ஜெலட்டின் குண்டு வெடித்து சிறுவன் பலி – திருச்சி அருகே பயங்கரம்!

திருச்சி (11 ஜூன் 2020): திருச்சி அருகே ஜெலட்டின் குச்சியை தின்பண்டம் என நினைத்து கடித்த சிறுவன் அது வெடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே அலகரைப் பகுதியைச் சேர்ந்தவர் பூபதி மகன் விஷ்னுதேவ்(6). பூபதியின் அண்ணன் கங்காதரன். இந்நிலையில் கங்காதரன் வீட்டுக்கு பூபதி மற்றும் விஷ்னுதேவ் ஆகியோர் சென்றுள்ளனர். அங்கு ஜெலட்டின் குச்சி இருந்ததை பார்த்த விஷ்னு தேவ் அதனை ஏதோ தின்பண்டம் என நினைத்து கடித்துள்ளார். அது வெடித்து வாய் சிதறி விஷ்னுதேவ் கீழே விழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

உடனே விஷ்னு தேவை தந்தை பூமதி மற்றும் விஷ்னுதேவின் பெரியப்பா கங்காதரன் ஆகியோர் தொட்டியம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியில் விஷ்னு தேவ் உயிரிழந்தார். இதை மறைத்து சிறுவனின் உடலை அடக்கம் செய்து விட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த முசிறி டிஎஸ்பி செந்தில்குமார், ஜெலட்டின் குச்சியை வைத்திருந்த சிறுவனின் பெரியப்பா கங்காதரன், அவருடைய உறவினர் மோகன்ராஜ் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையின்போது, பூபதியின் அண்ணன் கங்காதரன் ஆற்றில் மீன் பிடிப்பதற்காக பாறைகளை உடைக்கப் பயன்படுத்தும் ஜெலட்டின் குச்சிகளை வாங்கி பயன்படுத்தியுள்ளார். மீதமிருந்த ஒரு ஜெலட்டின்குச்சியை தனது வீட்டில் வைத்துள்ளார். அதனை விஷ்னுதேவ் தவறாக எடுத்து கடித்தால் வெடித்ததாக கூறப்படுகிறது. எனினும் ஜெலட்டின் குச்சிகளை பயன்படுத்துவதற்கு வேறு காரணங்கள் உள்ளனவா? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்விவகாரம் திருச்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹாட் நியூஸ்:

ஐபிஎல் போட்டியில் சென்னை வெற்றிபெற பாஜகவே காரணம் – புழுதியை கிளப்பும் அண்ணாமலை!

சென்னை (30 மே 2023): ஐபிஎல் போட்டியின் இறுதிப்போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணமே பாஜக தான் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...

பாடதிட்டங்களில் உள்ள நச்சுக் கருத்துகள் அகற்றப்படும் – கர்நாடக முதல்வர் சித்தராமையா திட்டவட்டம்!

பெங்களூரு (30 மே 2023): கர்நாடகாவின் நல்லிணக்கம் மற்றும் மதச்சார்பற்ற பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை, வெறுப்பு அரசியலை பொறுத்துக்கொள்ள முடியாது என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். தனது இல்ல அலுவலகமான...

உயிர் நண்பனின் இறுதிச் சடங்கில் தீயில் குதித்து நண்பர் தற்கொலை!

லக்னோ(28 மே 2023): புற்றுநோயால் உயிரிழந்த தனது நண்பரின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட 40 வயதுடைய நபர் ஒருவர் தீயில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் ஃபிரோசாபாத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது....