நீட் தேர்வு ஆய்வறிக்கை என்ன சொல்கிறது? – நீதிபதி ஏ.கே ராஜன் விளக்கம்!

சென்னை (14 ஜூலை 2021): நீட் தேர்வு  ஆய்வறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் நீதிபதி  ஏ.கே ராஜன் குழு இன்று சம்பர்ப்பித்தது. நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய கடந்த மாதம் 10-ம் தேதி நீதிபதி ஏ.கே ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு இருந்தது. பொதுமக்கள் கருத்துக்களை பெற்று அதுதொடர்பான அறிக்கையை தயார் செய்து இன்று அந்த அறிக்கை முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வால் அரசு பள்ளி மற்றும் ஏழை மாணவர்களுக்கு…

மேலும்...

சென்னை உள்ளிட்ட 19 மாவட்டங்களில் இன்று கொரோனா உயிரிழப்பு எதுவும் இல்லை!

சென்னை (12 ஜூலை 2021): சென்னையில் நான்கரை மாதங்களுக்குப் பிறகு இன்று கொரோனா உயிரிழப்பு எதுவும் இல்லை. தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் 2 வது அலை தினசரி கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இருப்பினும் கோவை, ஈரோடு உள்ளிட்ட சில மாவட்டங்களில் மட்டும் தினசரி நோய் தொற்று ஏற்ற இறக்கங்களோடு இருந்து வருகிறது. குறிப்பாக சென்னையில் கடந்த மே மாதம் தினசரி பாதிப்பு உச்சத்தை தொட்டு இருந்தது. மே 12-ந்தேதி அன்று அதிகபட்சமாக 7,564 பேருக்கு நோய்…

மேலும்...

ரஜினியின் மக்கள் மன்றம் கலைப்பு – நடிகர் ரஜினி பரபரப்பு தகவல்!

சென்னை (12 ஜூலை 2021): “அரசியலுக்காக தொடங்கப்பட்ட ரஜினி மக்கள் மன்றம், முழுமையாக கலைக்கப்படுகிறது!” என நடிகர் ரஜினி இன்று அறிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்தை தனிக்கட்சி தொடங்க வைத்து தமிழகத்தில் வலுவாக காலூன்ற பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க.) திட்டமிட்டிருந்தது. ஆனால் ‘உடல் நிலை ஒத்துழைக்காததால் அரசியலுக்கு வரப்போவதில்லை!’ என கடந்த தேர்தலுக்கு முன்பு ரஜினி அறிவித்தார். பின்பு அண்ணாத்தே படப்பிடிப்புக்கு போனார். பின்னர் அமெரிக்காவுக்கு சென்று சிகிச்சை எடுத்து கொண்டார். அமெரிக்காவிலிருந்து திரும்பிய ரஜினி, தமது…

மேலும்...

கோவிட் காரணமாக வெளிநாடுகளில் இறந்த தமிழர்கள் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை!

அபுதாபி (04 ஜூலை 2021);கோவிட் 19 பாதிப்பால் வெளிநாடுகளில் குறிப்பாக வளைகுடாவில் இறந்த தமிழர்களுக்கும் தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. கோவிடால் இறந்த வளைகுடா கேரளவாசிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க கேரளா அரசிடம் கோரிக்கை வைக்கப்படும் என்று புகழ்பெற்ற நிறுவனமான லூலூ குழும உரிமையாளர் எம்.ஏ. யூசுப் அலி அபுதாபியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அப்போது அவர் தெரிவிக்கையில், கோவிட் காரணமாக வெளிநாடுகளில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கும் இழப்பீடு வழங்க உரிமை உண்டு கேரளா…

மேலும்...

தமிழ்நாடுதான் டாப், டெல்லி, பீகார் படுமோசம் – ஆய்வறிக்கை வெளியீடு!

