கலாஷேத்ரா பாலியல் புகாரில் கல்லூரி பேராசிரியர் ஹரிபத்மன் கைது!

சென்னை (03 ஏப் 2023): கலாஷேத்ரா பாலியல் புகாரில் கல்லூரி பேராசிரியர் ஹரிபத்மன் கைது செய்யப்பட்டுள்ளார். திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரியில் உள்ள பேராசிரியர் மீது பாலியல் புகார் எழுந்துள்ளது. பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு மகளிர் ஆணையத்தின் தலைவர் குமரி, கலாஷேத்ரா கல்லூரியில் நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினார். இந்த விசாரணையில் கடந்த 2008-ம் ஆண்டு முதல்…

மேலும்...

மாணவி தற்கொலை வழக்கில் பாஜக தொண்டர் கைது!

பெங்களூரு (16 ஜன 2023): கர்நாடகாவில் மைனர் பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், பாஜக பிரமுகர் கைது செய்யப் பட்டுள்ளார். கர்நாடக மாநிலம் சிக்கமங்களூரு மாவட்டம் குத்ரேமுக் பகுதியைச் சேர்ந்த நித்தேஷ் (25), அப்பகுதியில் பாஜக பிரமுகராவார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவியை காதலித்து வந்துள்ளார். பின்பு மாணவியை நித்தேஷ் திருமணம் செய்ய மறுத்ததால் அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை அடுத்து இந்த வழக்கில் பாஜக பிரமுகரான…

மேலும்...

இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சாமியார் கைது!

ஜெய்ப்பூர்(30 டிச 2022): – ராஜஸ்தானில் 17 வயது சிறுமிக்கு ஒன்றரை ஆண்டுகளாக தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சாமியார் சர்ஜுதாஸ் கைது செய்யப்பட்டுள்ளார். நான்கு மாநிலங்களில் உள்ள ஐந்து ஆசிரமங்களின் தலைவரான சர்ஜுதாஸ், ராஜஸ்தான் மாநிலம் பில்வாராவில் உள்ள அவரது ஆசிரமத்தில் இருந்து போலீஸாரால் கைது செய்யப்பட்டார். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சிறுமியை சர்ஜுதாஸ் துன்புறுத்தி வந்ததாக புகார் எழுந்துள்ளது. முன்னதாக சிறுமியின் தாய் மீது ஆசிட் வீச்சு காரணமாகவும் பாதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் ஆசிரமத்திற்கு…

மேலும்...

வங்கி மோசடி வழக்கில் வீடியோகான் குழும தலைவர் கைது!

மும்பை (26 டிச 2022): ஐசிஐசிஐ வங்கி கடன் மோசடி வழக்கில் வீடியோகான் குழுமத்தின் தலைவர் வேணுகோபால் தூத் கைது செய்யப்பட்டுள்ளார். மும்பையில் இருந்து தூத்தை சிபிஐ கைது செய்தது. ஐசிஐசிஐ முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி சந்தா கோச்சார் மற்றும் அவரது கணவர் தீபக் கோச்சார் கைது செய்யப்பட்டதை அடுத்து வீடியோகான் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஐ.சி.ஐ.சி.ஐ 2009ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை சந்தா கோச்சார் வங்கித் தலைவராக இருந்தபோது வீடியோகான் குழுமத்துக்கு…

மேலும்...

மாட்டிறைச்சி கடத்தியதாக ஆட்டோ ஓட்டுநர் கைது!

இந்தூர் (17 டிச 2022): மத்திய பிரதேசம் இந்தூரில் மாட்டிறைச்சி கடத்தியதாக ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது பசு வதை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் ஆட்டோ ரிக்‌ஷாவில் கண்டெடுக்கப்பட்ட இறைச்சி மாட்டிறைச்சியா என்பதை சரிபார்க்க ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். இதற்கிடையில், வழக்குப் பதிவு செய்வதற்கு முன் காவல் நிலையத்திற்கு வந்த பாஜகவினர் ஆட்டோ ரிக்‌ஷா உரிமையாளர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என…

மேலும்...

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது!

