ஜே.என்.யூ மாணவர்களின் போராட்டத்திற்கு கிடைத்த எதிர் பாராத ஆதரவு – வீடியோ!

புதுடெல்லி (08 ஜன 2020): ஜே.என்.யூ மாணவர்களின் போராட்டத்திற்கு நடிகை தீபிகா படுகோனே ஆதரவளித்துள்ளார்.

ஜேஎன்யுவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாணவர்கள் மீது நடத்தப்பட்ட முகமூடி அணிந்திருந்த மர்ம கும்பலின் கொடூரத் தாக்குதலைக் கண்டித்து ஜேஎன்யு முன்னாள் மாணவர்கள் பொதுக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர். இந்தக் கூட்டதத்தில் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஜேஎன்யு முன்னாள் மாணவர்கள் சீதாராம் யெச்சூரி, கண்ணையா குமார், டி. ராஜா மற்றும் யோகேந்திர யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதுதவிர பாலிவுட் நடிகை தீபிகா படுகோனும் ஜேஎன்யு மாணவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இதில் பங்கேற்றார். இந்தத் தாக்குதலில் காயமடைந்த ஜேஎன்யு மாணவர் சங்கத் தலைவர் அய்ஷி கோஷையும் அவர் சந்தித்தார்.

ஹாட் நியூஸ்:

அபுதாபியில் திறக்கப்பட்டுள்ள புதிய தீம் பார்க் !

அபுதாபி (25 மே 2023): அபுதாபியில் புதிய தீம் பார்க் 'சீ வேல்ட் அபுதாபி' நேற்று முன் தினம் திறக்கப்பட்டது. பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தும் மிகப்பெரிய தீம் பார்க் நேற்று முன் தினம் தொடங்கப்பட்டது...

புதிய நாடாளுமன்றம் திறப்பு – ஒன்றிய அரசு மீது ராகுல் காந்தி காட்டம்!

புதுடெல்லி (25 மே 2023): புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை ஜனாதிபதி முர்முவைக் கொண்டு திறக்காமல், பிரதமர் மோடியைக் கொண்டு திறப்பதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். புதிய நாடாளுமன்றக்...

உயிர் நண்பனின் இறுதிச் சடங்கில் தீயில் குதித்து நண்பர் தற்கொலை!

லக்னோ(28 மே 2023): புற்றுநோயால் உயிரிழந்த தனது நண்பரின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட 40 வயதுடைய நபர் ஒருவர் தீயில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் ஃபிரோசாபாத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது....