குஜராத்தில் காங்கிரஸின் தோல்விக்கு காரணமான உவைசியும் ஆம் ஆத்மியும்!

அஹமதாபாத் (09 டிச 2022): ஆம் ஆத்மி கட்சியும் (ஏஏபி) மற்றும் அசாதுதீன் ஒவைசி தலைமையிலான ஏஐஎம்ஐஎம் கட்சியும் குஜராத்தில் சிறுபான்மையினரின் வாக்குகளை பிரித்து காங்கிரஸின் கனவை தகர்த்துள்ளது. குஜராத்தில் சிறுபான்மையினர், முதன்மையாக முஸ்லீம்கள், கடந்த பல தசாப்தங்களாக, குறிப்பாக 2002 பிந்தைய குஜராத் கலவரத்திற்குப் பிறகு காங்கிரஸின் விசுவாசமான வாக்காளர்களாக உள்ளனர். இந்நிலையில் சட்டசபை தேர்தல் டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் நடந்து, டிசம்பர் 8 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டன. பாரதிய…

மேலும்...

டெல்லியில் 15 வேட்பாளர்களை நிறுத்தியுள்ள உவைசி கட்சி!

புதுடெல்லி (28 நவ 2022): டெல்லி மாநகராட்சி தேர்தலில் டெல்லியின் வெவ்வேறு சட்டமன்ற வார்டுகளில் AIMIM தனது 15 வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. தேசிய தலைநகரில் தனது கட்சியின் பொது பேரணிகளில் உரையாற்றிய அசாதுதீன் ஒவைசி, இங்குள்ள பல பகுதிகள் வளர்ச்சியடையவில்லை என்று கூறினார். மேலும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலையும் ஒவைசி கடுமையாக தாக்கிப் பேசினார். மேலும் டெல்லியின் வளர்ச்சிக்காக யாரும் உழைக்கவில்லை என்றும் முந்தைய அரசுகளை கடுமையாக சாடினார்.

மேலும்...

அசாதுதீன் ஒவைசிக்கு சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் விருது!

புதுடெல்லி (16 மார்ச் 2022): அசாதுதீன் ஒவைசிக்கு “ஆண்டின் சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர்” விருது லோக்மத் குழுவால் வழங்கப்பட்டுள்ளது. லோக்மத் நாடாளுமன்ற விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் எட்டு வெவ்வேறு பிரிவுகளில் (லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் இருந்து தலா நான்கு) சிறந்த பங்களிப்புக்காக இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படுகிறது. ஜூரி குழு வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுக்க அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற பங்களிப்பை ஆய்வு செய்து விருதுக்கு தேர்வு செய்தது. கோவிட்-19 தொற்றுநோய்…

மேலும்...

கடுமையாக உழைத்தோம் – அசாதுத்தீன் ஒவைசி!

புதுடெல்லி (11 மார்ச் 2022): உத்தரப்பிரதேசத் தேர்தலில் கடுமையாக உழைத்தும் மக்கள் மாற்றி தீர்ப்பளித்துவிட்டனர் என்று ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவரும், மக்களவை உறுப்பினருமான அசாதுதீன் ஒவைசி தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற்றது. வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில், உத்தரபிரதேசம், உத்தரகண்ட், கோவா, மணிப்பூரில் பாஜக நினைத்துப் பார்க்காத வெற்றியை பெற்றது. காங்கிரஸ் வசம் இருந்த பஞ்சாப்பை ஆம் ஆத்மி கைப்பற்றியது. இதனையடுத்து தேர்தல் முடிவுகள் குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும்…

மேலும்...

உவைஸி தலைமையிலான கூட்டணியின் 100 வேட்பாளர்களும் படுதோல்வி!

லக்னோ (10 மார்ச் 2022): உத்திர பிரதேசத்தில் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) உ.பி. தேர்தலில் 100 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியிருந்த நிலையில் அவர்களில் ஒருவர் கூட வெற்றிபெறவில்லை. ஏஐஎம்ஐஎம் மேலாளரும், ஹைதராபாத் மக்களவை எம்பியுமான அசாதுதீன் ஓவைசி, உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் முஸ்லிம்கள், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓபிசிக்கள்) மற்றும் தலித்துகள் மத்தியில் ஆதரவு தளத்தைக் கொண்ட கட்சிகளை உள்ளடக்கிய பாகிதாரி பரிவர்தன் மோர்ச்சா என்ற புதிய முன்னணியைத் தொடங்கினார். பாகிதாரி…

மேலும்...

