இந்தியாவில் ஜனவரி மாதம் ஒமிக்ரான் வகை கொரோனா அதிகரிக்க வாய்ப்பு!
இந்தியாவில் வருகிற ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று அதிகரிக்கக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது நிலவி வரும் டெல்டா வகை கொரோனாவின் பரவல் வேகத்தைவிட, ஒமிக்ரான் திரிபு வேகமாக பரவக்கூடும் என்பது தற்போது வரை நாம் அறிந்த விசயம். இந்நிலையில் ‘ஒமிக்ரான் பாதிப்பின் தீவிரம், டெல்டாவைவிடவும் குறைவாகவே இருக்கும்’ என்று டெல்லியில் சுகாதாரத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மாதிரி ஆய்வுகளில் இது தெரியவந்துள்ளதாகவும் ஒமிக்ரான் பரவல் வேகமெடுத்தாலும், அதிக பாதிப்பை ஏற்படுத்தாது என்பதுடன் பெருந்தொற்று முடிவுக்கு வரும் சூழலும் உள்ளதால் அச்சப்படத் தேவையில்லை என்றும் அவர் கூறினார்.