இந்தியாவில் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டியது – 339 பேர் பலி!

Share this News:

புதுடெல்லி (14 ஏப் 2020): இந்தியாவில் கொரோனா பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

உலகையே புரட்டிப் போட்டுள்ள கொரோனா வைரஸ் சீனாவில் தொடங்கி, 200 க்கும் அதிகமான உலக நாடுகளில் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இது இந்தியாவிலும் காட்டுத்தீ போல பரவி வருகிறது.

கொரோனா வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,363 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 1211 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 31 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. கொரோனாவால் இதுவரை 339 பேர் உயிரிழந்த நிலையில், 1036 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 2334 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 160 பேர் உயிரிழந்துள்ளனர். 217 பேர் குணமடைந்துள்ளனர். அடுத்த இடத்தில் 1510 பேருக்கு தொற்று பாதிப்புடன் டெல்லி 2ம் இடத்தில் உள்ளது. 28 பேர் உயிரிழந்துள்ளனர். 30 பேர் குணமடைந்துள்ளனர்.

நேற்று முன்தினம் வரை இரண்டாம் இடத்தில் இருந்த தமிழகம் நேற்று முதல் 3-ம் இடத்தில் உள்ளது.


Share this News:

Leave a Reply