பெங்களூரு (06 ஏப் 2022): கர்நாடகாவில் முஸ்லிம் பழ வியாபாரிகளை புறக்கணிக்க வேண்டும் என்று இந்துக்களுக்கு இந்துத்துவாவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
கர்நாடகாவில் இந்துத்துவாவினரின் அடாவடி எல்லை மீறி சென்றுகொண்டுள்ளது. ஹிஜாப்களுக்கு எதிரான பிரச்சாரங்கள், கோவில் கண்காட்சிகளில் முஸ்லிம் வியாபாரிகள் புறக்கணிப்பு, ஹலால் இறைச்சி, மசூதிகளில் ஒலிபெருக்கிகள் பயன்படுத்துதலுக்கு எதிர்ப்பு என கூக்குரல் இட்டு வரும் இந்துத்துவாவினர், இப்போது முஸ்லிம் பழ வியாபாரிகளைக் குறிவைத்து, மொத்த பழச் சந்தையில் இந்துக்கள் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்று கோரியுள்ளது.
கர்நாடகாவில் உள்ள இந்து ஜனஜக்ருதி சமிதியின் ஒருங்கிணைப்பாளர் சந்துரு மோகர் ட்விட்டரில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார், அதில், பெரும்பாலான பழ வியாபாரங்கள் முஸ்லிம்களால் செய்யப்படுவதாகக் கூறியுள்ள அவர், இந்து விற்பனையாளர்களிடமிருந்து பழங்களை வாங்குமாறு இந்துக்களை வலியுறுத்தியுள்ளார்.
மேலும் பழ வியாபாரத்தில் முஸ்லிம்களின் ஏகபோகத்தை முடிவுக்கு கொண்டு வர அனைத்து இந்துக்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன். இந்து விற்பனையாளர்களிடமிருந்து மட்டுமே பழங்களை வாங்குமாறு நான் அவர்களை கேட்டுக்கொள்கிறேன், ”என்று மோகர் கூறினார்.
Right-wing organisations in #Karnataka are now calling for boycott of #Muslim fruit vendors. #Hindujanajagruti has called for #Hindus to set up more fruit shops to break the monopoly of Muslim traders in fruit business. pic.twitter.com/Mp9KnE6eD5
— Imran Khan (@KeypadGuerilla) April 5, 2022
இந்துத்துவா அமைப்பான ஸ்ரீராம சேனையின் சித்தலிங்க சுவாமிகளும் முஸ்லிம் பழ வியாபாரிகளை இந்துக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்..
“முஸ்லிம்களை வியாபாரம் செய்ய வேண்டாம் என்று நாங்கள் கூறவில்லை;” அவர் மேலும் கூறினார், “சந்தை தொடர்பான நடவடிக்கைகளில் இந்து இளைஞர்கள் ஈடுபட வேண்டும் என்று மட்டுமே நாங்கள் கூறுகிறோம், முஸ்லிம்கள் விலைகளை ஆணையிட முடியாது.”
இருப்பினும், கோலார் மாவட்ட மாம்பழ உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் நீலட்டூர் சின்னப்ப ரெட்டி கூறுகையில் இந்துத்துவாவினரின் இந்த பிரச்சாரத்தால் முஸ்லிம்களின் பழ வியாபாரம் பாதிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
“இதுபோன்ற பிரச்சாரங்களை ஊக்குவிப்பதற்குப் பதிலாக, மாம்பழ உற்பத்தியாளர்களுக்கு சிறந்த விலை மற்றும் லாபகரமான விலைகளை வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்” என்று ரெட்டி கூறியுள்ளார்.
இத்தனை வருடங்களாக விவசாயிகளுக்கு சந்தை வசதிகளை முஸ்லிம்கள் வழங்கி வருவதால் சிறுபான்மை சமூகத்திற்கு எதிரான இத்தகைய பிரச்சாரம் வெற்றியடையாது என்றும் அவர் கூறினார்.