கத்தாரில் ஹயா அட்டை வைத்திருப்பவர்களுக்கு அவசர உத்தரவு!

தோஹா (21 ஜன 2023): ஹயா அட்டை வைத்திருப்பவர்கள் 23 நாட்களுக்குள் கத்தாரை விட்டு வெளியேற வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. FIFA 2022 உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் ஒரு பகுதியாக, ஹயா அட்டையில் கத்தாருக்கு வந்தவர்கள் ஜனவரி 23 ஆம் தேதிக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும். ஹயா அட்டையில் கத்தாருக்கு வருபவர்கள் நவம்பர் 1 முதல் ஜனவரி 23 வரை அனுமதிக்கப்பட்டனர். இன்னும் சில மணிநேரங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், நேரம் நீட்டிக்கப்படும்…

மேலும்...

உலகிலேயே பாதுகாப்பான நாடு எது தெரியுமா?

கத்தார் (15 ஜன 2023): உலகிலேயே சிறந்த வாழ்க்கைத் தரமும், மக்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கு ஏற்ற கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய சூழ்நிலைகளும் கொண்ட நாடுகளின் பட்டியல் சற்றுமுன் வெளியாகியுள்ளது. சர்வதேச அளவில் தர ஆய்வதில் உலகில் முன்னணி வகிக்கும் Numbeo நிறுவனம் இதனை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. (இந்நேரம்.காம்) உலகில் 142 நாடுகளை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வில் வெளியான இந்த பட்டியலில் கத்தார் நாடு முன்னணி வகிக்கிறது. Numbeo எனும் பன்னாட்டு நிறுவனம் வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்கள் மற்றும்…

மேலும்...

21ஆம் நூற்றாண்டின் சிறந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டி- கத்தாருக்கு முதலிடம்!

தோஹா: 21ம் நூற்றாண்டின் சிறந்த கால்பந்து உலகக் கோப்பை போட்டியை நடத்தியதில் கத்தார் முதலிடம் பிடித்துள்ளது. 2002 முதல் 2022 வரையிலான கால்பந்து உலகக்கோப்பை போட்டிகள் குறித்து உலகெங்கிலும் உள்ள கால்பந்து ரசிகர்கள் மத்தியில் பிபிசி நடத்திய கருத்துக்கணிப்பில் கத்தார் முதலிடம் பிடித்தது. இந்த நூற்றாண்டின் சிறந்த உலகக் கோப்பை கணக்கெடுப்பில், பதிலளித்தவர்களில் 78 சதவீதம் பேர் கத்தாருக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். இரண்டாவது இடம் ஜப்பானும் கொரியாவும் இணைந்து நடத்திய உலகக் கோப்பை போட்டியாகும். 2014-ம் ஆண்டு…

மேலும்...

உலகக் கோப்பை – கத்தாரில் கண்ணியமாக நடத்தப்பட்டேன் – மேற்கத்திய பெண்ணின் நேர்காணல்!

கத்தரில் FIFA World cup விளையாட்டு அரங்கங்களில் விதிக்கப்பட்ட மது தடை, மேற்கத்திய ஊடகங்களுக்கு கடும் கோபத்தை வரவழைத்து இருந்தது அனைவரும் அறிந்த சங்கதி. தற்போது போட்டி முடிவடைந்தபின் தத்தம் நாடுகளுக்குத் திரும்பிய ரசிகர்கள், உள்ளூர் ஊடகங்களுக்குத் தந்து கொண்டிருக்கும் நேர்காணல்கள், வெறுப்பை பரப்பிய ஊடகங்களின் முதுகெலும்பை முறித்துப் போட்டிருக்கின்றன. “என் போன்ற இளம் பெண்களுக்கு கத்தர் ஓர் ஆபத்தான இடம் என எண்ணி மிகவும் பயந்திருந்தேன். மது இல்லாத காரணத்தால், எந்த ஒரு அசம்பாவிதமும் இன்றி,…

மேலும்...

அர்ஜென்டினா வீரர் மெஸ்ஸி இந்தியாவில் பிறந்தவர் – காங்கிரஸ் எம்பி பகீர் தகவல்!

புதுடெல்லி (19 டிச 2022): அர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி அஸ்ஸாமில் பிறந்தவர் என்று காங்கிரஸ் எம்பி அப்துல் காலிக் கூறியுள்ளார். இதுகுறித்து அப்துல் காலிக் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் இதனை தெரிவித்துள்ளார். ஆனால் அவரின் தகவலுக்கு மற்றவர்கள் எம்பியை கேலி செய்ய முன்வந்ததால் அவர் சில நிமிடங்களில் அந்த ட்வீட்டை நீக்கியுள்ளார். அசாமில் உள்ள பார்பெட்டா தொகுதியில் இருந்து மக்களவைக்கு வெற்றி பெற்ற காங்கிரஸ் தலைவர் காலிக். இவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “மெஸ்ஸி…

மேலும்...

