வாகனம் கிடைக்காமல் அரசு பேருந்தை கடத்தி பயணம் சென்ற இளைஞர் கைது!

Share this News:

விஜயவாடா (23 மே 2020): ஊரடங்கு அமலில் உள்ளதால் ஊருக்கு செல்ல வாகனம் கிடைக்காமல் அரசு பேருந்தை கடத்தி அதில் பயணம் செய்த இளைஞரை ஆந்திர போலீசார் கைது செய்துள்ளனர்.

கர்நாடகாவிலிருந்து ஆந்திர மாநிலம் அனந்தப்புரத்திற்கு உறவினர் வீட்டிற்கு வந்தத இளைஞர் ஊரடங்கு காரணமாக ஊருக்கு திரும்ப செல்ல முடியாமல் இருந்துள்ளார்.

அதனால் அனந்தபுரத்தில் இருந்து தர்மவரம் வரை நடந்து வந்த அவர் அதன் பின்னர் பனிமலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தை எடுத்து அதில் பெங்களூரு செல்ல முயன்றுள்ளார்.

இதையடுத்து சிக்கப்பள்ளி போலீசார் அனந்தபுரத்தில் உள்ள கியா கார் தொழிற்சாலை அருகே இளைஞர் கடத்தி சென்ற பேருந்தை மடக்கி நிறுத்தினர். பின்பு அந்த இளைஞரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Share this News: