கேரளாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர் வீட்டுக்கு அருகில் வசித்தவர் திடீர் மரணம்!
கோட்டயம் (13 மார்ச் 2020): கேரளாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர் வீட்டுக்கு அருகில் வசித்தவர் வெள்ளிக்கிழமை அன்று திடீரென மரணம் அடைந்துள்ளார். இந்தியாவை பொறுத்தவரை கொரோனா வைரஸ் கேரளாவில்தான் முதலில் பரவியது. அந்த வகையில் தற்போது கேரளாவில் அதிக அளவில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இது இப்படியிருக்க கோட்டயத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு கோட்டயம் மருத்துவக் கல்லூரியில் ஒருவர் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது வீட்டுக்கு அருகில் வசித்த ஒருவர் இன்று (வெள்ளிக்கிழமை) திடீரென மரணம் அடைந்துள்ளார்….