முதல்வர் எடப்பாடியின் தனிச்செயலர் தாமோதரன் கொரோனா பாதிப்பால் மரணம் – அதிர்ர்சியில் முதல்வர்!

Share this News:

சென்னை (17 ஜூன் 2020): முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தனிச்செயலர் தாமோதரன் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தலைமைச் செயலகத்திலுள்ள முதல்வர் அலுவலகத்தில் தனிச் செயலாளராக பணியாற்றி வந்தவர் தாமோதரன். அந்த வகையில் அலுவலக ரீதியாக முதல்வர் தலைமைச் செயலகம் செல்லும்போது அடிக்கடி நேரடியாக சந்திப்பவர்களில் இவரும் ஒருவர். முதல்வரை சந்திக்க வருபவர்களை அழைத்து வருவது உள்ளிட்ட பணிகளை தாமோதரன் கவனித்து வந்திருக்கிறார்.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு தாமோதரனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 56 வயதான அவர் சிகிச்சை பலனின்றி இன்று (ஜூன் 17) காலை உயிரிழந்தார். இந்த செய்தி முதல்வர் அலுவலக வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை தொடச்சியாக உயர்ந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் கொரோனாவுக்கு 49 பேர் பலியானதையடுத்து. மொத்த உயிரிழப்பு 528 ஆக அதிகரித்துள்ளது.


Share this News: