ஊழியர்களுக்கு ஐந்து வருடங்கள் விடுமுறை அளித்து அதிர வைத்த நிறுவனம்!

புதுடெல்லி (15 ஜூலை 2020): ஊழியர்களை ஐந்து ஆண்டுகளுக்கு சம்பளம் இல்லா விடுப்பில் அனுப்ப ஏர் இந்தியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

கொரோனா பாதிப்பால் ஏராளமான நிறுவனங்கள் நிதி நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். அதிலும், ஏற்கெனவே கடும் நெருக்கடியில் சிக்கித் தவித்து வந்த ஏர் இந்தியா நிறுவனம் தற்போது கொரோனாவால் மிக மோசமான நிலையை எட்டியுள்ளது.

இந்நிலையில் நெருக்கடியை சமாளிப்பதற்காக ஊழியர்களை ஐந்து ஆண்டுகளுக்கு சம்பளம் இல்லா விடுப்பில் அனுப்ப ஏர் இந்தியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காக திறன், உடல்நலம், மிகையான ஊழியர்கள் ஆகிய அடிப்படையில் யாரையெல்லாம் விடுப்பில் அனுப்பலாம் என ஏர் இந்தியா நிர்வாகம் ஆய்வு செய்து வருகிறது.

இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவும் வெளியாகியுள்ளது. இதற்கக ஏர் இந்தியாவின் துறைசார் தலைவர்களும், மண்டல இயக்குநர்களும் ஒவ்வொரு ஊழியரின் பதிவையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

ஹாட் நியூஸ்:

கத்தார் தோஹாவில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து!

தோஹா (23 மார்ச் 2023): கத்தார் தோஹா அல் மன்சூராவில் ஒரு குடியிருப்பு கட்டிடம் பகுதி இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று காலை 8.18 மணியளவில் மன்சூரா பி ரிங் சாலையில்...

சவூதியில் இந்திய பெண் விபத்தில் மரணம்!

ஜித்தா (20 மார்ச் 2023): சவூதி அரேபியாவில் இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்த இளம் பெண் விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 23. கேரள மாநிலம் மலப்புரம் நிலம்பூர் சாந்தகுன்றத்தைச் சேர்ந்த ஃபஸ்னா ஷெரின்...

ராமர் இந்துக்களின் கடவுள் அல்ல – முன்னாள் முதல்வர் பரபரப்பு கருத்து!

ஜம்மு (24 மார்ச் 2023): ராமர் இந்துக்களின் கடவுள் அல்ல என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய காங்கிரஸ் தலைவருமான டாக்டர். பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார். மேலும் ஆட்சியில் நீடிக்கவே ராமரின் பெயரை...