2022): கர்நாடகாவில் முஸ்லீம் மாணவிகளுக்கு ஆதரவாக தலித் மாணவர்கள் ஊதா துண்டு அணிந்து கொண்டு கல்லூரி வளாகத்திற்குள் வந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது நாடெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆளும் பாஜக அரசை பல தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் ஹிஜாபுக்கு எதிராக ஆர் எஸ் எஸ், பாஜக மாணவர் அமைப்பினர் காவி துண்டு அணிந்து கல்லூரிக்குள் நுழைந்தனர். இதனை கண்டிக்கும் வகையிலும் முஸ்லீம் மாணவிகளுக்கு…

மேலும்...

கர்நாடகா கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வர மாணவிகளுக்கு அனுமதி!

உடுப்பி (07 பிப் 2022): பல நாள் போராட்டத்துக்குப் பிறகு, கர்நாடகா மாநிலம் உடுப்பி மாவட்டம் குந்தபுரா பகுதியில் உள்ள அரசு கல்லூரி வளாகத்திற்குள் திங்கள்கிழமை ஹிஜாப் அணிந்த மாணவியர் நுழைய அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும், அவர்கள் தனி வகுப்பறைகளில் அமர வைக்கப்படுவார்கள் என்று கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. குந்தபுராவில் நிலைமை கட்டுக்குள் உள்ளது, சட்டம்-ஒழுங்கு சீர்கேடு இல்லை என்று உடுப்பி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் எஸ்.டி.சித்தலிங்கப்பா தெரிவித்தார். வெள்ளிக்கிழமை அரசு பியு கல்லூரிக்குள் ஹிஜாப் அணிந்து நுழைய…

மேலும்...

எந்த சூழலிலும் ஹிஜாபை கைவிடமாட்டோம் – மாணவிகள் திட்டவட்டம்!

பெங்களூரு (05 பிப் 2022): எந்தச் சூழலிலும் ஹிஜாபை கைவிடமாட்டோம் என்று கர்நாடக கல்லூரி மாணவிகள் தெரிவித்துள்ளனர். கர்நாடக மாநிலத்தில் உள்ள பல கல்லூரிகளில் மாணவிகள் வகுப்புக்கு ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இது ஒருபுறமிருக்க முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரக் கூடாது, இல்லையென்றால் நாங்கள் காவித் துண்டு அணிந்து வருவோம் என்று ஆர் எஸ் எஸ் அமைப்பு மாணவர்கள் காவித் துண்டுகளுடன் கல்லூரிகளுக்குள் நுழைந்து போராட்டம்…

மேலும்...