அதிராம்பட்டினத்தில் தஞ்சை மாவட்ட திமுக பொருளாளர் அலுவலகம் திறப்பு விழா!

அதிராம்பட்டினம் (03 மார்ச் 2023): தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் மாவட்ட திமுக பொருளாளர் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. தஞ்சை மாவட்ட திமுக பொருளாளராக அதிராம்பட்டினத்தை சேர்ந்த முன்னாள் சேர்மன் எஸ்.ஹெச்.அஸ்லம் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அதற்கான அலுவலகம் அதிராம்பட்டினம் ஈசிஆர் சாலையில் இன்று (03 மார்ச் 2023) வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கா. அண்ணாதுரை அலுவலகத்தை திறந்து வைத்தார். மேலும் திமுக கொடியினையும் ஏற்றி வைத்தார். இதில் அதிராம்பட்டினம் மட்டுமல்லாமல் சுற்றுவட்டார திமுக பிரமுகர்கள்,…

மேலும்...

அதிராம்பட்டினம் அருகே உள்ள பிரைம் சிபிஎஸ்இ பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழா!

பட்டுக்கோட்டை (02 மார்ச் 2023): தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே புதுக்கோட்டை உள்ளூரில் உள்ள பிரைம் சிபிஎஸ்இ பப்ளிக் பள்ளியில் 2 ஆம் ஆண்டு பள்ளி ஆண்டு விழா கடந்த 26 பிப்ரவரி மாதம் சிறப்பாக நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பிரபல பட்டிமன்ற பேச்சாளர் திரு மோகன சுந்தரம் கலந்துகொண்டு நகைச்சுவையாக பேசி பார்வையாளர்களை கலகலப்பூட்டினார். மேலும் மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் சிறப்பாக நடைபெற்றது. குறிப்பாக பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற…

மேலும்...

அதிராம்பட்டினத்தில் தாலுகா அலுவலகம் வேண்டி கோரிக்கை!

பட்டுக்கோட்டை (11 பிப் 2023): அதிராம்பட்டினத்தில் தாலுகா அலுவலகம் அமைக்க வேண்டி,அதிராம்பட்டினம் நகராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் தலைமையில் பட்டுக்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அவர்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. நகராட்சியாக அறிவிக்கப்பட்ட அதிராம்பட்டினம் தாலுக்காவாவும் மாற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கை ஊர் மக்களிடம் இருந்து வருகிறது. அதிராம்பட்டினம் நகராட்சி சார்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அரசின் கவனத்திற்கு சென்றிருக்கிறது. இந்த கோரிக்கையை வலுப்பெறச் செய்யவும், வலியுறுத்தவும் பிப்ரவரி 10 அன்று சம்சுல் இஸ்லாம் சங்கத்தில் அனைத்து முஹல்லா…

மேலும்...

அதிராம்பட்டினத்தில் திடீரென கடல் உள்வாங்கியதால் பொதுமக்கள் அச்சம்!

அதிராம்பட்டினம் (09 டிச 2022): அதிராம்பட்டினம் ஏரிப்புறக்கரையில் வியாழன் அன்று திடீரென கடல் உள் வாங்கியதால் கரையோரம் வாழும் பொதுமக்கள் அச்சமடைந்தனர். அதிராம்பட்டினம் ஏரிப்புறக்கரையில் கடல் 200 மீட்டர் தூரம் உள்வாங்கியது. கடந்த கஜா புயலின்போதும் இதேபோல கடல் உள் வாங்கியது, மேலும் கடல் நீர் பெருக்கெடுத்து துறைமுக வாய்க்கால் வழியாக குடியிருப்பு பகுதிகளுக்குள் சூழ்ந்து வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்தது. தற்போது மழை புயல் காலமாதலால் கடல் நீர் பெருக்கெடுத்து துறைமுக வாய்க்காலை எட்டியுள்ளதால் மீண்டும்…

மேலும்...

முடிவுறும் தருவாயில் மல்லிப்பட்டினம் மனோரா சிறுவர் பூங்கா பணிகள்!

