கெஞ்சிக் கேட்கிறேன் – ஸ்டாலின் உருக்கம்!

சென்னை (13 செப் 2020): “மாணவர்களை கெஞ்சிக் கேட்கிறேன் தயவு செய்து தற்கொலை செய்து கொள்ளாதீர்கள்”. என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நீட் தேர்வு இன்று தொடங்குகிறது. இந்நிலையில் நீட் தேர்வு அச்சத்தால், தேர்வுக்கு தயாராகி வந்த தமிழகத்தைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் சமீபத்தில் தற்கொலை செய்துக்கொண்டனர். இது நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைகள் குறித்து காணொளி காட்சியில் பேசியுள்ள ஸ்டாலின்,”மாணவர்களை கெஞ்சிக் கேட்கிறேன்; இனி யாரும் தற்கொலை முடிவை எடுக்காதீர்கள். நீட் தேர்வுக்கு தயாரான…

மேலும்...

திமுகவுக்கு பாஜக திடீர் பாராட்டு – இதுதான் காரணமா?

சென்னை (10 செப் 2020): திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு பாராட்டு தெரிவித்துள்ளார். நேற்று திமுக சார்பில் நடத்தப்பட்ட வீடியோ கார்ஃபரன்ஸ் மூலம் நடத்தப்பட்ட பொதுக்குழு கூட்டத்தில் 3000 க்கும் அதிகமானோர் கலந்து கொண்டுள்ளனர். இது டெல்லி வட்டாரத்தை அசைத்துப்பார்த்துள்ளது. ஏனென்றால் தேசிய கட்சிகள் கூட இந்த அளவில் தொழில்நுட்ப பொதுக்குழுவை கூட்டியதில்லை. இந்நிலையில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவும் இந்த மீட்டிங் குறித்து தனது வியப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.. அதுமட்டுமல்லாமல்…

மேலும்...

கதறி, கண்ணீர் விட்ட துரைமுருகன் – அப்படி என்ன சொல்லிவிட்டார்,ஸ்டாலின்?

சென்னை (09 செப் 2020): திமுக பொதுக்குழுவில் ஸ்டாலின் பேசியதைக் கேட்டு துரைமுருகன் கண்ணீர் விட்டு அழுதுள்ளார். தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொளிக் காட்சி மூலம் நடைபெற்றது. அப்போது பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், “துரைமுருகன் பொதுச்செயலாளர் ஆனதையும், டி.ஆர்.பாலு பொருளாளர் ஆனதையும் அறிந்தால் முன்னாள் முதல்வர் கலைஞர் மகிழ்ச்சி அடைவார். துரைமுருகன், டி.ஆர்.பாலுவை பார்க்கும்போது கலைஞரின் முகம் தான் எனக்குத் தெரிகிறது. அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன், க.அன்பழகன் வகித்தப் பதவி…

மேலும்...

திமுகவில் போட்டி போடும் டி.ஆர்.பாலு – துரைமுருகன்!

சென்னை (03 செப் 2020): திமுக பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலு மனுதாக்கல் செய்துள்ளார். தி.மு.க.வில் பொதுச்செயலாளர் க.அன்பழகன் மறைவுக்கு பிறகு அவர் வகித்து வந்த பதவி நீண்ட நாட்களாக காலியாக இருந்தது. அந்த பதவிக்கு ஒருவரை தேர்வு செய்வதற்காக கட்சியின் பொதுக்குழு வருகிற 9-ந்தேதி கூடுகிறது. இந்த கூட்டத்தில் பொதுச்செயலாளர் தேர்வு மட்டுமின்றி காலியாக உள்ள பொருளாளர் பதவிக்கும் யார் தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்பதை தலைவர் மு.க.ஸ்டாலின் முறைப்படி அறிவிக்க உள்ளார். இதையொட்டி தி.மு.க.வில் பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிக்கு…

மேலும்...

கொரோனா காலத்தில் மக்கள் வீட்டில் இருந்ததற்கு தண்டனையா? – ஸ்டாலின் சரமாரி கேள்வி!

சென்னை (19 ஜூலை 2020): “கொரோனா காலத்தில் மக்கள் வீட்டில் இருப்பதற்கு மின் கட்டணத்தைப் பார்த்தால் மக்கள் ஷாக் ஆகும் அளவுக்கு அதிகமாக உள்ளது” என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து ஸ்டாலின் வீடியோ ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ஸ்டாலின் பேசியுள்ளதாவது: தமிழக அரசின் மின்கட்டணத்தை பார்த்தால் மின்சாரம் நமக்குள் பாய்ந்தது போல் இருக்கிறது. மக்கள் எல்லாரும் வீட்டில் இருந்ததால் மின்சாரம் அதிகமாக செலவாகி இருக்கும் என்று சொல்கிறார்கள். ஊரடங்கில்…

மேலும்...

