மதம் மாற்றிய குற்றச்சாட்டில் முஸ்லிம் மதகுருக்கள் கைது!

Share this News:

புதுடெல்லி (22 ஜூன் 2021): இஸ்லாமிய மதத்திற்கு மாறியதாக முஸ்லிம் மதகுரு இருவரை டெல்லியில் உ.பி. போலீசார் சர்ச்சைக்குரிய மதமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் கைது கைது செய்துள்ளனர்

கைதான முப்தி காசி ஜஹாங்கிர் ஆலம் காசிமி, 52, மற்றும் உமர், 57, ஆகியோரால் நடத்தப்படும் இஸ்லாமிய தாவா மையத்தின் மூலம் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் பெரிய அளவிலான மாற்றங்கள் நடந்ததாக போலீசார் குற்றம் சாட்டுகின்றனர். இவர்களில் உமர் சில ஆண்டுகளுக்கு முன்பு இஸ்லாமிற்கு மாறியவர்.

பணம், வேலை அமைத்து கொடுத்தல் மற்றும் திருமணம் போன்ற இவர்களின் வாக்குறுதிகளால் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இஸ்லாத்தில்பால் ஈர்க்கப்பட்டனர் என்று போலீசார் இவர்கள் மீது குற்றம் சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து தெரிவித்த உத்தரபிரதேச ஏடிஜிபி பிரசாந்த் குமார் , அவர்களிடம் வெளிநாட்டு நிதியுதவி ஆவணங்கள் உட்பட இதிலிருந்து முக்கிய ஆதாரங்கள் எங்களுக்கு கிடைத்துள்ளன.” என்று தெரிவித்துள்ளார்.


Share this News:

Leave a Reply