பல்வேறு மாநில இடைத்தேர்தலில் பாஜகவுக்கு பின்னடைவு!

Share this News:

கொல்கத்தா (02 நவ 2021): பல்வேறு மாநில இடைத்தேர்தலில் பாஜகவுக்கு கடும் பின்னடைவு ஏறப்பட்டுள்ளது

14 மாநிலங்களில் 3 மக்களவை மற்றும் 29 சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த 30-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. அதில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை முதல் நடைபெற்று வருகின்றன.

இநிலையில் பாரதிய ஜனதா கட்சி ஆளும் இமாச்சல பிரதேசத்தில் இதுவரை வெளியான முடிவுகளின் அடிப்படையில் மண்டி மக்களவை தொகுதி மற்றும் இடைத்தேர்தல் நடந்த 3 சட்டப்பேரவை தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியே முன்னிலை வகிக்கிறது.

இதேபோன்று பாஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி 2 சட்டசபை தொகுதிகளில் ஆதிக்கம் பெற்றுள்ளது. மேற்கு வங்கத்தில் 4 சட்டசபை தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் கட்சி வலுவான முன்னிலை பெற்றுள்ளது.

இந்த வெற்றி குறித்து பேசியுள்ள முதல்வர் மம்தா, வெறுப்பு அரசியலை நிராகரித்து, வளர்ச்சிக்கு மக்கள் முக்கியத்துவம் கொடுத்துள்ளதாக பெருமிதம் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க இடைத்தேர்தலில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர்கள் மிக அதிக வாக்கு வித்தியாசத்தில் பின்தங்கி இருக்கிறார்கள்.

பீகார் மாநிலம் ellenabad தொகுதியில் இந்திய தேசிய லோக் தலைவர் அபே சவுதாலா முன்னிலை வகிக்கிறார்.

இவர் வேளாண் சட்டங்களுக்கு எதிராக எம்.எல்.ஏ.பதவியை ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை மத்தியப்பிரதேசம் மற்றும் அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி சற்று முன்னிலை பெற்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Share this News:

Leave a Reply