ஆதாரங்கள் இருப்பதாக நீதிமன்றம் கூறியும் தாமதிப்பது ஏன் – ஸ்டாலின் கேள்வி!

சென்னை (01 ஜூலை 2020): சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பாக ஆதாரங்கள் இருப்பதாக நீதிமன்றம் கூறியும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ட்விட்டர் பதிவில், ‘எடப்பாடி பழனிசாமி நீங்கள், நீதித்துறையின் முடிவுக்காக காத்திருப்பதாக கூறினீர்கள். சென்னை உயர்நீதிமன்றம் போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய போதுமான முதன்மை ஆதாரங்கள் உள்ளதாக கூறியுள்ளது. இதுவரை கைது செய்யாமல் இருப்பதற்கு என்ன காரணம் சொல்லப்…

மேலும்...

நாங்கள் பாஜக பக்கம் இருக்கிறோம்: ஸ்டாலின் – கொந்தளிப்பில் காங்கிரஸ்!

புதுடெல்லி (21 ஜூன் 2020): இந்திய சீனா எல்லை விவகாரத்தில் மத்திய அரசை விமர்சித்து வரும் காங்கிரஸுக்கு திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் ஆதரவளிக்கவில்லை என்பதால் காங்கிரஸ் கட்சி கடும் கொந்தளிப்பில் உள்ளதாக கூறப்படுகிறது.. லடாக் கிழக்கு எல்லையில் கால்வன் பள்ளத்தாக்கை கைப்பற்ற சீனா முயற்சித்தது. இதை இந்திய வீரர்கள் முறியடித்தனர். இம்மோதலில் மொத்தம் 20 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். சீனா தரப்பில் 43 பேர் பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது. இவ்விவகாரம் இந்தியர்களிடையே அதிர்ச்சியை…

மேலும்...

நீதிமன்றம் செல்வதை தவிர வேறு வழியில்லை – ஸ்டாலின் திட்டவட்டம்!

சென்னை (16 ஜூன் 2020): கொரோனா பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு காணாவிட்டால் திமுக நீதிமன்றத்தை நாடும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: கொரோனா நோய்த்தொற்று கட்டுக்குள் அடங்காமல் மேலும் பரவி வருகிறது. தமிழகத்தில் மே 31ம் தேதிவரை அதாவது 71 நாட்களில் 176 பேர் இறந்திருக்கிறார்கள். அடுத்த 15 நாட்களுக்குள் மட்டும் 259 பேர் இறந்திருக்கிறார்கள். இதனைப் பார்த்து மாநில அரசாங்கத்துக்கு…

மேலும்...

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு காய்ச்சல் இருமல் – பரபரப்பில் திமுகவினர்!

சென்னை (08 ஜூன் 2020): திமுக தலைவர் ஸ்டாலினுக்கு லேசான காய்ச்சல் இருமல் இருந்ததால் கொரோனா அறிகுறியாக இருக்குமோ என அவரது உறவினர்களும் திமுகவினரும் பதற்றத்தில் காணப்பட்டனர். திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் கொரோனாவைரஸ் காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை நேரில் சென்று நலம் விசாரித்த ஸ்டாலின், மிகுந்த வருத்ததில் இருந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 5ஆம் தேதி ஸ்டாலினுக்கு திடீரென தொடர்ந்து இருமலும், லேசான காய்ச்சலும் இருந்துள்ளது. தொடர் இருமல், காய்ச்சல் இருந்தால்…

மேலும்...

திமுக ஒப்பந்தமிட்டுள்ள பிரசாந்த் கிஷோர் நிறுவனம் திடீர் மூடல்!

சென்னை (07 ஜூன் 2020): சென்னை, அண்ணா நகரில் உள்ள பிரசாந்த் கிஷோரின் ‘ஐபேக்’ அலுவலகம் திடீரென மூடப்பட்டு உள்ளதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அடுத்த ஆண்டுக்கான சட்டசபை தேர்தல் பணிகளுக்கு திட்டமிட, பிரசாந்த் கிஷோர் நிறுவனத்துடன் தி.மு.க. தலைமை ஒப்பந்தம் செய்தது. பிரசாந்த் தலைமையிலான ‘ஐபேக்’ நிறுவனத்தின் சார்பில் 234 தொகுதிகளுக்கும் ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டு களப்பணி துவக்கப்பட்டுள்ளது. தி.மு.க.,வின் ‘ஒருங்கிணைவோம் வா’ செயல் திட்டத்தால், சில மாவட்ட செயலர்கள் மற்றும் அக்கட்சியின் தகவல்தொழில்நுட்ப அணி நிர்வாகிகள்…

மேலும்...