சண்டிகர் (10 செப் 2022): அரியானாவில் விநாயகர் சிலையை கரைக்கும்போது நீரில் மூழ்கி 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இந்த வருடம் பல்வேறு பகுதியிலும் விநாயகர் சதுர்த்தி வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதேபோன்று, விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கும் நிகழ்ச்சியும் பிரசித்தி பெற்றவை.
இந்நிலையில் இதன்படி, அரியானாவில் உள்ள சோனிபட் நகரில் மீமர்பூர் காட் பகுதியில் தந்தை மகன் இருவரும் விநாயகர் சிலையை கரைக்க சென்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்து உள்ளனர்.
அதேபோல மகேந்திரகார் நகரில் ஜகதோலி கிராமம் அருகே கனீனா-ரேவரி சாலையில் அமைந்த ஆற்றில் விநாயகர் சிலையை கரைக்க சென்ற 9 பேர் நீரில் அடித்து செல்லப்பட்டனர். அவர்களில் 8 பேர் நேற்றிரவு மீட்கப்பட்டனர். எனினும், 4 பேர் உயிரிழந்து விட்டனர். மற்ற 4 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவங்களுக்கு முதல்வர் மனோகர் லால் கட்டார் இரங்கல் தெரிவித்து உள்ளார்.