புதுடெல்லி (03 ஜூலை 2021): கொரோனா 2ஆம் அலையை தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலங்கள் சிறப்பாக கையாண்டதாகவும், டெல்லி, பீகார், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் மோசமாகக் கையாண்டு உள்ளதாகவும் ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா 2ஆம் அலை அதிகரிக்கத் தொடங்கியது. அப்போது தினசரி வைரஸ் பாதிப்பு நான்கு லட்சம் வரை கூட சென்றது. அதேபோல தினசரி உயிரிழப்புகளும் நான்காயிரம் வரை கூடச் சென்றது. ஆக்சிஜன் பற்றாக்குறை மிகப்பெரிய சவாலாக…

மேலும்...

தமிழ் நாட்டில் கொரோனாவால் ஒரேநாளில் 118 பேர் பலி!

சென்னை (30 ஜூன் 2021): கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 118 பேர் இறந்தனர். இதனுடன் தமிழகத்தில் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 32,506 ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் செவ்வாயன்று 4,512 பேர் புதிதாக கொரோனா தொற்றால் (Coronavirus) பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,75,190 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 275 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில்…

மேலும்...

நீட் தேர்வு விவகாரத்தில் திடீர் திருப்பம் – நீதிமன்றம் தமிழக அரசுக்கு கேள்வி!

சென்னை (29 ஜூன் 2021): “நீட் தேர்வு விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு முரணான நிலைப்பாட்டை எடுக்க முடியாது!” என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. நீட் தேர்வு குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில், ஒன்பது பேர் அடங்கிய குழுவை நியமித்து தமிழக அரசு, ஜூன் 10ம் தேதி அரசாணை பிறப்பித்துள்ளது. நீட் தேர்வு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றால், மாற்று வழி குறித்தும்,…

மேலும்...

காங்கிரஸ் தலைவர் பீட்டர் அல்போன்ஸுக்கு தமிழக அரசு புதிய பதவி!

சென்னை (29 ஜூன் 2021): தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் திருத்தி அமைக்கப்பட்டு, அதன் தலைவராக முன்னாள் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் நியமனம் செய்யப் பட்டுள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாட்டில் வாழும் மதம் மற்றும் மொழி வாரியான சிறுபான்மையினரின் நலன்களைப் பேணிக் காத்திடவும், அவர்களின் உரிமைகளை பாதுகாக்கவும் கடந்த 1989 ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் நாளன்று அப்போதைய முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் அமைக்கப்பட்டது. அதன்…

மேலும்...

மாட்டி‌‌‌றை‌‌ச்சி விற்கக்கூடாது என உத்தரவிட்ட வட்டாட்சியர் – விசாரணையில் இறங்கிய அமைச்சர்!

திருப்பூர் (மாட்டி‌‌‌றை‌‌ச்சி விற்கக்கூடாது என வட்டாட்சியர் எச்சரித்தது குறித்து விசாரணை நடத்த அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார். திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் மாட்டு இறைச்சிக் கடைகள் இயங்கி வருகின்றன. இந்த சூழலில் மாட்டு இறைச்சிக்கடை உரிமையாளர் ஒருவரை அம்மாவட்ட வட்டாட்சியர் அழைத்து பேசியுள்ளார். துளுக்கமுதுர் அருகே உள்ள கானாங்குளம் பகுதியில் மாட்டிறைச்சிக் கடைகளை நடத்தி வரும் வேலுசாமி என்பவரை அவிநாசி வட்டாட்சியர் சுப்ரமணி, இனி மாட்டு இறைச்சி விற்க கூடாது என கூறி எச்சரித்து உள்ளார். இதைக்…

மேலும்...

தனியார் பள்ளிகளுக்கு கல்வி அமைச்சர் கடும் எச்சரிக்கை!

சென்னை (28 ஜூன் 2021): முழுக் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமென பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தனியார் பள்ளிகள் முழு கட்டணத்தை செலுத்துமாறு பெற்றோர்களை வற்புறுத்தக் கூடாது என பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. 75 சதவீதம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்றும் சீருடை, பேருந்து உட்பட இருந்து இதர கட்டணங்களை வசூலிக்கக் கூடாது என தெரிவித்திருந்தது. மேலும், கட்டணம்…

மேலும்...