ஹிஜாப் அணிந்த பெண் இந்தியாவின் பிரதமராவார் – அசாதுதீன் ஒவைசி!

லக்னோ (13 பிப் 2022): ஒரு நாள் ஹிஜாப் அணிந்த பெண் இந்தியாவின் பிரதமராக வருவார் என்று அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) தலைவரும், ஹைதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி தெரிவித்துள்ளார். உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற பேரணியில் பேசிய ஒவைசி, ஹிஜாப் அணிந்த பெண்கள் மருத்துவர்களாகவும், மாவட்ட நீதிபதிகளாகவும், துணை மாவட்ட மாஜிஸ்திரேட்டுகளாகவும் (SDM) ஒரு நாள் இந்தியாவின் பிரதமராகவும் மாறுவார்கள் என்று கூறினார். ஹிஜாப் விவகாரம் குறித்து பேசிய அவர், “ஹிஜாப் அணிவதற்கான உரிமைக்காகப் போராடும்…

மேலும்...

ஹிஜாப் விவகாரம் – பாகிஸ்தானுக்கு அசாதுதீன் ஒவைசி எச்சரிக்கை!

ஐதராபாத் (10 பிப் 2022): இந்தியாவில் ஹிஜாப் விவகாரத்தில் பாகிஸ்தான் மக்கள் தலையிட வேண்டாம் என ஏ.ஐ.எம்.ஐ.எம் தலைவர் அசாதுதீன் ஒவைசி எச்சரிக்கை விடுத்துள்ளார். கர்நாடகாவில் பள்ளி கல்லூரிகளுக்கு ஹிஜாப் அணிந்து வர முஸ்லீம் பெண்களுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு பி.யூ. கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு இந்துத்துவா அமைப்பை சேர்ந்த மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அங்கு பரபரப்பு நிலவியது. மேலும் ஹிஜாப் அணிய தடை…

மேலும்...

அசாதுதீன் ஒவைசியுடன் ஆர் எஸ் எஸ் தலைவர் – சர்ச்சையை ஏற்படுத்திய போலி புகைப்படம்!

ஐதராபாத் (18 ஜன 2022): அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்திஹாதுல் முஸ்லிமீன் தலைவரும், ஹைதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசியின் படத்தை , ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்துடன் மார்பிங் செய்து பரப்பியதாக இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. படம் வைரலானதை அடுத்து, AIMIM தலைவர் ஷேக் முயீனுதீன் அப்ரார், ஹைதராபாத் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை எதிர்க்கும் கட்சி தொண்டர்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த புகாரை அடுத்து,…

மேலும்...

சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணி – அசாதுத்தின் உவைஸி கட்சி மறுப்பு!

லக்னோ (25 ஜூலை 2021): எதிர்வரும் உத்தரபிரதேச சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணி வைப்பதாக வெளியான செய்திகளை எய்ஐஎம் மறுத்துள்ளது. கட்சியின் உபி மாநிலத் தலைவர் சவுக்கத் அலி இதனை தெறிவித்துள்ளார். உத்திர பிரதேசத்தில் எதிர் வரும் சட்டசபை தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. இந்நிலையில் சமாஜ்வாடி கட்சியுடன் எய்ஐஎம் கூட்டணி வைப்பதாக வெளியான தகவலை அக்கட்சி மறுத்துள்ளது. “சமாஜ்வாடி கட்சி ஆட்சிக்கு வந்தால் அகிலேஷ் யாத, வ் முஸ்லிம் தலைவரை துணை முதல்வராக்குவார்…

மேலும்...

தமிழகத்தில் உவைஸி கட்சி வேட்பாளர்கள் பெயர் அறிவிப்பு!

சென்னை (15 மார்ச் 2021): தமிழகத்தில் அ ம.மு.க. கூட்டணியில் உள்ள ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம் (AIMIM) கட்சிக்கு 3 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது இறுதி செய்யப்பட்டு தொகுதி ஒதுக்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த நிலையில், ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி சார்பில் போட்டியிடும் 3 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சி வெளியிட்டுள்ளது. அதன்படி, வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதியில் வக்கீல் அஹமத், சங்கராபுரம் சட்டமன்றத் தொகுதியில் முஜிபுர் ரஹ்மான், கிருஷ்ணகிரி சட்டமன்றத் தொகுதியில் அமீனுல்லா…

மேலும்...