Mamta-Banerjee

வாக்கு எந்திரத்தில் பாஜகவுக்கே விழுகிறது – மம்தா பானர்ஜி பரபரப்பு புகார்!

கொல்கத்தா (27 மார்ச் 2021): மேற்கு வங்கத்தில் நடைபெறும் முதல் கட்ட வாக்குப்பதிவில் யாருக்கு வாக்களித்தாலும் பாஜகவுக்கே விழுவதாக முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்குவங்க மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவில் மலைவாழ் மக்கள் அதிகம் வசிக்கும் 5 மாவட்டங்களிலுள்ள 30 தொகுதிகளுக்கு இன்று நடைபெறுகிறது. காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு, மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. 30 தொகுதிகளிலும் 21 பெண் வேட்பாளர்கள் உள்பட 191 பேர் போட்டியிடுகின்றனர். கடந்த…

மேலும்...

இந்தியாவில் ஒரே நாளில் 47,262 பேருக்கு கொரோனா பாதிப்பு!

புதுடெல்லி (24 மார்ச் 2021) இந்தியாவில் 10 ஆயிரத்துக்குள் கட்டுப்படுத்தப்பட்ட தினசரி கொரோனா பாதிப்பு, இந்த மாதத்தில் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 47,262 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,17,34,058 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 275 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை…

மேலும்...

ஏற்கனவே கொரோனா பாதித்த அமைச்சருக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு!

மும்பை (24 மார்ச் 2021): ஹாராஷ்ட்ரா சமூகநீதித்துறை அமைச்சர் தனஞ்சய் முண்டே, மீண்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாட்டிலேயே மஹாராஷ்ட்ராவில்தான் அதிக அளவிலான கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. சமீபத்தில், இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 30,535 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து மஹாராஷ்ட்ரா அரசு, அம்மாநிலத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்தநிலையில் மஹாராஷ்ட்ரா சமூகநீதித்துறை அமைச்சர் தனஞ்சய் முண்டே, இரண்டாவது முறையாக…

மேலும்...

இந்தியாவில் ஒரே நாளில் 46 951 பேருக்கு கொரோனா பாதிப்பு!

புதுடெல்லி (22 மார்ச் 2021): இந்தியாவில் ஒரே நாளில் 46 951 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 212 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். உலகை அச்சுறுத்தும் கொரோனா இந்தியாவில் மீண்டும் பரவி வருகிறது. இன்று புதிதாக 46,951 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,16,46,081 ஆக உயர்ந்தது. புதிதாக 212 பேர் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,59,967 ஆக உயர்ந்தது. தொற்றில் இருந்து ஒரே நாளில் 21,180 பேர் குணமடைந்துள்ளனர்….

மேலும்...

பாஜகவில் புதிதாக இணைந்தவர்களுக்கு சீட் கொடுக்க எதிர்ப்பு – ரகளையில் ஈடுபட்ட பாஜகவினர்!

கொல்கத்தா (20 மார்ச் 2021): மேற்குவங்கத்தில் புதிதாக பா.ஜ.க.வில் இணைந்தவர்களுக்‍கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளித்ததற்கு அக்‍கட்சி தொண்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேற்குவங்க சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் செல்வி மம்தா பானர்ஜி தலைமையிலான ஆளும் திரிணாமூல் காங்கிரசுக்‍கும், பா.ஜ.க.வுக்‍கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. 3-ம் முறையாக ஆட்சியை கைப்பற்ற செல்வி மம்தாவும், மம்தாவின் அரசை அகற்ற பா.ஜ.க.-வினரும் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த சூழலில், திரிணாமூல் காங்கிரசிலிருந்து அண்மையில் விலகி பா.ஜ.க.வில்…

மேலும்...

இந்தியாவில் ஒரேநாளில் 40 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு!

