ஹத்ராஸ் தலித் சிறுமி வன்புணர்வு வழக்கில் திடீர் திருப்பம்!
லக்னோ (18 டிச 2020): உத்தரபிரதேசம் ஹத்ராஸில் இளம் பெண் கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லபட்டதை சிபிஐ உறுதி செய்துள்ளது. இந்த வழக்கு விசாரணையின் அடிப்படையில் மத்திய புலனாய்வுப் பிரிவு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. ஹத்ராஸில் ஒரு தலித் சிறுமி நான்கு இளைஞர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) கண்டறிந்துள்ளது. கற்பழிப்பு மற்றும் கொலை குற்றச்சாட்டில் ஹத்ராஸில் உள்ள நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேருக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிகை…