காங்கிரஸுக்கு காந்தி குடும்பம் இல்லாதவர் தலைவராகிறார்!

Share this News:

புதுடெல்லி (20 செப் 2022): 20 ஆண்டுகளுக்கு பிறகு இந்த முறை காந்தி குடும்பத்தை சாராத ஒருவர் காங்கிரஸ் தலைவராக வருவார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கலோட் மற்றும் கேரள மாநிலம் எம்பி சசி தரூர் ஆகியோர் களத்தில் உள்ளனர். அசோக் கலோட் காந்தி குடும்பத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்ட தலைவர். கட்சியில் சீர்திருத்தம் கோரிய கோஷ்டியின் தலைவராக சசி தரூர் உள்ளார். காங்கிரஸின் ஜி23 குழுவின் முக்கிய தலைவர்களில் ஒருவர் சசி தரூர்.

காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் அக்டோபர் 17ஆம் தேதி நடைபெறவுள்ளது. ராகுல் தரப்பில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கலோட் போட்டியிடுகிறார். ராகுலை தலைவராக்கக் கோரி ராஜஸ்தான் காங்கிரஸ் ஒப்புதல் அளித்த தீர்மானத்தை முன்வைத்தவர் கலோட்..

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், தலைவர் பதவிக்கு யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம் என்றும், யாருடைய அனுமதிக்கும் காத்திருக்க வேண்டாம் என்றும் கூறினார். காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் மூன்று நாட்களில் ஏற்றுக்கொள்ளப்படும்.


Share this News:

Leave a Reply