புதுடெல்லி (20 மார்ச் 2021): இந்தியாவில் ஒரே நாளில் 40 ஆயிரத்துக்‍கும் மேற்பட்டோருக்‍கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் குறைந்து வந்த கொரோனா பரவல், கடந்த ஒரு மாத காலமாக மீண்டும் உயர்ந்து வருகிறது. மஹாராஷ்ட்ரா, கேரளா, குஜராத், பஞ்சாப், தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட 19 மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்‍கப்படுவோரின் எண்ணிக்‍கை அதிரடியாக அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில், இந்தியாவில் வெகுநாட்களுக்‍கு பிறகு கொரோனா தினசரி…

மேலும்...

உலகின் மகிழ்ச்சியான நாடுகளில் பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா!

ஜெனிவா (20 மார்ச் 2021): உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இந்தியா 139ஆவது இடத்தை பிடித்து மிக மோசமான நிலையில் உள்ளது. சர்வதேச அளவில் எந்த நாட்டில் பொதுமக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர் என்பது குறித்த பட்டியலை ஐக்கிய நாடுகள் அமைப்பு ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டும் உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலை ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் ஐரோப்பிய நாடான பின்லாந்து முதல் இடத்தைப் பிடித்துள்ளது. தொடர்ந்து நான்காவது முறையாகப் பின்லாந்து முதல்…

மேலும்...

இந்தியாவில் ஒரேநாளில் 35,871 பேருக்கு கொரோனா பாதிப்பு!

புதுடெல்லி (18 மார்ச் 2021): இந்தியாவில் ஆரம்பத்தில் அதிகமான எண்ணிக்கையில் தொற்று இருந்து வந்த நிலையில், பின்னர் படிப்படியாக குறைந்தது. தற்போது இந்தியா முழுவதும் மீண்டும் கொ ரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 35,871 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 172 பேர் இந்த நோய் தொற்று காரணமாக பலியாகியுள்ளனர். நோய் தொற்றில் இருந்து 17,741 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். கடந்த சில வாரங்களுக்கு…

மேலும்...
Tabligh Jamath

தப்லீக் ஜமாத்தினர் மீதான விஷமத்தனமான மருத்துவ குறிப்பு எம்பிபிஎஸ் பாட புத்தகத்திலிருந்து நீக்கம்!

புதுடெல்லி (16 மார்ச் 2021): தப்லீ ஜமாத்தை கொரோனா பரப்பியவர்கள் என அவதூறு குறிப்பை எழுதிய மருத்துவ ஆசிரியர்கள் அதற்காக மன்னிப்பு கோரியுள்ளனர். மேலும் அந்த குறிப்பு நீக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட இரண்டாம் ஆண்டு எம்பிபிஎஸ் பாடப்புத்தகத்தில் தப்லீக் ஜமாத்தினர் குறித்து விஷமதனமான குறிப்பு பதியப்பட்டிருந்தது. இந்த குறிப்புகளை அகற்றிய ஆசிரியர்களும் புத்தக வெளியீட்டாளர்களும்,  இதுபோன்ற குறிப்புகளை வெளியிட்டதற்காக அவர்கள் மன்னிப்பு கேட்டனர். விஷமக்கருத்து நீக்கப்பட்டுள்ள நிலையில் புத்தகத்தின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர்கள்…

மேலும்...

தொகுதி கிடைக்காததால் மொட்டை அடித்துக்கொண்ட காங்கிரஸ் மகளிர் அணி தலைவி!

திருவனந்தபுரம் (15 மார்ச் 2021): கேரளாவில் அடுத்த மாதம் 6ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி காங்கிரஸ் கட்சி பாஜக ஆகியவை போட்டியிடுகின்றன. காங்கிரஸ் 92 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்தநிலையில் முதற்கட்டமாக 86 வேட்பாளா்களைக் கொண்ட வேட்பாளர் பட்டியலை நேற்று (14 மார்ச்) காங்கிரஸ் தலைமை அறிவித்தது. இதில் கோட்டயத்தைச் சோ்ந்த மகிளா காங்கிரஸ் மாநிலத் தலைவி லதிகா சுபாஷின் பெயா் வேட்பாளா் பட்டியலில் இடம்பெறவில்லை. இதனால் கடும் அதிருப்தி அடைந்த…

மேலும்...