கேரள ஆளுநருக்கு கொரோனா தொற்று!

திருவனந்தபுரம் (07 நவ 2020): கேரள ஆளுநர் ஆரிப் முகம்மது கான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். கேரளாவில் கொரோனா தொற்று கடந்த சில வாரங்களாக உச்சத்தில் உள்ளது. கேரளாவில் நேற்று ஒருநாளில் மட்டும் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. மராட்டியம், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், கேரளாவில் தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்த…

மேலும்...

அச்சுறுத்தும் கொரோனா – கேரளாவில் மருத்துவ அவசர நிலைக்கு கோரிக்கை

திருவனந்தபுரம் (29 செப் 2020): கேரளாவில் கொரோனா தொற்று அதிவேகமாக பரவுவதால், மருத்துவ அவசரநிலையை அறிவிக்க வேண்டும் என இந்திய மருத்துவ சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் முதன்முதலாக கேரள மாநிலத்தின்தான் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. ஆரம்ப கட்டத்திலிருந்தே கொரனோ தடுப்பு நடவடிக்‍கையை அம்மாநிலம் சிறப்பாக கையாண்டு, பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை குறைவாகவே வைத்திருந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக, கேரளாவில் அதிதீவிரமாக கொரோனா வைரஸ் பரவி வருகிறது. மூன்று இலக்கங்களில் இருந்த பாதிப்பு,…

மேலும்...

பாஜக தேசிய துணைத் தலைவராக அப்துல்லா குட்டி நியமனம்!

புதுடெல்லி (26 செப் 2020): பாஜக தேசிய துணைத் தலைவர்களில் ஒருவராக கேரளாவை சேர்ந்த அப்துல்லா குட்டி நியமனம் செய்யப்பட்டுள்ளார். பாஜகவின் தேசிய அளவிலான புதிய பொறுப்புகளையும், அதற்கான நியமனப் பட்டியலையும் அறிவித்துள்ளது. பாஜக முதல் முறையாக 12 தேசிய துணைத் தலைவர்களை நியமித்துள்ளது பாரதிய ஜனதா கட்சி. கட்சித் தலைவர் ஜகத் பிரகாஷ் நட்டா இந்த அதிரடி அறிவிப்பை அறிவித்துள்ளார். பி.ஜே.பியின் தலைவராக பொறுப்பு ஏற்ற பிறகு நட்டா செய்துள்ள முதல் பெரிய மாற்றம் இது….

மேலும்...

கேரளாவில் பரபரப்பு – அல்கொய்தா பயங்கரவாதிகள் கைது!

திருவனந்தபுரம் (20 செப் 2020): கேரளா மற்றும் மேற்கு வங்கத்தில் தேசிய புலனாய்வு முகமை (எஐஏ)நடத்திய தேடுதல் வேட்டையில் ஒன்பது அல் கொய்தா தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். ஞாயிற்றுக் கிழமை அதிகாலை, நடத்திய தேடுதல் வேட்டையில் மேற்கு வங்கத்தில் ஆறு பேரும், கேரளாவில் மூன்று பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களிடம் என்/ஐ.ஏ. விசாரணை மேற்கொண்டு வருகிறது.

மேலும்...

தங்கக் கடத்தல் வழக்கில் அமைச்சர் ஜலீலிடம் என்.ஐ.ஏ 8 மணிநேரம் விசாரணை!

திருவனந்தபுரம் (18 செப் 2020): கேரள தங்கக் கடத்தல் விவகாரம் தொடர்பாக கேரள உயர்கல்வித்துறை அமைச்சர் ஜலீலிடம் என்.ஐ.ஏ 8 மணிநேரம் விசாரணை நடத்தியுள்ளனர். கேரள தங்கம் கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ஸ்வப்னா சுரேஷ், முதல்வர் பினராயி விஜயன் அலுவலகத்தில் மிகவும் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக தகவல் வெளியானதால் ஆளுங்கட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக என்.ஐ.ஏ., அமலாக்கத்துறை, சுங்கத்துறை உள்ளிட்ட அமைப்புகள்…

மேலும்...

50 ஆண்டுகள் தோல்வியையே சந்திக்காமல் பொன்விழா கொண்டாடும் முன்னாள் முதல்வர்!