சென்னை (03 டிச 2022): சென்னை நந்தனம் உடற்கல்வியியல் கல்லூரியில் மாணவிக்கு பாலியல் ரீதியான தொல்லை கொடுத்ததாக ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை நந்தனத்தில் செயல்படும் உடற்கல்வியியல் கல்லூரியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாணவிகள் பயின்று வருகின்றனர். இக்கல்லூரியின் மாணவி ஒருவருக்கு கல்லூரியில் முதல்வராக பணிபுரியும் ஜார்ஜ் ஆபிரகாம் பாலியல் ரீதியான தொல்லை கொடுத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. விசாரணையில் மாணவிக்கு செல்போன் மூலமாக ஜார்ஜ் ஆபிரகாம் குறுஞ்செய்திகளை அனுப்பியுள்ளார். மேலும் கடந்த 3 மாதங்களாகவே தனது செல்போனிற்கு…

மேலும்...

போலி நர்ஸ் ஊசி போட்டதால் சிறுவன் பலி!

ராஜபாளையம் (09 நவ 2022): ராஜபாளையத்தில், ஆக்னெஸ்ட் கேதரின் என்ற போலி செவிலியர், தனதேவநாதன் என்ற சிறுவனுக்கு காய்ச்சலுக்கு ஊசிபோட்டதால் அச்சிறுவன் இறந்துள்ளார். 6 வயது சிறுவனான தனதேவநாதனுக்கு அலோபதி வைத்தியம் பார்த்து ஊசி போட்டதை ஒப்புக்கொண்ட ஆக்னெஸ்ட் கேதரின் வீட்டை சோதனையிட்ட போது, அலோபதி மருந்துகள், மாத்திரைகள், பயன்படுத்தப்பட்ட ஊசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. விருதுநகர் மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் முருகவேல் அளித்த புகாரின் பேரில் ஆக்னெஸ்ட் கேதரின் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும்...

மதமாற்ற முயற்சியில் ஈடுபட்டதாக மூன்று வெளிநாட்டவர்கள் கைது!

கவுஹாத்தி (28 அக் 2022): கிறிஸ்தவ மதத்திற்கு மாற்ற முயன்றதாக ஸ்வீடன் நாட்டை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டனர். ஹன்னா மைக்கேலா ப்ளூம், மார்கஸ் ஆர்னே ஹென்டிக் ப்ளூம் மற்றும் சுசன்னா எலிசபெத் ஹகன்சன் ஆகியோர் மீது அசாம் போலீசார் வழக்குப் பதிவு செய்து நாடு கடத்தப்பட்டனர். இந்திய அதிகாரிகளுடன் ஸ்வீடன் தூதரகம் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு அவர்களை விடுவித்த போலீசார் பின்பு அவர்களை நாடுகடத்தினர். சுற்றுலா விசாவில் இந்தியாவுக்கு வந்த இவர்கள்,…

மேலும்...

பாகிஸ்தானுக்கு உளவு வேலை பார்த்த ரவிபிரகாஷ் மீனா கைது!

ஜெய்ப்பூர் (08 அக் 2022): பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக ராஜஸ்தானை சேர்ந்த் அ31 வயது ரவிபிரகாஷ் மீனா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் கரௌலி மாவட்டத்தில் உள்ள சபோதாரா பகுதியைச் சேர்ந்த ரவிபிரகாஷ் மீனா, டெல்லியில் உள்ள சேனா பவனில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐக்கு சமூக வலைதளங்கள் மூலம் இந்திய ராணுவ ரகசிய தகவல்களை கொடுத்துள்ளார். இதற்காக அவருக்கு பண பரிவர்த்தனைகள் நடந்துள்ளது. மேலும் பாகிஸ்தான் ஏஜெண்ட் அஞ்சலி திவாரி…

மேலும்...

கட்டிப்பிடித்த இளம்பெண் – முதியவருக்கு என்ன நடந்தது தெரியுமா?

மும்பை (07 அக் 2022): முதியவர்களை கட்டிப்பிடித்து செல்போன்கள் மற்றும் தங்க ஆபரணங்களை திருடிய இளம் பெண் கீதா படேல் என்பவரை மும்பை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மும்பையில் 72 வயதான முதியவர் ஷாப்பிங் முடித்து ஆட்டோவில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது. கீதா ஆட்டோவை நிறுத்திவிட்டு லிப்ட் கேட்டாள். பின்னர் அந்த இளம் பெண் ஆட்டோவை ஒரு கட்டிடத்தின் முன் நிறுத்தச் சொல்லி முதியவரைக் கட்டித் தழுவி நன்றி செலுத்தினார். முதியவர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது…

மேலும்...