மெஸ்ஸியின் கனவு வென்றது – உலகக் கோப்பையுடன் அர்ஜெண்டினா!

தோஹா (19 டிச 2022): 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அரபு நாடான கத்தாரில் கடந்த ஒரு மாத காலமாக நடந்து வந்தது. 32 நாடுகள் கலந்து கொண்ட இந்த கால்பந்து திருவிழாவில் நேற்றிரவு லுசைல் ஐகானிக் ஸ்டேடியத்தில் அரங்கேறிய மகுடத்துக்கான இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பிரான்சும், முன்னாள் சாம்பியன் அர்ஜென்டினாவும் பலப்பரீட்சையில் இறங்கின. கோடிக்கணக்கான கால்பந்து ரசிகர்களின் ஒட்டுமொத்த பார்வையையும் தன்னகத்தே ஈர்த்த இந்த இறுதியுத்தம் முதல் வினாடியில் இருந்தே விறுவிறுப்பாக நகர்ந்தது….

மேலும்...

உலகக்கோப்பை கால்பந்து – இறுதிப் போட்டிக்கு முன்னேறியது அர்ஜெண்டினா!

தோஹா (14 டிச 2022): கத்தாரில் நடந்து வரும் 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி இறுதிகட்டத்தை நெருங்கி விட்டது. 32 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக், 2-வது சுற்று, கால்இறுதி முடிவில் இப்போது அர்ஜென்டினா, நடப்பு சாம்பியன் பிரான்ஸ், குரோஷியா, மொராக்கோ ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறியுள்ளன. இந்த நிலையில் லுசைஸ் ஐகானிக் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த முதலாவது அரைஇறுதியில் முன்னாள் சாம்பியனான அர்ஜென்டினா அணி, குரோஷியாவுடன் மோதியது. இரு அணிகளும் சரிசம…

மேலும்...

சர்ச்சை, ஓய்வு, இப்போது தேசிய நாயகன் -மொரோக்காவின் அதிசயம் ஹக்கீம்!

தோஹா (13 டிச 2022): மொராக்கோ அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி 2022 FIFA உலகக் கோப்பையின் அரையிறுதிப் போட்டியை விளையாடத் தயாராக உள்ளது. இதுவரை எந்த ஆப்பிரிக்க நாடும் உலகக் கோப்பையின் அரையிறுதிக்கு கூட எட்டியதில்லை. மொராக்கோ அணி விளையாடும் ஆறாவது உலகக் கோப்பை இதுவாகும். 2018-ல் அந்த அணி 27-வது இடத்தில் இருந்தது.. அணியை அரையிறுதிக்கு அழைத்துச் செல்வதில் பல வீரர்கள் பங்களித்துள்ளனர். ஆனால் மிக முக்கியமான பங்களிப்பு 29 வயதான ஹக்கீம் ஜியேச். இவர்…

மேலும்...

சிறு வியாபாரி தந்தைக்கும் வீட்டுப் பணிப்பெண் தாய்க்கும் பிறந்த மொராக்கோ வீரர் ஹக்கீமி!

தோஹா (11 டிச 2022): கத்தார் உலகக் கோப்பை கால்பந்து போட்டி முன் எப்போதும் இல்லாத அளவுக்கு பல சுவாரஸ்யங்களை உள்ளடக்கியுள்ளது. ஜாம்பாவான்களை வெளியே அனுப்பிவிட்டு மொராக்கோ அணி அரையிறுதிக்குள் நுழைந்து ஆச்சர்யப்படுத்தியுள்ளது. இந்நிலையில் அந்த அணியின் நட்சத்திர வீரராக கருதப்படும் 24 வயது அஷ்ரஃப் ஹக்கீமி குறித்து பல சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்றைய காலிறுதி முந்தைய போட்டியில் ஸ்பெயின் அணிக்கு எதிராக பெனால்டி சூட்டில் கோல் அடித்து மொராக்கோ காலிறுதிக்குள் நுழைய மிக முக்கிய…

மேலும்...

மொராக்காவை தாண்டி யாரும் இல்லை – மொராக்கோ கால்பந்து அணிக்கு துபாய் ஆட்சியாளர் வாழ்த்து!

தோஹா (11 டிச 2022): கத்தார் உலகக் கோப்பையின் அரையிறுதியில் போர்ச்சுக்கலை வீழ்த்திய மொராக்கோ அணியின் வீரர்களுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும், துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில். “உலகக் கோப்பையில் மொராக்கோவைத் தாண்டி யாரும் இல்லை. அனைத்து அரேபியர்களுக்கும் வாழ்த்துக்கள். மொராக்கோவின் சிங்கங்கள் அரபுக் கனவை நனவாக்குகின்றன” என்று ஷேக் முகமது ட்வீட் செய்துள்ளார்.  

மேலும்...