பட்டுக்கோட்டை (29 ஜூலை 2022): தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த மனோரா சுற்றுலா தளத்தின் சிறுவர் பூங்கா புதுப்பிக்கும் பணி முடிவுறும் தருவாயில் உள்ளது. மனோரா மல்லிப்பட்டினம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ளது. இங்கு பல சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கி.பி 814ல் மாவீரன் நெப்போலியனை ஆங்கிலேயர்கள் விழ்த்தியதன் நினைவாக ஆங்கியர்களின் நண்பன் மராட்டிய மன்னன் இரண்டாம் சரபோஜி, நினைவு சின்னமாக கட்டியதுதான் மனோரா. சித்திலமடைந்த மனோராவில் மராமத்து பணிகள் நடைபெற்றதால் 5 வருடங்களாக…

மேலும்...

மருத்துவமனைகளின் அலட்சியம் – சாதாரண நோயாளிகளும் பலியாகும் பரிதாபம்!

உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீயாக பரவி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 லட்சத்து 38 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கொரோனாவால் இதுவரை 26,273 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 671 உயிரிழந்துள்ளனர். இதுவரை 6,53,751 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 17,994 பேர் குணமடைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. இது இப்படியிருக்க அரசின் உத்தரவால் பெரும்பாலான கொரோனா…

மேலும்...

அதிராம்பட்டினத்தில் யாருக்கும் கொரோனா இல்லை – வதந்தி பரப்புபவர்களுக்கு விஏஓ எச்சரிக்கை!

தஞ்சாவூர் (30 மார்ச் 2020): தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் கொரோனா பாதிப்பு உள்ளதாக பரவும் செய்தி உண்மையில்லை என வி.ஏ.ஓ தெரிவித்துள்ளார். உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தமிழகத்திலும் பரவி வருகிறது. எனினும் அரசு உரிய நடவடிக்கை எடுத்து கொரோனா பரவாமல் தடுத்து வருகிறது. இந்நிலையில் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் கொரோனா பரவுவதாக சமூக வலைதளங்களில் சில விஷமிகள் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். இதனால் அதிராம்பட்டினத்திற்கு வருகை புரிய அருகில் உள்ள கிராம மக்கள் அச்சப்படுகின்றனர்….

மேலும்...

சிஏஏ எதிர்ப்பு: அதிராம்பட்டினத்திலும் தொடங்கியது தொடர் போராட்டம்!

அதிராம்பட்டினம் (19 பிப் 2020): குடியுரிமை சட்டத்தை எதிர்த்து ஷாஹீன் பாக் மாடலில் அதிராம்பட்டினத்திலும் தொடர் போராட்டம் தொடங்கியது. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தி நாடெங்கும் போராட்டம் நடைபெற்று வருகிறது. டெல்லி ஷஹீன் பாக் தொடர் போராட்டத்தை பின்பற்றி, தொடர் போராட்டம் அனைத்து மாநிலங்களிலும் பரவியுள்ளது. சென்னை வண்ணாரப்பேட்டையிலும் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. மேலும் இன்று மாநிலம் தழுவிய மாபெரும் அமைதி பேரணி சென்னையில்…

மேலும்...

காயல்பட்டினம் மக்கள் அடித்த ரிவீட்டு – அதிராம்பட்டினம் மக்களுக்கு ட்ரீட்டு!

அதிராம்பட்டினம் (24 ஜன 2020): காயல்பட்டினம் மக்கள் ஒட்டுமொத்தமாக வங்கிக் கணக்கை முடித்துக் கொள்வதாக அறிவித்த நிலையில் அதிராம்பட்டினம் தனியார் வங்கி வெளிநாடு வாழ் அதிரையர்களுக்கு விருந்து வைத்து உபரசிக்க அழைப்பு விடுத்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் தலைமை அலுவலகம் சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நாளிதழில் விளம்பரம் செய்யப்பட்டது. இந்த விளம்பரத்தில் பணம் எடுப்பதற்கோ, பணம் செலுத்துவதற்கோ, சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்களாக…

மேலும்...

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பட்டுக்கோட்டையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்!

பட்டுக்கோட்டை (03 ஜன 2020): தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 03.01.2020 வெள்ளிக்கிழமை பிற்பகல் பட்டுக்கோட்டை தலைமை அஞ்சலகம் அருகில் அனைத்து சமுதாய கூட்டமைப்பினர் சார்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பட்டத்தில் திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, அமமுக, திராவிடர் கழகம், தமிழக மக்கள் விடுதலை இயக்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், ஆதி திராவிட முன்னேற்ற சங்கம், வழக்கறிஞர் சங்க பிரமுகர்கள் மாணவர் அமைப்பினர் மற்றும் அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை,…

மேலும்...