ஞானவாபி மசூதி விவகாரம் – முஸ்லிம்களின் கோரிக்கை நீதிமன்றம் நிராகரிப்பு!

வாரணாசி (12 செப் 2022): உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதிக்கு எதிரான மனு விசாரணைக்கு உகந்தது என்று வாரணாசி மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் ஞானவாபி மசூதி உள்ளது. இந்த மசூதியின் வெளிப்புறச் சுவர்களில் உள்ள இந்து கடவுள்களின் சிலையை வழிபாடு செய்ய அனுமதி கோரி 5 பெண்கள் சிவில் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை எதிர்த்து முஸ்லிம்கள் ஒருதரப்பினர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அந்த…

மேலும்...

மஹாவீர் அகாரா பேரணியில் முஸ்லிம்கள் வீடுகள், மசூதிகள் மீது குறிவைத்து தாக்குதல்!

பாட்னா (11 செப் 2022): பிகாரில் மஹாவீர் அகாரா பேரணியின் போது இந்துத்துவா வன்முறை கும்பலால் முஸ்லிம்கள் வீடுகள் குறி வைத்து தாக்கப்பட்டுள்ளன. பீகாரின் சிவான் மாவட்டம் பர்ஹாரியாவில் நடந்த மஹாவீர் அகாரா பேரணியின் போது முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.வன்முறையின்போது முஸ்லிம்கள் வீடுகள், மற்றும் மசூதிகள் மீது வன்முறையாளர்கள் கல் வீசி தாக்குதல் மேற்கொண்டுள்ளனர் . மேலும் பல வீடுகளில் கொள்ளை நடந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. முஸ்லிம்களுக்குச் சொந்தமான பல வீடுகளும் கடைகளும்…

மேலும்...

பொறியியல் மாணவி படுகொலையில் வகுப்பு வாத சாயம் பூச முயற்சி!

மைசூர் (08 செப் 2022): மைசூருவில் பொறியியல் மாணவி படுகொலை செய்யப்பட்டதன் பின்னணியில் முக்கிய பத்திரிகையாளர்கள் உட்பட இந்துத்துவா ஆதரவாளர்கள் பலர் வகுப்புவாத சாயம் பூச முயற்சியுள்ளனர். கர்நாடக மாநிலம் ஹுசூர் சாலையில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் 21 வயதான பொறியியல் மாணவி அபூர்வா ஷெட்டி, கொலை செய்யப்பட்டார், அங்கு அவர் தனது காதலன் ஒருவருடன் உடன் தங்கியிருந்ததாகக் கூறியுள்ள ஒரு மாலை நாளிதழான ‘ஸ்டார் ஆஃப் மைசூர்’ கொல்லப்பட்ட மாணவியுடன் இருந்தது ஆஷிக் என்ற…

மேலும்...

ஜெய் ஸ்ரீ ராம் சொல்ல வலியுறுத்தி முஸ்லீம் யூபர் ஓட்டுநர் மீது தாக்குதல்!

ஐதராபாத் (04 செப் 2022): ஐதராபாத்தில் ஜெய் ஸ்ரீ ராம் சொல்ல வலியுறுத்தி முஸ்லீம் யூபர் ஓட்டுநர் மீது 6 பேர் கொண்ட கும்பல் தாக்குதல் மேற்கொண்டுள்ளது. தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அல்காபூர் எக்ஸ் ரோட்டில் இருந்து ஒரு பயணியை அழைத்து வருவதற்காக செய்யத் லத்தீப் என்ற யூபர் ஓட்டுநர் காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த வழியே அவருடைய வாகனத்தை வழிமறித்த 6 பேர் கொண்ட கும்பல் “ஜெய் ஸ்ரீ ராம்” என்று கோஷமிட வலியுறுத்தியது. ஆனால்…

மேலும்...

முஸ்லீம் இளைஞர் வெட்டிக்கொலை – மர்ம நபர்கள் வெறிச்செயல்!

மங்களுரு (29 ஜூலை 2022): கர்நாடக மாநிலம் மங்களுரு அருகே வியாழன் மாலை முஸ்லிம் இளைஞர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார் உயிரிழந்த முஸ்லிம் இளைஞர், மங்களூருவின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள சூரத்கல் அருகே உள்ள மங்கல்பேட்டையில் வசிக்கும் முகமது ஃபாசில் என அடையாளம் காணப்பட்டுள்ளார். மங்களூர் மாவட்டத்தில் கொலை செய்யப்பட்ட பாஜக பிரமுகர் பிரவீன் குமார் நெட்டாருவின் குடும்பத்தை அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை பார்வையிட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு, இந்த சம்பவம்…

மேலும்...

பஜ்ரங்தள் பயங்கரவாத அமைப்பினர் நடத்திய தாக்குதலில் முஸ்லீம் வாலிபர் பலி!