திருவனந்தபுரம் (17 செப் 2020): கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, தொடர்ந்து 50 ஆண்டுகள் சட்டசபை உறுப்பினராக இருந்து பொன்விழா கொண்டாடுகிறார். கோட்டயம் மாவட்டம் புதுப்பள்ளியில் இருந்து 1970 லிருந்து இதுவரை தோல்வியை சந்திக்காமல் 50 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். இவர் இதுவரை 11 தேர்தல்களை சந்தித்துள்ளார். இந்திரா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டவர்கள் கூட தோல்வியை சந்தித்திருந்தபோதும் உம்மண் சாண்டி ஒரே தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெற்று சாதித்துள்ளார். முதல்வராக இருந்த…

மேலும்...

கொரோனா நோயாளி பெண்ணை வன்புணர்ந்த ஆம்புலன்ஸ் டிரைவர் – அதிர வைக்கும் சம்பவம்!

பத்தினம்தட்டா (07 செப் 2020): கேரளாவில் கொரோனா பாதித்த இளம் பெண்ணை ஆம்புலன்ஸ் டிரைவர் வன்புணர்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் பத்தனம் திட்டா மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும், அவரது 19 வயது மகளுக்கும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் அந்த இளம்பெண்ணை சிகிச்சை அளிக்கப்பட்ட மருத்துவமனையிலிருந்து கொரோனா சிகிச்சை மையத்திற்கு கடந்த சனிக்கிழமை கொண்டு செல்லப்பட்டார்.. அப்போது அரன்முழா பகுதியில் வாகனத்தை நிறுத்தி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண்ணை ஆம்புலன்ஸ் டிரைவர்…

மேலும்...

கேரளாவில் பரபரப்பு – தமிழகத்தினர் உட்பட 80 பேர் மாயம்!

திருவனந்தபுரம்(07 ஆக 2020): கேரளாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் 80 பேர் மாயமாகியுள்ளனர். கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. பல இடங்களில் வெள்ளம் ஆறாக ஓடுகிறது. இந்நிலையில், கேரளா மூணாறு பகுதியில் உள்ள தேயிலை தோட்ட குடியிருப்பில் நள்ளிரவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கிய 80 பேரை காணவில்லை என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. தற்போது வரை நிலச்சரிவில் சிக்கியிருந்த 4 பேர் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், குடியிருப்பில் இருந்த 80…

மேலும்...

மிகவும் எளிமையாக நடந்த கேரள முதல்வர் மகள் – முஹம்மது ரியாஸ் திருமணம்!

திருவனந்தபுரம் (15 ஜூன் 2020): கேரள முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா முஹம்மது ரியாஸ் என்பவரை மறுமணம் செய்துகொண்டார். தைக்கண்டியேல், மார்ஸ்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் பிரிவான, இந்திய ஜனநாயக வாலிபர் கூட்டமைப்பு (டிஒய்எஃப்ஐ), தலைவரான முகமது ரியாஸை இன்று மறுமணம் செய்து கொண்டார். திருவனந்தபுரத்தில் மிக எளிமையாக இந்த திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர் வீணா. அதேபோல மார்ஸ்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் பிரிவான, இந்திய ஜனநாயக வாலிபர்…

மேலும்...

கேரளா ஜமாத்தே இஸ்லாமியின் மற்றும் ஒரு சாதனை!

வயநாடு (12 ஜூன் 2020): கேரளாவில் ஜமாத்தே இஸ்லாமி அமைப்பு வெள்ளத்தால் வீடுகளை இழந்த 25 குடும்பங்களுக்காக கட்டப்பட்ட வீடுகள் நாளை உரியவர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளன. கேரளாவில் கடந்த வருடம் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்தால் பலர் பாதிக்கப்பட்டனர். அதில் குறிப்பாக வயநாடு மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அதில் நிலச்சரிவால் 25 வீடுகள் மண்ணோடு மண்ணாக புதைந்தது. திக்கற்று நின்றவர்களுக்கு ஆறுதல் கூறிய ஜமாத்தே இஸ்லாமி அமைப்பு அனைவருக்கும் வீடு கட்டித்தருவதாக உறுதி அளித்தனர். இந்நிலையில், ஜமாத்தே இஸ்லாமியின்…

மேலும்...