மங்களுரு (22 ஜூலை 2022): கர்நாடக மாநிலம் பெல்லாரேயில் தீவிரவாத அமைப்பான பஜ்ரங் தள் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் காயமடைந்த 18 வயது முஸ்லிம் இளைஞர் வியாழக்கிழமை மருத்துவமனையில் உயிரிழந்தார். கேரள மாநிலம் காசர்கோடில் உள்ள மொக்ரல் புதூரில் வசிப்பவர் முஸ்லிம் வாலிபர் மசூத். இவர் கர்நாடக மாநிலம் சுள்ளியா, களஞ்சாவில் உள்ள தனது தாத்தா வீட்டில் தங்கி தினக்கூலியாக வேலை செய்து வந்தார். இந்நிலையில் மசூத் ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் சென்று கொண்டிருந்தார்….

மேலும்...

பழைய செய்தித்தாளில் கோழி இறைச்சியை மடித்து கொடுத்த முஸ்லீம் கைது!

லக்னோ (05 ஜூலை 2022): உத்திர பிரதேசத்தில் பழைய செய்தித்தாளில் கோழி இறைச்சியை மடித்து கொடுத்த முஸ்லீம் கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரப் பிரதேசம் மாநிலம் சம்பாலில் தலிப் ஹூசைன் என்பவர் இறைச்சிக் கடை நடத்தி வருகிறார். இவர் இந்து கடவுள்களின் படங்கள் அடங்கிய காகிதத்தில் கோழி விற்பனை செய்து வந்ததாக சிலர் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில், தலீப் ஹூசைன் மீது போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், இந்து தெய்வங்களின் படங்கள் அடங்கிய காகிதத்தில்…

மேலும்...

இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களை கண்டித்து அமெரிக்காவில் ஆர்ப்பாட்டம்!

நியூயார்க் (24 ஜூன் 2022): இந்திய முஸ்லிம்களுக்கு ஆதரவாக அமெரிக்காவில் ஆறு அமைப்புகள் அடங்கிய கூட்டமைப்பு அமைதி போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்தியாவில் முஹம்மது நபிக்கு எதிரான கருத்துக்கள், மற்றும் இந்தியாவில் 200 மில்லியன் முஸ்லிம்கள் துன்புறுத்தப்படுதல், சட்டவிரோத கைதுகள் மற்றும் இந்தியாவில் முஸ்லிம் வீடுகள் சட்டவிரோதமாக இடிப்பு ஆகியவற்றுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆறு அமைப்புகளின் கூட்டமைப்பு அமைதியான போராட்டம் மற்றும் பேரணியை நடத்தவுள்ளதாக்க. இந்திய அமெரிக்க முஸ்லிம் கவுன்சில் (IAMC) தெரிவித்துள்ளது. இதுகுறித்த IAMC…

மேலும்...

முஸ்லிம் கடைகளில் தங்கம் வாங்கக்கூடாது – இந்துத்துவாவினர் வலியுறுத்தல்!

பெங்களூரு (26 ஏப் 2022): முஸ்லிம் கடைகளில் தங்கம் வாங்கக்கூடாது என்று இந்துக்களுக்கு இந்துத்துவாவினர் உத்தரவிட்டுள்ளனர். பாஜக ஆளும் கர்நாடகாவில் முஸ்லிம் எதிர்ப்புப் பிரச்சாரங்கள் தலைவிரித்து ஆடுகின்றன. ஹிஜாப் தடை, ஹலால் இறைச்சி, முஸ்லிம் வியாபாரிகள் மீதான உளவியல் தாக்குதல் என தொடரும் பிரச்சனை தற்போது அட்சய திருதியையின் போது கர்நாடகாவில் உள்ள முஸ்லிம்கள் நடத்தும் கடைகளில் தங்கம் வாங்க வேண்டாம் என்று இந்துக்களை வலியுறுத்தியுள்ளன. இதுகுறித்து ஸ்ரீ ராம் சேனா தலைவர் பிரமோத் முத்தாலிக் கூறுகையில்,…

மேலும்...

டெல்லி மசூதியை தாக்கி காவிக்கொடி ஏற்றிய இந்துத்துவாவினர் – முஸ்லீம் இளைஞர்கள் மீது வழக்கு!

புதுடெல்லி (20 ஏப் 2022): டெல்லி ஜஹாங்கிர்புரியில் அனுமன் ஜெயந்தி கொண்டாட்டம் என்ற போர்வையில் இரு பிரிவினருக்கு இடையே நடந்த மோதல் தொடர்பாக கைது செய்யப்பட்ட 5 முஸ்லிம் இளைஞர்கள் மீது காவல்துறையினர் கடுமையான தேசிய பாதுகாப்பு (என்எஸ்ஏ) வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சட்டத்தின் மூலம் குற்றம் சாட்டப்பட்டவர்களை ஒரு வருடம் வரை விசாரணையின்றி சிறையில் அடைக்க அனுமதிக்கிறது. சமூக ஊடகங்களில் ஹிந்துத்துவவாதிகள் துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை பகிரங்கமாக காண்பிக்கும் வீடியோக்கள் மற்றும் ஆத்திரமூட்டும்…

மேலும்...